இதை தெரிஞ்சிக்கோங்க..? நதிகளில் எப்படி ஸ்நானம் செய்ய வேண்டும்?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/7d63ebc8f5a941534c81c80c97eea3d1.webp?width=836&height=470&resizemode=4)
புனித நீராடும் போது, ஒரே ஆடையை மட்டும் உடுத்தி நீராடக்கூடாது. இடுப்பில் உடுத்தியிருக்கும் ஆடையின் மீது மற்றொரு ஆடையை சுற்றி கட்டிக்கொள்ள வேண்டும்.
நதியில் மூழ்குவதற்கு முன் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி, இடுப்பு வரை தண்ணீரில் நனையும்படி நிற்கவேண்டும். மூன்றுமுறை சிறிதளவு தீர்த்தத்தை ,உள்ளங்கையில் எடுத்து, மஹா விஷ்ணுவின் நாமங்களை சொல்லி குடிக்க வேண்டும்.
பின், தலையில் சிறிதளவு தெளித்து கொள்ள வேண்டும். முதல்முறை மூழ்கும்போது, கண்கள், காதுகள், மூக்குத்துளைகளை கைகளால் மூடிக்கொண்டு மூழ்கவேண்டும்.
ஈர ஆடையுடன் மூழ்கக்கூடாது. இரவில், நதிகளின் ஸ்நானம் செய்ய கூடாது. சிவராத்திரி, சந்திர கிரகணம் ஆகிய நாட்களில் மட்டும், இரவு நீராடலாம்.