1. Home
  2. ஆரோக்கியம்

பளிச் முகம் வேணுமா.. இயற்கை இருக்க செயற்கை எதுக்கு...

பளிச் முகம் வேணுமா.. இயற்கை இருக்க செயற்கை எதுக்கு...

முகம் பளிச்சுன்னு இருக்கணும் என்னவெல்லாம் செய்யலாம் என்று யார் சொன்னாலும் முதல் வேலையாக அதை செய்தே பார்த்துவிடும் பழக் கம் இளம் பெண்களுக்கு உண்டு. அழகாய் இருப்பதையும் அழகாய் இருக்கிறீர்கள் என்று பிறர் சொல்வதையும் விரும்புகிறவர்கள் பெண்கள்…அத்தகைய அழகுக்கு மெருகூட்ட இயற்கை பொருள்கள் இருக்கும் போது செயற்கை எதற்கு...

பார்க்கும் சொல்லும் கேட்கும் க்ரீம்கள் அனைத்தையும் வாங்கி முகத்தில் தடவி இருக்கும் இயற்கை அழகையும் கெடுத்துக்கொண்ட பிறகு எந்த சிகிச்சை செய்தாலும் அழகை மீட்டு கொண்டு வர முடியாது என்பதே உண்மை. எனினும் சில குறிப்புகள் உண்டு. அவை அழகோடு இழந்த ஆரோக்யத்தையும் மீட்டு கொண்டு வரும்.

அன்றாடம் வெளியில் சென்று வந்ததும் வெளியிலிருக்கும் தூசு, மாசு, அழுக்குகள் முகத்தில் சருமத்தில் ஒட்டிக்கொள்ளும். அவை கண்ணுக்குத் தெரியாமல் சரும துவாரங்களில் அடைத்துக்கொள்ளும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரம் ஒருமுறையேனும் நீக்குவது நல்லது.
ப்ளீச் செய்ய எந்த க்ரீமையும் நாடவேண்டாம். இயற்கையான பொருள்களைக் கொண்டேமுகத்துக்கு ப்ளீச் செய்யலாம்.

பசும்பாலை நன்றாக காய்ச்சும் போது வரும் பாலாடையில் மஞ்சள்தூளைக் கலந்து நன்றாகக் குழைக்கவும். பிறகு முகத்தைக் கழுவி குழைத் துள்ள மஞ்சள் பாலேடை முகத்தில் கீழிருந்து மேலாக தேய்த்து விரல்களால் மசாஜ் செய்து பத்துநிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவலாம். தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவடையும்.

வீட்டிலேயே அரைத்த கோதுமை மாவை (கடையில் அல்லது ரேஷனில் வாங்கி அரைத்த கோதுமை) சல்லடையில் சலித்தால் எஞ்சியிருக்கும் பொருள் தவிடு போல் கிடைக்கும் இதனுடன் சர்க்கரை கலந்தால் ஸ்க்ரப் போல் வரும். இதை முகத்தில், மூக்கின் நுனியில் இருக்கும் கொழுப்பு களால் உண்டாகும் கரும்புள்ளிகள் போன்றவற்றின் மீது அழுத்தி தேய்த்தால் அவை வேரோடு வெளியேறும் மூக்கு அழகாக இருக்கும்.

பப்பாளி, தக்காளி, ஆரஞ்சு, வாழைப்பழங்களைக் கூழாக்கி பாலேடைக் கலந்தும் முகத்துக்கு ப்ளீச் செய்யலாம். ப்ளீச் செய்வதற்கு முன்பு முகத் தைக் குளிர்ந்த நீரில் கழுவவும். ப்ளீச் செய்யும் போது முகத்துக்கு மட்டும் போடாமல் கழுத்துக்கும் போடுவது நல்லது.15 நாட்களுக்கு ஒருமுறை ஆவி பிடித்தல் சருமத்துக்கு நல்லது. சூடான நீரை அகலமான பாத்திரத்தில் ஊற்றி ஒரு போர்வைக்குள் முகத்தையும் வெந்நீர் பாத்திரத்தையும் மூடி வெளிவரும் ஆவியை முகத்தின் மீது நன்றாக படும்படு காண்பிக்க வேண்டும். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். மெல் லிய துணியால் அழுந்த துடைத்ததும் மூக்கில் இருக்கும் அழுக்குகள் முற்றிலும் வெளியேறும்.

முகப்பருக்கள், முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள், எண்ணெய் பசையுள்ள சருமம், வறண்ட சருமம் அனைத்துக்கும் ஏற்ற சிறந்த சிகிச்சை முறை ஆவி பிடிப்பது மட்டும்தான். மாதம் இருமுறை ஆவி பிடித்தால் முகத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். விரைவில் சுருக்கம் வராது. நாளடைவில் முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

அடுத்ததாக ஃபேஸ் பேக். எந்த கெமிக்கல் பூச்சும் போடாமால் சுத்தமான கடலை மாவில் கெட்டியான பசுந்தயிர் கொண்டு நன்றாக குழைத்து முகத்தை கழுவி ஃபேஸ் பேக் போட்டு அரைமணிநேரம் கழித்து குளிர்ந்த நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால் முகம் இன்னமும் பளிச்… தொடர்ந்து இதை செய்துவந்தால் எப்போதும் பளிச்…


newstm.in


newstm.in

Trending News

Latest News

You May Like