1. Home
  2. ஆரோக்கியம்

இருமல் ஏற்படுபவர்களுக்கான சுய பராமரிப்பு



இருமல் என்பது நம் சுவாசப் பாதையைச் சுத்தப்படுத்துவதற்காக உடல் ஏற்படுத்திக்கொண்ட இயற்கையான ஒரு செயல்பாடாகும்.   பொதுவாக, இருமல் ஏற்படுவதற்கு ஏராளமான காரணங்கள் இருக்கின்றன அவை, காற்றில் கலந்து வரும் தூசி, புகை, ஒவ்வாமை, வேதிப்பொருட்கள் ஏதாவது சுவாசிக்கும் காற்றில் கலந்து விடுவது ,மூக்கில் ஏற்படும் அடைப்பு, சளி பிடித்தல் போன்ற காரணங்களால்  இருமல் ஏற்படலாம்.

சில நேரங்களில், இருமல் சாதாரண, பிரச்னையாக இல்லமல், தடுமம், தொண்டைப் புண், மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், ஆஸ்துமா, நிமோனியா, சிஓபிடி , புற்றுநோய் ஆகியவற்றின் அறிகுறியாக கூட இருக்கலாம். மேலும்  இதயம் செயலிழக்கும் போது, நுரையீரலில் நீர் கோர்த்துக்கொள்வதால் இருமல் ஏற்படும்.  குடல், மற்றும் உணவு பாதை தொற்றுக்களால் கூட இருமல் ஏற்படும். 

இருமல் ஏற்படுபவர்களுக்கான சுய பராமரிப்பு

கோடை காலமானலும் மழைக்காலமானாலும், பெரியவர் முதல் சிறியவர்வரை சந்திக்க கூடிய பிரச்னைகளில் ஒன்றுதான் இருமல். இந்த இருமலால் பல அசௌரியங்களை நாம் எதிர்கொள்ள நேரிடும். இத்தகைய இருமலை கட்டுப்படுத்தக்கூடிய சுய பராமரிப்பு சிலவற்றை தற்போது நாம் பார்க்கலாம்.

தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள், ஆவிபிடித்தல், சுடு நீர் குளியல் போன்றவற்றின் மூலம் உடலை அடிக்கடி ஈரப்பதம் செய்துகொள்வதினால், இருமல் குறையும்.  மேலும், சுத்தமான குடிநீரை அடிக்கடி அருந்த வேண்டும் ,  இதனால் தொண்டையில் படிந்துள்ள தூசி, சளி போன்றவை  சுத்தம்  செய்யப்படும்.

இருமல் ஏற்படுபவர்களுக்கான சுய பராமரிப்பு

சளி தொந்தரவின் போது ஏற்படும் நீர் வடிதல், மூக்கடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு நாம் வழக்கமாக  எடுத்துக்கொள்ளக்கூடிய, மூக்கில்விடும் சொட்டு மருந்துகளை போட்டுக்கொள்ளலாம்.  மூக்கில் மருந்துவிடுவதன் மூலம், தொண்டையில், ஏதேனும் படிந்திருந்தால் அது உள்ளே கொண்டு சென்றுவிடும்.  இதனால், இருமலை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.
 
சிலருக்கு அலர்ஜியால், கூட இருமல் ஏற்படலாம்.  அத்தகைய இருமலின் போது, ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய பொருட்களை உங்களிடமிருந்து தள்ளி வைத்தாலே போதுமானது.  புகைப்பிடிப்பதனால் நுரையீரலில் தொற்று ஏற்பட்டும், இருமல் உண்டாகும், ஆகையால் இருமல் உள்ள நேரங்களில் புகைபிடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நபர்கள் அடிக்கடி கை கழுவ வேண்டும், அவ்வாறு சுத்தமாக இருப்பதினால் நோய் தொற்றுக்கான வாய்ப்பு குறையும்.

சில நேரங்களில் நாம் உட்கொள்ளகூடிய மருந்துகளால் கூட, அலர்ஜி ஏற்பட்டு தொடர் இருமலை சந்திக்க நேரிடும். எனவே, அவ்வாறான ஒவ்வாமைகளை உணரும் பொழுது உடனடியாக அத்தகைய மருந்துகள் உட்கொள்வதை நிறுத்திவிட வேண்டும்.

இருமல் ஏற்படுபவர்களுக்கான சுய பராமரிப்பு

இருமல் ஏற்பட்ட இரண்டு தினங்களுக்கு, வீட்டில் தயாரிக்க கூடிய மருந்துகளை எடுத்துக்கொள்ளலாம், ஆனால் தொடர் இருமலுடன் காய்ச்சல் இருந்தால் கட்டாயம் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

newstm.in

Trending News

Latest News

You May Like