1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? வறுமை நீங்க வீட்டில் வைத்திருக்க கூடாத சில பொருட்கள்..!

1

வீட்டை நாம் எப்படி பராமரித்து சுத்தமாகவும், அழகாகவும் வைத்திருக்கிறோமோ அதை வைத்து தான் நம் எண்ணங்களும் வாழ்க்கையும் அமையும். வீடு தூய்மையாக இருந்தால் மனதில் குழப்பங்கள், தேவையில்லாத சிந்தனைகள் ஏற்படாது. வீட்டில் சில தேவையற்ற பொருட்களை வைத்திருப்பதின் மூலமாகவும் எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். வீட்டில் எதை வைத்திருக்கலாம், எதை வைத்திருக்கக் கூடாது என்பதை இப்போது பார்க்கலாம்.

நேர்மறை எண்ணங்கள்
ஒரு சில இடங்களுக்கு நாம் செல்லும்போது நல்ல மனமுள்ள வாசனை மிகுந்த பத்திகள் ,அறைகளுக்கு பயன்படுத்தும் வாசனை திரவியங்கள் போன்றவற்றை பயன்படுத்தியிருப்பதை கவனித்திருப்பீர்கள்.

அத்தகைய வாசனைமிக்க பொருட்கள் இயல்பாகவே நல்ல எண்ணங்களை அதிகரிக்க செய்யும், இத்தகைய வாசனை எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க செய்யும் ஆற்றல் கொண்டது.

வீட்டின் தலைவாசலுக்கு முன்பு தினமும் தண்ணீர் தெளித்து துடைத்து, கோலமிடுவதும், மாலை நேரங்களில் தீபம் ஏற்றி வைப்பதும் நேர்மறை சக்திகளை எளிதாக வீட்டுக்குள் வரவழைக்கும். காலையில் எழுந்து குளித்த பின்னர் நறுமணம் தரும் ஊதுபத்திகளை சமையல் அறை மற்றும் ஹால் பகுதிகளில் ஏற்றி வைக்கலாம்.

வீட்டிற்குள் இருக்கும்போது காலணிகள் அணியாமல் நடப்பது நல்லது. தரையில் பாதம் பதியும்போது, எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக் கொள்வதால், உடலில் ‘ஆற்றல் சமநிலை’ உண்டாகும். வெளியே சென்று விட்டு வீட்டுக்குள் நுழையும் முன்பு, காலணிகளை தலை வாசலுக்கு வெளிப்புறமாக விட வேண்டும். கை, கால்களை நன்றாகக் கழுவிய பின்னர் வீட்டிற்குள் செல்வது நல்லது.

வீட்டில் வைத்திருக்க கூடாத பொருட்கள்
வீடு, அலுவலகங்களில் எதிர்மறை ஆற்றல்களை தூண்டி விடக்கூடிய தேவையில்லாத அதாவது வீட்டில் வைத்திருக்கக்கூடாத பொருட்கள் என்ன என்பதை பார்க்கலாம். வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக இருந்தால் அங்கு கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள், கோபம் போன்றவை அடிக்கடி ஏற்பட்டு கொண்டே இருக்கும்.

அவ்வாறு எதிர்மறை எண்ணங்களையும், ஆற்றல்களையும் ஏற்படுத்தக்கூடியதாக உடைந்த கண்ணாடிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மண் பாண்டங்கள், காய்ந்த செடிகள் அல்லது பட்டுப்போன மரங்கள், ஓடாத கடிகாரம், துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகள், உபயோகம் இல்லாத பழைய துணிகள், போன்றவற்றை கண்டிப்பாக வைத்திருக்கக்கூடாது. அதனால், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தி விடவேண்டும்.

ஏன் இவற்றை எல்லாம் நம் வீட்டில் வைத்திருக்க கூடாத என்றால் உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடி, முகம் பார்க்கமுடியாத வகையில் இரசம் போன கண்ணாடிகள், உடைந்த கண்ணாடி வளையல்கள், விரிசல் விழுந்த கண்ணாடிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த மண் பாண்டங்கள் போன்றவைகள் வீட்டில் இருந்தால் எதிர்மறை ஆற்றல் பெருகும். வருமானத்தில் தடையும், சிக்கல்களும் வந்து கொண்டே இருக்கும்.

காய்ந்த செடிகள் இருந்தால் அது வீட்டை சுற்றிலும் எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். அலுவலகம், வீடு, தோட்டம், பண்ணைகளில் பட்டுப்போன மரங்கள் இருந்தால் வறுமையை உண்டாக்கும்.

ஓடாத கடிகாரம் எதிர்மறை ஆற்றல்களை ஏற்படுத்தும். அதனால் கடன் பிரச்சனைகளும், சண்டை சச்சரவுகளும் ஏற்படும். துருப்பிடித்த இரும்பு பொருட்கள், கிழிந்த ஆடைகள், துணிகள் போன்றவைகள் இருந்தால் வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை உருவாக்கும்.

இது போன்ற காரணங்களினால் அவைகளை உடனடியாக அப்புறப்படுத்தி விடுவது நல்லது. இவ்வகையான தேவையற்ற பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வீட்டினை சுத்தமாகவும், அழகாவும், பராமரித்து வைத்திருந்தால் வீட்டில் ஆரோக்கியமும், சகல ஐஸ்வர்யங்களும் என்றும் நிறைந்திருக்கும்.

Trending News

Latest News

You May Like