1. Home
  2. ஆன்மீகம்

இன்று இப்படி செய்தால் அடமானமாக வைத்த நகைகள் நாள்பட்ட கடன்களை அடைக்க பணம் வரும்..!

1

வெள்ளிக்கிழமை என்றாலே அது அம்பிகை அல்லது பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். அதிலும் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை வழிபடுவது அனைத்து விதமான பணம் தொடர்பான பிரச்சனைகளையும் தீர்க்கும் என்பது ஐதீகம். அனைத்து வெள்ளிக்கிழமைகளும் மங்களகரமான நாள் என்றாலும் தை, ஆடி போன்ற சிறப்பான மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமை கூடுதல் விசேஷமானது. பெண் தெய்வத்திற்கு பூஜை, அபிஷேகம், நேர்த்திக்கடன் செலுத்த நினைப்பவர்கள் இந்த நாட்களில் மேற்கொள்ளலாம்.

வெள்ளிக்கிழமையை சுக்கிர வாரம் என்பார்கள். ஒவ்வொரு நாளும் நல்ல நேரம், ராகு காலம் என்று இருப்பது போல் ஹோரைகளும் உள்ளன. வெள்ளிக்கிழமை சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த நாள் என்பதால் இந்த நாளில் சுக்கிர ஹோரையில் மகாலட்சுமிக்கு சில குறிப்பிட்ட முறைகளில் வழிபாடு செய்தால் வீட்டில் செல்வம் சேரும். மலை அளவான கடன் பிரச்சனைகள் கூட தீரும். வராத பணம், அடமானத்தில் இருக்கும் நகைகள் வீடு வந்து சேரும்.

வெள்ளிக்கிழமையன்று மூன்று முறை சுக்கிர ஹோரை வரும். காலை 6 முதல் 7, பகல் 1 முதல் 2, இரவு 8 முதல் 9 ஆகிய காலங்கள் சுக்கிர ஹோரை நேரங்களாகும். இந்த நேரத்தில் மகாலட்சுமிக்கு உரிய வழிபாட்டை மேற்கொண்டால், சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமையில் அதிகாலையில் எழுந்து, நீராடி, வீட்டின் பூஜை அறையில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் மலர்கள் அணிவிக்க வேண்டும். மகாலட்சுமியின் படத்தின் முன் வெற்றிலையின் மீது பச்சரிசி பரப்பு, அதன் மீது அகல் விளக்கை வைத்து நெய் தீபம் ஏற்ற வேண்டும். இதே போன்று, சிறிய வாழை இலையின் மீது கல் உப்பை பரப்பி, அதன் மீது அகல் வைத்து நெய் தீபம் ஏற்றலாம். முடியாதவர்கள் குத்துவிளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய்யால் ஐந்து முகங்களை ஏற்றி, நமது வேண்டுதலை கூறி வழி பட வேண்டும்.

மகாலட்சுமியின் படத்திற்கு தாமரை மலர்கள் சூட்ட வேண்டும். நைவேத்தியமாக ஏதாவது ஒரு இனிப்பு செய்து படைக்கலாம். வெள்ளிகிழமை சுக்கிர ஹோரையில் ஒரு கண்ணாடி கிண்ணம் அல்லது அகண்ட அகலில் கல் உப்பினை முக்கால் பங்கிற்கு நிரப்ப வேண்டும். அதன் மீது 3 பத்து ரூபாய் போட்டு மற்றும் 3 ஒரு ரூபாய் நாணயம் வைத்து, மகாலட்சுமியிடம் நம்முடைய வேண்டுதலை சொல்லி வழிபட வேண்டும். அன்று முழுவதும் அதை அப்படியே வைத்து விட வேண்டும். மறுநாள், அந்த 33 ரூபாய் பணத்தை எடுத்து பீரோவில் தனியாக வைத்து விடுங்கள். அந்த உப்பினை கால்படாத இடத்திலோ அல்லது ஓடும் தண்ணீரிலோ விட்டு விட வேண்டும்.

இதே போல் தொடர்ந்து 6 வாரங்கள் புதிய உப்பு, தனித்தனியாக 33 ரூபாய் வைத்து வழிபட வேண்டும். ஆறாவது வாரம் தனியாக 6 முறை எடுத்து வைத்த 33 ரூபாய் பணத்தை எடுத்து அருகில் உள்ள அம்மன் கோவிலில் உண்டியலில் சேர்த்து விட வேண்டும். இப்படி செய்தால் அடமானமாக வைத்த நகைகள், நாள்பட்ட கடன்களை அடைக்க பணம் வரும்.

Trending News

Latest News

You May Like