1. Home
  2. ஆரோக்கியம்

உற்சாகத்தைக் கொடுக்கும் க்ரீன் டீ ..

உற்சாகத்தைக் கொடுக்கும் க்ரீன் டீ ..

நம்மில் பலருக்கும் டீ, காபி குடிக்காமல் நாட்களே நகர்வதில்லை. இன்னும் சிலர் இருக்கிறார்கள். சாப்பாடு கூட இல்லா மல் இருந்துவிடுவேன். ஆனால் நாள் ஒன்றுக்கு 5 டீயாவது உள்ளே விடுவேன் என்று பெருமையாக பேசி உடலை கெடுத் துக் கொள்வார்கள்.

தற்போது இஞ்சி டீ, மசாலா டீ, சுக்கு காபி என்று விதவிதமான மூலிகைகள் கலந்து டீ குடித்தாலும் கூட வருகின்ற ஆரோக்ய குறைபாடுகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. அதனால் அநேகம் பேர் க்ரீன் டீ பிரியர்களாகிவிட்டார்கள்.சற்றே கசப்பு கலந்த இந்த டீயில் உடல் ஆரோக்யத்தைக் குறைக்காமல் கூட்டும் சக்தி இணைந்திருப்பதே காரணம். அப்படி என்ன தான் இருக்கு க்ரீன் டீயில்..

க்ரீன் டீயில் என்ன இருக்கு:

க்ரீன் டீயில் இருக்கும் கேட்சின்ஸ் ஒருவகை பாலிஃபினால்கள். இவை ஆன் டி ஆக்ஸிடண்ட் பண்புகளைக் கொண்ட உட் பொருள்களை உள்ளடக்கியிருக்கிறது.ஃப்ளாவனாய்டு, கேட்டச்சின், குவர்செட்டின் என்னும் நன்மை தரும் பொருளும் இதில் உண்டு. அமினோஅமிலங்கள், கார்போஹைட்ரேட்கள் குறைந்த அளவிலும், இரும்புச்சத்து, மக்னீஷியம், கால்சியம் போன்ற தாதுக்கள்அதிகமாகவும் இருக்கின்றது. உடலுக்கு நன்மை செய்யும் வேதிப்பொருள்கள் நீக்கமின்றி நிறைந்திருக்கிறது. இந்த தேயிலையை வேக வைத்து இனிப்பு சேர்க்காதபோது கலோரிகள் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

க்ரீன் டீ பயன்கள்:

செல்களைச் சிதைக்காமல் பாதுகாக்கும் வேலையைச் செய்வதால் விரைவிலேயே உண்டாகும் வயதான தோற்றத்தைத் தடுத்து என்றும் இளமையாக வைத்திருக்க உதவுகிறது.

மன அழுத்தத்தைப் போக்க வல்லது க்ரீன் டீ. ஆம் இதிலிருக்கும் அமினோ அமிலங்கள் சோர்வை போக்கி அடுத்த சில மணி நேரங்களில் உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது.

புற்றுநோய் உண்டாவதைத் தடுக்கக்கூடிய அபரிமிதமான ஆற்றல் க்ரீன் டீயில் உண்டு. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்டு கள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களை சிதைக்கிறது.

மந்தமான உணர்வை நீக்குகிறது. காபியில் இருக்கும் காபின் பொருள்கள் மூளையைத் தூண்டி சுறுசுறுப்பாக வைத்திருப் பது போல க்ரீன் டீயில் இருக்கும் காபின் மூளையைத் தூண்டி நாள் முழுக்க புத்துணர்ச்சியாக வைக்க உதவுகிறது.

ஆய்வு ஒன்றின்படி நாள் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு கப் வரை க்ரீன் டீ அருந்தினால் இரத்த அழுத்தம், இதய நோய் கள், பக்கவாதம் முதலியவை அருகில் அண்டாது என்று கண்டறியப்பட்டுள்ளது.

இதயநோயை உண்டாக்கும் கெட்ட கொழுப்புகளை நீக்குவதோடு உடலில் இருக்கும் நல்ல கொழுப்பை காப்பாற்றவும் செய் கிறது க்ரீன் டீ. இதய நோய் பாதிப்பில் இருப்பவர்கள் தொடர்ந்து க்ரீன் டீ குடித்தால் வீரியம் குறையும்.

நீரிழிவைக் கட்டுக்குள் கொண்டு வர க்ரீன் டீ சிறப்பாக உதவுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 6 கப் குறையாமல் க்ரீன் டீ சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரையின் வீரியம் 33 சதவீதம் குறைவதாக இருக்கிறதாம் இதிலிருக் கும் அமைலேஸ்ஸ்டார்ச்சை எளிய சர்க்கரையாக உடைப்பதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பாதுகாக்கப்படு கிறது.

இவைதவிர உடலில் உண்டாகும் வலியைக் கட்டுப்படுத்தவும், பற்சொத்தை, பல்வலி பிரச்னைகளிலிருந்தும், உடல் பரும னைக் குறைப்பதிலும் சிறப்பாக செயல்படுகிறது க்ரீன் டீ.

க்ரீன் டீ எப்படி போடுவது:

முறையாக எடுத்துக்கொண்டால் அதன் பலனும் முழுமையாக கிடைக்கும். நொறுக்கிய இலைகளாக கிடைக்கும் க்ரீன் டீ- த் தூளை வாங்கி கொதிக்கும் நீரில் அரை டீஸ்பூன் சேர்த்து அடுப்பை அணைக்க வேண்டும். நீரின் வெப்பத்தில் இலையின் சாறு இறங்க தொடங்கும். பிறகு தேவையெனில் தேன் சேர்த்து எலுமிச்சைசாறு பிழிந்து குடிக்க வேண்டும்.

கொஞ்சமே கொஞ்சம் கசப்பான க்ரின் டீ உடலுக்கு அதிக நன்மைகளைக் கொடுக்கும். க்ரீன் டீ -க்கு மாறிடுங்க..

Newstm.in

Newstm.ina

newstm.in

Trending News

Latest News

You May Like