1. Home
  2. ஆன்மீகம்

ஒவ்வொரு ராசியினர் எப்படிப்பட்டவர் என்று தெரிந்து கொள்ளுங்கள்!

1

*மேஷ ராசிகாரர்கள் தெய்வபக்தி மிக்கவர்கள், முன்னோர்கள் வழிபாட்டு முறையை பின்பற்றுவார்கள். சுவாமி விக்ரத்தின் அழகை தீப ஆராத்தியில் பார்த்து மகிழுவார்கள். தன்னம்பிக்கையாளர். கடவுளின் அன்புக்கு பாத்திரமானவர்கள்.

* ரிஷப ராசிகாரர்கள் கடவுளிடம் நிறைய வேண்டுதல் வைப்பவர்கள். எனக்கு இது செய்தால் உனக்கு இது செய்கிறேன் என டீல் பேசுபவர்கள். தொழில் முன்னேற்றத்துக்காக இறைவழிபாடு செய்வார்கள்.

* மிதுனம் ராசிகாரர்கள் தனது ஒவ்வொரு செயலும் இறைவனால் தான் நடந்தது என மனதார நம்புவார்கள். கோவிலில் பக்தர்கள் போடும் சரண கோசம் மற்றும் மந்திரத்தை கேட்டு மகிழ்ந்தவாறே இறைவழிபாடு செய்பவர்கள்.

* கடகம் ராசிகாரர்கள் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என இருப்பவர்கள். இறை ஸ்தலங்களுக்கு சென்று நீராட விரும்புவார்கள். இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆசை கொள்வார்கள்.

* சிம்ம ராசிகாரர்கள் தனது இஷ்ட தெய்வத்தை தவறாமல் வழிபடுபவர்கள். குரு உபதேசத்துடன் தெய்வத்தை தனது காதலனாகவோ, நண்பனாகவோ பாவித்து (மீரா – கண்ணன், ஆண்டாள் – பெருமாள், குசேலன் – கண்ணன்) வழிபடுபவர்கள்.

* கன்னி ராசிகாரர்கள் தாய் தந்தையரை தெய்வமாக வழிபடக்கூடியவர்கள், தனக்கு ஒரு பிரச்சனை என்றால் தெய்வ வழிபாடு செய்வார்கள். செல்வ மேன்மைக்காக தெய்வமாக வழிபடக்கூடியவர்கள்.

* துலாம் ராசிகாரர்கள் இறைவனின் வளாகத்தை சுற்றி வருவதில் ப்ரியம் உள்ளவர்கள். இறைவன் மூலம் ஆதாயம் பெறுபவர்கள். கடவுள் பற்றிய விசயத்தை மற்றவருக்கு சொல்லும் குணமுடையவர்கள்.

* விருச்சிக ராசிகாரர்கள் இறை ஸ்தலங்களுக்கு சென்று நீராட விரும்புவார்கள். தாயாரை தெய்வமாக வழிபடக்கூடியவர்கள், பெண்தெய்வத்தை அதிகம் வழிபடுவார்கள். இறைவனுக்கு அபிஷேகம் செய்ய ஆசை கொள்வார்கள்.

* தனுசு ராசிகாரர்கள் நான் கடவுள் என்று சொல்லும் அளவுக்கு இருப்பார்கள். தன்னம்பிக்கையாளர். தர்ம ஒழுக்க நெறியோடு இறைவனை காண மற்றவருக்கு உபதேசம் செய்பவர்கள். இயற்கை பஞ்சபூதங்களில் இறைவனை காண்பார்கள்.

* மகர ராசிகாரர்கள் கடவுளுக்காக எதையும் செய்பவர்கள். கடவுள் தான் நினைப்பதை செய்வார் என்று மனதார நம்புபவர்கள். இறை காரியங்கள் நிறைய செய்பவர்கள்.

* கும்ப ராசிகாரர்கள் கடவுள் பற்றிய விசயத்தை மற்றவருக்கு சொல்லும் குணமுடையவர்கள். இறைவன் மூலம் ஆதாயம் பெறுபவர்கள். புராண இதிகாச காலசபங்களை கேட்டு மகிழ்வார்கள்.

* மீன ராசிகாரர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என இருப்பவர்கள். பொது சேவை மூலம் இறைவனை காணபார்கள். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்பது போல் இறைவனின் பாசத்துக்குரியவர்கள்.

Trending News

Latest News

You May Like