இன்று சண்டே..! கறி வாங்க போறீங்களா ? சூடான சாதத்துடன் மட்டன் ரசம் செய்யலாம் வாங்க..!

மட்டன் கொழுப்பு - 100 கிராம்
மட்டன் எலும்புடன் - அரை கிலோ
பச்சை மிளகாய் - 4
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1
டீஸ்பூன் மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - 2 கொத்து
மசாலா அரைக்க : மரசெக்கு கடலை எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் - 8 பூண்டு பற்கள் - 8 சீரகம், மிளகு - தலா 1 டீஸ்பூன்
செய்முறை
* மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.
* தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும்.
* ப.மிளகாயை விழுதாக அம்மிகல்லில் நசுக்கி கொள்ளவும்.
* ஒரு பிரஷர் குக்கரில் மட்டன், மட்டன் கொழுப்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மூடியை மூடி 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.
* பின்னர் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து நைசாக விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
* ஒரு அகலமான வாணலியில் மரசெக்கு கடலை எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . சிறிதளவு உப்பு , மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் அம்மிகல்லில் நசுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
* கடைசியாக வேக வைத்த மட்டனை நீருடன் முழுவதுமாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
இப்போது சூப்பரான மட்டன் ரசம் ரெடி..!