1. Home
  2. ஆன்மீகம்

இந்த நாளில் வலம்புரி சங்கு வைத்து பூஜை செய்தால் கணவன் - மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்..!

1

ஆன்மீக ரீதியாகவும், இல்லறத்தில் நன்மை பெருக உதவும் என்ற ரீதியிலும் சில இயற்கை பொருட்களை பயன்படுத்துவார்கள் . அவற்றில் முதன்மை இடம் வகிப்பவை ருத்ராட்சம், சாலக்கிராமம் மற்றும் வலம்புரி சங்கு. 

ருத்ராட்சம் - சிவனுக்குரியது ; சாலக்கிராமம் - விஷ்ணுவிற்குரியது ; வலம்புரி சங்கு - லட்சுமிக்குரியது. வீட்டில் சில பொருட்கள் வைத்திருந்தால் மகாலட்சுமி அவ்விடத்தில் குடிபுகுவாள் என கூறப்படும். அவற்றில் முதன்மை பொருள் , இந்த வலம்புரி சங்கு.

மகாலட்சுமியின் பார்வை பட்டால் குப்பைமேட்டில் இருப்பவன் கூட பணக்காரன் ஆகிவிடுவான். 
ஆயிரம் சிப்பியானது ஒரு இடம்புரி சங்கு. ஆயிரம் இடம்புரி சங்கானது ஒரு வலம்புரி சங்கு. வலம்புரி சங்கை வீட்டில் வைத்தால், இழந்த செல்வத்தை  மீண்டும் பெறலாம்.

சித்ரா பவுர்ணமி, ஆனி மாத வளர்பிறை அஷ்டமி, ஆடி மாத பூர நட்சத்திரம், புரட்டாசி பவுர்ணமி போன்ற நாட்களில் வலம்புரி சங்கில் பால் வைத்து மகாலட்சுமிக்கு பூஜை செய்து வந்தால், கணவன் - மனைவி நல்ல ஆயுளுடன் இருப்பார்கள்.

தினமும் வலம்புரி சங்கில், நீர் மற்றும் துளசி போட்டு அதை தினமும் குடித்து வந்தால், ஆரோக்கியம் சிறக்கும்.
பஞ்சமி திதி நாளில் வலம்புரி சங்கில் தூய்மையான பசும்பால் ஊற்றி பூஜை செய்து வந்தால், குழந்தை இல்லாத கணவன் - மனைவிக்கு, புத்திர பாக்கியம் கிட்டும்.

பிறந்த குழந்தைக்கு வலம்புரி சங்கு மூலம் பால் ஊற்றினால், குழந்தை நல்ல ஆரோக்கியம் பெறும். மேலும், இதனால் குழந்தை மேல் யாருடைய கண் திருஷ்டியும் படாது என கூறப்படுகிறது.

செய்வாய் தோஷம் உள்ள நபர்கள் ,வலம்புரி சங்கில் பசும்பால் ஊற்றி, 27 செவ்வாய் கிழமைகள் அம்மனுக்கு பூஜை செய்து வந்தால் தோஷம் விலகும், திருமணம் கூடிய விரைவில் நடக்கும்.

 

வீட்டில், வாழையிலை அல்லது தட்டில், பச்சை அரிசி அல்லது நெல் வைத்து அதன் மீது வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்ய வேண்டும். 

வலம்புரி சங்கு வடக்கு அல்லது தெற்கு முகம் பார்த்து தான் வைக்க வேண்டும். வலம்புரி சங்கில் தண்ணீர் மற்றும் துளசி வைத்து பூஜை செய்வது சிறப்பு. வலம்புரி சங்கை வைத்து பூஜை செய்யும் போது மலர்கள், தங்கம் அல்லது பணம் வைத்தும் பூஜை செய்யலாம்

Trending News

Latest News

You May Like