1. Home
  2. ஆரோக்கியம்

வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...

வசம்பு வாயில வெச்சு தேய்ங்க...

நாட்டுப்புறங்களில் விளையாட்டாக ஒருவரை திட்டும்போது உன் வாயில் வசம்பை வெச்சு தேய்க்க என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் வசம்பை வெச்சு தேய்த்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். பிறந்த குழந்தை இருக்கும் வீட்டில் வசம்பு இல்லாமல் இருக்காது. இதற்கு பிள்ளை வளர்ப்பான் என்று மற்றுமொரு பெயர் உண்டு.

இது காரச்சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டிருக்கும். வசம்பு உடல் வெப்பத்தை அதிகரிக்கக் கூடியது. வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச் னைகளையும் தீர்த்துவிடும் வல்லமை வசம்புக்கு உண்டு. சித்தர்கள் சித்தவைத்திய முறையில் பயன்படுத்தும் முக்கியமான பொருள் இது. நமது முன்னோர்கள் அவசர காலத்தில் கை வைத்தியமாக பயன்படுத்த இதை எப்போதும் வீட்டில் வைத்திருப்பார்கள்.

பல்வேறு நன்மைகளைக் கொண்டிருக்கும் வசம்பின் பயன்கள் பற்றி பார்க்கலாமா?
வசம்பை பயன்படுத்துவதற்கு முன்பு:
அகல் விளக்கில் சுத்தமான நல்லெண்ணெய் விட்டு வசம்பின் மீது தேய்த்து விளக்கை ஏற்றி அதில் சுட்டு வைக்கவேண்டும். உரைக்க உரைக்க அந்தக் கரி தீரும் போது மீண்டும் மீண்டும் இதேப்போல் சுட்டு கொள்ளலாம்.

குழந்தைகளுக்கு:
பிறந்த குழந்தைக்கு1 வயதாகும் வரை வசம்பு பயன்படுத்துவார்கள். வாரம் ஒரு முறை சுத்தமான தேனில் வசம்பை குழைத்து குழந்தையின் நாக் கில் 3 சொட்டுகள் வைத்தால் குழந்தைக்கு பேச்சுத்திறன் விரைவாக கிடைக்கும்.

குழந்தை அவ்வப்போது வயிறு உபாதையால் அழுதுகொண்டே இருக்கும் அப்போது வசம்பை தாய்ப்பாலில் குழைத்து வயிற்றின் தொப்புள் பகுதி களில் தடவி வந்தால் வயிறு உபாதை கட்டுப்படும். சுத்தமான தேங்காய் எண்ணெயுடன் வசம்பை குழைத்தும் பூசி வரலாம்.

தாய்ப்பால் குடிக்கும்குழந்தைகள் மீது பால்வாசம்இருக்கும். இந்த வாசனைபிடித்து பூச்சிகள் நெருங்கும்.அதை விரட்டியடிக்க வசம்பை குழைத்து நெற்றியில் பூசலாம்.

குழந்தை பால் கக்கினால், நெஞ்சுசளி இருந்தால்,வயிறு அழுத்திப் பார்த்தால் சற்றே இறுகினாற் போல் இருந்தால் வசம்பைத்தாய்ப்பாலில் குழைத்து கொடுக்கலாம்.

பிறந்த குழந்தை இருக்கும் வீடுகளில் பூச்சிகளின் நடமாட்டம் இருந்தால் அறைகளின் மூலையில் வசம்பு பொடியை தூவி வைத்தால் பூச்சிகளின் நடமாட்டம் இருக்காது.

அதே நேரம் அளவுக்கு அதிகமாகவோ அல்லது தினமும் வசம்பு கொடுப்பதோ குழந்தைக்கு அதிக உஷ்ணத்தை உண்டாக்கிவிடும்.

பெரியவர்களும் வசம்பு பயன்படுத்தலாமா?
பயணங்களின் போது சிலருக்கு குமட்டல் உண்டாகும்.வசம்பை நன்றாக பொடி செய்து மெல்லிய சூட்டில் கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் நிற்கும்.

வளர்ந்த பிள்ளைகளுக்கு பசியின்மை இருந்தால் வசம்பை சுட்டு பொடியாக்கி ஒரு டீஸ்பூன் தேனில் குழைத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். செரிமானத்தைத் தூண்டி பசியை அதிகரிக்கும். வயிற்றுப்புழுக்களை அழிக்கும்.

மூட்டுவலிகள் இருப்பவர்கள் வசம்பை நீரில் தேய்த்து மூட்டுபகுதிகளில் தடவி வர வலி குறையும். வாதம், கீல்வாதம் போன்றவற்றையும் தீர்க் கும் வசம்பு. விஷ பூச்சிகள் கடித்த இடத்தில் வசம்பு பொடியை நீரில் குழைத்து வைத்தால் விஷங்கள் இறங்கும்.

திக்குவாயால் அவதிப்படுபவர்கள் மருத்துவசிகிச்சை மேற்கொள்ளும் போது கூடவே வசம்பை தேனில் குழைத்து தடவி வந்தால் திக்குவாய் குணமாகும். உங்கள் வீட்டிலும் வசம்பு இருக்குதானே இல்லையென்றால் முதலில் நாட்டுமருந்து கடைகளுக்கு சென்று வாங்குங்கள்...

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like