1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? அறுகம்புல் பொடியை சாம்பிராணியில் சேர்த்து தூபமிடும் போது...

1

சாம்பிராணி என்பது வெறும் நறுமண புகை கிடையாது. இதனை வீட்டில் போடுவதால் ஒரு ஹோமம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும்.சாம்பிராணி போடுவதால் மிக முக்கியமாக நமக்கும், நம் வீட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி, நம் மீதான பிறரின் பொறாமை, திருஷ்டி உள்ளிட்டவை நீங்கும்.

சரி சாம்பிராணி போடும் போது அதில் எதை எல்லாம் சேர்த்து தூபமிட்டால் என்னென்ன நன்மை உண்டாகும் என்பதைப் பார்ப்போம்.
சாம்பிராணியுடன் அகில் சேர்த்து தூபமிட்டால் குழந்தைப் பேறு உண்டாகும்.

தூதுவளை சேர்த்து தூபமிடும் போதும் வீட்டில் இறைவனின் அருள் நிலைத்து நிறைந்திருக்கும்.

சாம்பிராணியில் சந்தனத்தை சேர்த்து தூபமிட்டால் மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும்.

அறுகம்புல் பொடியை சாம்பிராணியில் சேர்த்து தூபமிடும் போது சகல தோஷங்களும் நீங்கும்.

சாம்பிராணியுடன் வெட்டிவேரை போட்டு தூபமிட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும்.

வேப்பிலையை சாம்பிராணியில் போட்டு தூபமிட்டால் பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

சாம்பிராணியுடன் வெண்கடுகை போட்டு தூபமிடுவதால் எதிரிகளும், பகைமையும் விலகும்.

வெண்குங்கிலிய பொடியை சாம்பிராணியில் சேர்த்து தூபமிடுவதால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் வெளியேறும்.

ஜவ்வாதி போட்டு சாம்பிராணி தூபமிட்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

வேப்பம்பட்டையை சாம்பிராணியில் போட்டு தூபமிடுவதால் பில்லி. சூனியம், ஏவல் உள்ளிட்ட துஷ்ட சக்திகள் விலகும்.

துரோகிகள் நீங்க வேண்டுமெனில் சாம்பிராணியுடன் நாய் கடுகை சேர்த்து தூபமிடுவதால் நன்மை ஏற்படும்.

செயல்களில் வெற்றி உண்டாகவும், திருமண தடை நீங்க சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிடுவது சிறந்தது.
கரிசலாங்கண்ணி பொடியை சாம்பிராணியில் தூவி தூபமிட்டால் மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

நன்னாரி வேர் பொடியை சாம்பிராணியுடன் சேர்த்து தூபமிட்டால் சகல ஐஸ்வர்யங்கள் உண்டாகும்.
சாம்பிராணியுடன் மருதாணி இலைப் பொடியை சேர்த்து தூபமிடும் போது மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like