1. Home
  2. ஆன்மீகம்

ஆனி பெளர்ணமி : உங்கள் காதல் கைக்கூட இன்று விரதமிருந்தால்... உங்கள் காதல் கைகூடும்..!

1

பெளர்ணமி தினத்தில் எந்த தெய்வத்தை நினைத்து விரதமிருந்து வழிபட்டாலும் நாம் எதை நினைத்து வழிபடுகிறோமோ அது நிறைவேறும்.

அதன் காரணமாக தான் ஒவ்வொரு பெளர்ணமி தினத்தின் போது மக்கள் மலையடிவாரத்தில் உள்ள இறைவனை வணங்கி கிரிவலம் செல்லுதலும், நீர்நிலைகளில் சென்று வழிபடுதலும், கூட்டாஞ்சோறு உண்டு மகிழ்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த தினத்தில் விரதமிருந்து இறைவனை வழிபடுதலும், இரவில் சந்திர தரிசனம் செய்தலும் மிக அற்புதமான பலனைத் தரவல்லது.

அறிவியல் ரீதியாக பார்த்தால், சூரியனின் ஒளியை உட்கிரகித்து ஒளிரக்கூடியது சந்திரன். மேலும் பூமியை சந்திரனும், சூரியனை பூமியும் சுற்று வருகின்றது.பூமி தன்னை தானே சுற்றுதலும், பூமி சூரியனை சுற்றுதலால் பெளர்ணமி, அமாவாசை ஏற்படுகிறது.
சூரியனின் ஒளியை முழுமையாக பெறக்கூடிய நாள் பெளர்ணமி என்றும், சூரிய ஒளி சந்திரனை அடையாத நாள் அமாவாசை ஆகும்.

தட்சனுக்கு 27 மகள்கள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் சந்திரனுக்கு திருமணம் செய்து வைத்தார். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு மனைவியின் வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் ரோகிணியிடம் மட்டும் அதிக பாசத்துடன் நடந்து கொண்டார். மற்ற மனைவியரை புறக்கணித்தார்.அவர்களின் வருத்தத்தை தட்சனிண்ட தெரிவிக்க, தட்சன் சந்திரனிடம், எல்லா மனைவியிடமும் அன்பாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அப்படி நடந்துகொள்ளாமல் ரோகிணியிடம் அதிக அன்பு காட்டினார்.

இதனால் கோபமடைந்த தட்சன் சந்திரனின் ஒளி மங்கட்டும் என சாபத்தை அளித்தார்.அதன் பின்னர் சிவ பெருமானிடம் சந்திரன் சரணடைந்தார். இருப்பினும், சந்திரனின் முழு ஒளியைப் பெற முடியாது, தேய்ந்து வளரும் படி ஆணையிட்டார்.
அதன் காரணமாக சந்திரன் மாதத்தில் 15 நாள் தேய்ந்து அமாவாசையும், வளர்ந்து பெளர்ணமியும் ஏற்படுகிறது.

பெளர்ணமி தினத்தில் பொதுவாக அம்மன் வழிபாடு மேற்கொள்வது மிக நல்ல பலனைத் தரும். அன்று சிறப்பு பூஜையும், அன்னதானமும் செய்யப்படும்.பெளர்ணமி தினத்தில் முறைப்படி பகல் முழுவதும் உண்ணா விரதமிருந்து, மாலையில் கோயிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு, இரவில் சந்திர தரிசனம் செய்து பின் விரதத்தை நிறைவு செய்வது நல்லது.

ஆனி மாத பெளர்ணமி மூல நட்சத்திரத்தில் வருவதால், ஆனி பெளர்ணமி அன்று இறைவனுக்கு முக்கனிகள் படைத்து வழிபடுவது நல்லது.இன்றைய தினம் வீட்டில் விளக்கேற்றி வழிபடுதலும், உங்களுக்கு விருப்புமான இறைவனுக்குரிய மந்திரங்கள், புராண கதைகளை படிப்பது நல்லது. ஆனி பெளர்ணமியில் விரதமிருந்து கண்ணபிரானை வழிபடுவதால் காதல் கைகூடும்.

Trending News

Latest News

You May Like