1. Home
  2. ஆரோக்கியம்

மழை காலத்தில் இந்த மழை காலத்தில் தவிர்க்க வேண்டிய 10 உணவு வகைகள்..!

1

மழை காலத்தில்  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இரும்பல், அஜீரண கோளாறு, பாக்ட்டீரிய தொற்று போன்ற சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. எனவே... உணவே மருந்து என்கிற பழமொழிக்கு ஏற்ப, உணவின் மீது மக்கள் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். 

கீரை வகைகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தவிர்க்க வேண்டியது அவசியம். குறிப்பாக வெந்தயக் கீரை, முருங்கை கீரை, பாலக்கீரை, பருப்பு கீரை, முளைக்கீரை, அரைக்கீரை போன்ற கீரை வகைகளில் சத்துக்கள் அதிகம் நிறைந்திருந்தாலும், மழை காலங்களில் இவை அஜீரண கோளாறை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே போல்  மண்ணில் விளையக்கூடிய முட்டைக்கோஸ், காலிஃபிளவர், இலைக் காய்கறிகளை மழைக் காலத்தில் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மழையின் காரணமாக ஏற்படும் ஈரப்பததால் கிருமி தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. 

பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். மழை காலங்களில், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம், எனவே, இது போன்ற பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

முழு கோதுமை மாவை விட மைதாவால் செய்யப்படும் உணவுகள் சுவையாக இருந்தாலும், இது ஆரோக்கியமற்றது. மைதாவில் நார்ச்சத்து இல்லாததால் மழை காலங்களில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இது வயிற்றில் மந்த தன்மையை ஏற்படுத்துவதோடு வீக்கத்தை ஏற்படுத்துகிறது. மேலும் ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும்.

மழை காலத்தில், சூடாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றினால், முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது. தெருவோர உணவு விற்பனையாளர்களிடமிருந்து, பக்கோடா, பஜ்ஜி போன்ற வறுத்த பொருட்களை மழைக்காலங்களில் தவிர்க்க வேண்டும். இவை சுகாதாரமற்ற முறையில் செய்யப்பட்டிருந்தாலோ, எண்ணெய் தரமில்லாமல் இருந்தாலோ, இதுவே பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.

புளிப்பு தன்மை கொண்ட உணவுகள், ஊறுகாய் போன்ற உணவுகள் மழைக்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் அவை செரிமான செயல்முறையை பாதிக்கின்றன.

செரிமானத்திற்கு அதிக நேரம் எடுக்கும் சில பருப்பு வகைகளை தவிர்ப்பது முக்கியம், மசூர் மற்றும் உளுத்தம் பருப்பு போன்றவற்றை தவிர்த்து, பாசி பருப்பு, துவரை போன்ற பருப்புகள் எடுத்து கொள்வது நலம்.

தயிர் ஒரு புரோபயாடிக் (நல்ல பாக்டீரியாக்களை உருவாக்கும் ஒன்று) என்றாலும், சளி மற்றும் இருமலைத் தடுக்க மழைக்காலங்களில் அதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு கண்டிப்பாக கொடுக்காதீர்கள்

பருவமழைக்குப் பின், கிருமிகள் மற்றும் பூச்சிகள் மாம்பழங்களை மாசுபடுத்தத் தொடங்குகின்றன. எனவே, முதல் மழைக்குப் பிறகு மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like