1. Home
  2. ஆரோக்கியம்

விரதத்துக்கும் உடலுக்கும் ஆற்றல் தரும் அரிசி நொய் உப்புமா...

விரதத்துக்கும் உடலுக்கும் ஆற்றல் தரும் அரிசி நொய் உப்புமா...

ஆடி மாதம் இறைவனுக்கு விசேஷமான மாதம். அறிவியல் ரீதியாக பார்த்தால் நம் உடலின் ஆரோக்யத்தைப் பாதுகாக்க வேண்டி முன்னோர்கள் ஆன்மிகத்தைப் புகுத்தி ஆரோக்யம் குறையாமல் பாதுகாத்த மாதம். விரத நாள்களில் அவர்கள் உண்ணும் உணவு கூட உடல் வலுவுக்கு தேவை யான சத்தை நிறைவு செய்வதாகவே இருக்கும்.அவற்றில் ஒன்று அரிசி நொய் உப்புமா.
விரத நாட்களுக்கு மட்டுமே உரியது என்று இதை ஒதுக்காமல் வாரம் ஒரு முறை உணவில் சேர்க்கலாம். ரவை உப்புமாவா என்று முகம் சுளிப்ப வர்கள் கூட இந்த உப்புமாவை விரும்பி சாப்பிடுவார்கள். சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.சத்துக்கள் நிறைந்த இந்த உப்புமாவை எப்படி செய்வது என்று பார்ப்பதற்கு முன்பு என்னென்ன உணவு பொருள்களைச் சேர்த்து நொய் தயாரிப்பது என்று பார்க்கலாமா?

அரிசி நொய் தயாரிக்க:
பச்சரிசி – 1 கிலோ
துவரம்பருப்பு- கால் கிலோ
மிளகு, சீரகம்- தலா 10 கிராம்
பெருங்காயம் கட்டி- சிறிய கோலி அளவு.
செய்முறை: பச்சரிசியைச் சுத்தம் செய்து நன்றாக கழுவி ஈரம் போக வெயிலில் காயவைக்கவும். துவரம் பருப்பையும் சுத்தம் செய்து கழுவி காய வைக்கவும். நன்றாகக் காய்ந்ததும் இரண்டையும் கலந்து மிளகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து மிஷினில் நொய்யாக உடைத்து வைத்துக் கொள்ள வும். ஆறு மாதங்கள் வரை இந்த அரிசி நொய் கெடாமல் இருக்கும்.

இப்போது அரிசி நொய் உப்புமா செய்வோமா?

தேவையான பொருள்கள்:
அரிசி நொய்- 1 கப்,
தாளிக்க:
கடுகு- 1 டீஸ்பூன்,
உ.பருப்பு, க.பருப்பு – 1 தேக்கரண்டி,
வெந்தயம், சீரகம்- தலா 3 டீஸ்பூன்
வரமிளகாய் -2
பெருங்காயம், நல்லெண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை:
வாணலியில் நல்லெண்ணெய்விட்டு கடுகு சேர்த்து பொரிந்ததும்,உ.பருப்பு,க.பருப்பு,சீரகம்,வெந்தயம் தாளித்து வரமிளகாய் போட்டுஒருகப் அரிசி நொய்க்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்ததும் நொய் சேர்த்து மிதமானத்தீயில் வைத்து இருபது நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.

விரத நாட்களில் உப்பு சேர்க்கக் கூடாது என்பதால் இதற்கு தொட்டு கொள்ள வெல்லம் ஏற்ற சைட்டிஷ் ஆக இருக்கும்.

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like