1. Home
  2. ஆன்மீகம்

இது தெரியுமா ? எறும்புகள் வீட்டின் தெற்கு திசையில் இருந்து வந்தால்...

1

வீடுகளில் சாதாரணமாக பல விதமான எறும்புகள் கூட்டம் கூட்டமாகவும், தனியாகவும் தரைகளிலும், சுவர்களிலும் ஊர்ந்து செல்வது கண்டிருப்போம். எறும்பு தானே என சாதாரணமாக கடந்து சென்றிருப்போம். சில சமயங்களில் அதை சுத்தம் செய்து, அகற்றி இருப்போம். ஆனால் வீடுகளில் இப்படி எறும்புகள் வருவதற்கும் கூட ஆன்மிக ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

பல வகையான எறும்புகள் நம்முடைய வீடுகளில் இருக்கும். இவற்றில் சில எறும்புகள் வந்தால் நல்லதும், சில எறும்புகள் வந்தால் கெட்டதும் நடப்பதற்கான அறிகுறியாகும். வீட்டில் அமைதி, சந்தோஷம், இழப்பு, துன்பம் போன்ற பல விதமான விஷயங்கள் நடப்பதற்கும் எறும்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. சிவப்பு நிற எறும்புகள் வீட்டிற்குள் வருவது கெட்டதாக கருதப்படுகிறது. அதே சமயம் கருப்பு நிற எறும்புகள் வந்தால் அதில் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். எந்த எறும்பு வந்தால் வீட்டில் என்ன பலன் கிடைக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் கரும்பு எறும்புகள் சுற்றி வந்தால் அது நல்ல அறிகுறியாகும். உங்கள் வீட்டை தேடி செல்வம் வரப் போவதாக அர்த்தம். உங்களுக்கு அதிர்ஷ்டம் வர போவதற்கான அறிகுறியாகும். உங்களுடைய திட்டமிட்டு செயல்பட்டால் உங்களின் நிதி நிலை உயர்வதற்கு இருக்கும் தடைகள் விலகி விடும். கரும்பு எறும்புகள் அதிர்ஷ்டம் மற்றும் அமைதியின் அடையாளமாக கருதப்படுகிறது. அதனால் கருப்பு எறும்பு உங்கள் வீட்டிற்குள் உலாவிக் கொண்டிருந்தால் அதிர்ஷ்டமும், அமைதியும், மகிழ்ச்சியுமான சூழல் உங்கள் குடும்பத்தில் வரப் போகிறது என்று அர்த்தம்.

சிவப்பு எறும்புகள் உங்கள் வீட்டிற்குள் இருந்தால் பண இழப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாகும். கருப்பு எறும்புகளுக்கு நேர் எதிரான பலனை தரக் கூடியவை. இதனால் சிவப்பு எறும்புகளால் துரதிர்ஷ்டம் வர வாய்ப்புள்ளது.

எறும்புகள் வீட்டின் மேற்கு திசையில் இருந்து வந்தால் அது மிகவும் நல்ல சகுனமாகும். நீங்கள் வெளிநாடு பயணம் செல்லப் போவதை இது குறிக்கிறது. நீங்கள் வெளிநாடு செல்ல முயற்சி செய்து கொண்டிருந்தால் அதற்கான வாய்ப்பு உங்களை தேடி வரப் போகிறது என்று அர்த்தம். அல்லது வெளிநாடு செல்வதற்கு திட்டமிடுவதற்கான சரியான நேரம் இது என்று எடுத்துக் கொள்ளலாம்.

எறும்புகள் உங்கள் வீட்டில் கிழக்கு திசையில் இருந்து வருவதாக இருந்தால் அது துரதிஷ்டமானதாகும். இப்படி நடந்து விரைவில் நீங்கள் கெட்ட செய்தியை கேட்க போகிறீர்கள் என்று அர்த்தம். எறும்புகள் நிதி நிலையுடன் தொடர்புடையாக கருதப்படுவதால் அந்த கெட்ட செய்தி செல்வம், பணம் தொடர்பானதாக இருக்கலாம்.

எறும்புகள் வடக்கு திசையில் இருந்து வந்தால் அது மகிழ்ச்சி உங்கள் வீடு தேடி வரப் போவதற்கான அறிகுறியாகும். உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய போகிறது அல்லது உங்கள் வாழ்வில் விரைவில் மகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடக்கப் போவதை குறிப்பதாகும். இதனால் உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விஷயங்களுக்காக தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.

எறும்புகள் வீட்டின் தெற்கு திசையில் இருந்து வந்தால் உங்களுக்கு லாபம் கிடைக்க போவதாக அர்த்தம். எறும்புகள் சுவற்றில் கீழிருந்து மேல் நோக்கி சென்றால் உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியும் முன்னேற்றமும் வரப் போகிறது என்று அர்த்தம். அதுவே மேலிருந்து கீழ் நோக்கி சென்றால் சில இழப்புகளை நீங்கள் சந்திக்க போகிறீர்கள் என்று அர்த்தம்.

கருப்பு எறும்புகள் உங்கள் வீட்டில் அரிசி வைக்கும் பாத்திரம் அல்லது டப்பாவில் ஊறிக் கொண்டிருந்தால் இது மிகவும் நல்ல அறிகுறியாகும். உங்களை தேடி பணம் வரப் போகிறது என்பதை குறிப்பதாகம். இது உங்களின் தொழிலில் லாபத்தையும் முன்னேற்றத்தையும் பெறப் போவதை குறிப்பதாகும்.

Trending News

Latest News

You May Like