1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! இந்த கஞ்சியை தினம் காலைல சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட ஊளைச்சதையும் கரைஞ்சிடும்...!

1

உடல் வலிமைக்கு உதாரணமாக சொல்லப்படுவது குதிரையைத் தான். அந்த குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படுவது தான் கொள்ளு. முழுக்க நார்ச்சத்தால் நிறைந்த கொள்ளுப் பயறில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

சளித் தொல்லை நீங்குவதற்கு சிறந்த அருமருந்தாக கொள்ளு இருப்பதாக சித்த மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

வாயுத்தொல்லையால் பசி எடுக்காமல் அவதிப்படுகிறவர்களுக்கு கொள்ளுப் பயறை துவையலாக அரைத்துக் கொடுக்கலாம்.

உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பு, ஊளைச்சதை என்று சொல்லப்படும் தேவையில்லாமல் தொங்கும் கொழுப்புச் சதைகள் ஆகியவற்றைக் குறைக்கும் ஆற்றல் கொள்ளுக்கு உண்டு.

நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் தீர்ந்து எலும்புகள் வலுவடையும்.

கொள்ளை வாரத்தில் இரண்டு நாட்களாவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் சாப்பிட்டு வருவது நல்லது. எடையைக் குறைப்பதற்காக சாப்பிடுகிறவர்கள் சிறிது சிறிதாக வாரத்திற்கு 4 நாட்கள் கூட எடுத்துக் கொள்ளலாம்.

பருப்பு பொடி போல பொடியாகவோ, துவையலாக செய்தோ, சூப் வைத்தோ, கஞ்சியாக செ்யதோ சாப்பிடலாம்.

அதேபோல கொள்ளை ரசம் வைத்து சாப்பிட பருவ கால சளி பிரச்சினைகள் ஓடிப் போகும்.

இரவு முழுவதும் கொள்ளை ஊற வைத்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடித்து, கொள்ளை வேகவைத்தோ பச்சையாகவோ சாப்பிட்டு வர பலன் அதிகமாகக் கிடைக்கும்.

Trending News

Latest News

You May Like