1. Home
  2. ஆரோக்கியம்

பானை வயிற்றை flat ஆக்க இதை சாப்பிட்டால் போதும்..!

1

இதய பிரச்சினைகளுக்கு, (ரத்தக்குழாய் அடைப்பு, ஹார்ட் ஹட்டாக், பை பாஸ் சர்ஜரி, ஓப்பன் ஹார்ட் சர்ஜரி, இது சார்ந்த, ட்ரெட் மில், ஆன்ஜியோ கொடுமைகளில் இருந்து தப்பிக்க..உடல் உறிஞ்ச தகுதியில்லாத கழிவாக தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்ற, நிறை மாத கர்பிணி" போன்ற தோற்றத்தை தரும் பலரின் பானை வயிற்றை flat ஆக்க்கவும் 
பச்சைபூண்டு மிக மிக சிறந்தது!

சிலர் இதை அப்படியே சாப்பிட முயற்சித்து, அதில் உள்ள அமிலத்தன்மையின் வீரியம் தாங்கமுடியாமல் "சமைத்து_சாப்பிடுதல்" என்ற வசதியான குறிப்பை சாதகமாக்கி கொண்டு, முயற்சித்து, பயன் இல்லாமல் பாதியிலேயே விட்டு விடுவார்கள்!

பூண்டில் இருக்கும் ஒரு இயற்கை அமிலம் ஒப்பற்ற மருத்துவ குணம் உடையது.  சமைத்தால், அதன் இயல்பு தன்மை வெகுவாக பாதிக்கப்படும்! இயற்கையாகவே, சமைத்து கெடாத பூண்டு துண்டங்களை நன்கு கடித்து உமிழ் நீரில் செரிமானம் செய்தலே,பூண்டை உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் சரியான முறையாகும்.

#செய்முறை:
பத்து முழு பூண்டை உரித்து, தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, சுத்தமான பருத்தி துணியில் 8லிருந்து12 மணி நேரம் நிழலில் காய வைத்த பின்,
அதனுடன் 5 முழு எலுமிச்சை பழங்களின் சாற்றோடு, மூழ்கும் வரை தேன் ஊற்றி, குறைந்தது 50 நாட்கள் ஊரவைத்த பின், காலை மாலை 1/2 ஸ்பூன் பூண்டு துண்டங்களை ருசித்து ரசித்து சாப்பிட, ஆரோக்யத்தை அருகிலேயே வைத்துக்கொள்ளலாம்!


பூண்டை சமையலில் சேர்க்கும் முன்னர் அதனை உரித்தோ, தட்டியோ. அல்லது நறுக்கியோ பத்து நிமிடங்களுக்கு மேலாக வைத்துவிட்டு அதன் பின்னர் சமையலில் சேர்த்தால் அதன் முழு பலனையும் நாம் பெறலாம். இந்தப் பூண்டில் அதிகளவான  ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன . மேலும் சக்திவாய்ந்த ஆன்டிவைரல், ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. 

பூண்டு பல நூற்றாண்டுகளாக சமையலில் பயன்படுத்தப்படுகிறது. அதன் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இந்த மூலிகை பாரம்பரியமாக ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. பூண்டில் துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்களும் உள்ளன. வைட்டமின் சி, நியாசின் மற்றும் தையமின் ஆகியவையும் இதில் நிறைந்துள்ளன.

1.இது சளி மற்றும் காய்ச்சலை தடுக்கிறது.

2.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

3.இரத்த சர்க்கரை அளவை சமன் செய்கிறது.

4.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

5எய்ட்ஸ் எடை இழப்பு போன்றவற்றுக்கு நிவாரணியாக இருக்கிறது.

அதிலும் அந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கிறது. குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும் எனக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. மேலும் இந்த பூண்டானது ரத்த அழுத்தம் ,வாயுத்தொல்லை போன்றவற்றில் இருந்து நிவாரணமளிப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. அதிக வேலைப்பளு கொண்டவர்கள், மன அழுத்தத்திற்கு ஆளானோர் தினமும் பச்சை பூண்டை சாப்பிட்டு வந்தால் மன அழுத்தம் நீங்கி புத்துணர்ச்சி பெறுவார்கள் என கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like