1. Home
  2. ஆரோக்கியம்

சிலருக்கு கண்களை திறக்க‍ முடியாத அளவுக்கு கண்கள் பொங்கிவிடும்...இதற்கு தீர்வு ஒரே ஒரு மாதுளை தான்..!

1

சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, வறியவர்கள் முதல் வள்ள‍ல்கள் வரை என அனைவரையும் ஈர்க்கும் ஒரு பழம் உண்டென்றால் அது மாதுளம் பழம் என்றே சொல்ல‍லாம்.காரணம் இதில் உள்ள‍ முத்துக்கள்தான். காண்பதற்கு அழகாக வும் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருப்ப‍தே இதற்கு முக்கிய காரணம்.

ஒரு சிலருக்கு கண்களை திறக்க‍ முடியாத அளவுக்கு கண்கள் பொங்கிவிடும். மேலும் கண் இமைகளும் உதிர்ந்து காணப்படும்.
இந்த குறையை நிவர்த்தி செய்து கண்களை பாதுகாக்க ஓர் எளிய மருத்துவ முறை உண்டு.

ஆம். ஒரே ஒரு மாதுளம் ப‌ழத்தை மட்டும் எடுத்து, அதனை நான்காக வெட்டி அதன் முத்துக்களை நீக்காமல் அப்ப‍டியே, தண்ணீரில் போட்டு, எறியும் அடுப்பில் வைத்து நன்றாக‌ கொதிக்க வைக்க வேண்டும்.

பின்னர் அதனை நன்றாக ஆற வைக்க வேண்டும். அதன் பின்ன‍ர் அந்த தண்ணீரை எடுத்து தமது கண்களை கழுவினால், கண்கள் பொங்குவது அப்போதே நின்றுபோகும்

.மேலும் கண்களை தாக்கும் பிற நோய்களை தடுத்து காத்திருக்கும். அதுமட்டு மல்ல‍ கண்களுக்கு கூடுதல் கவர்ச்சியைக் கொடுக்கும் என்கிறது சித்த மற்றும் இயற்கை மருத்துவ முறைகள்..

Trending News

Latest News

You May Like