1. Home
  2. ஆரோக்கியம்

இதை தெரிஞ்சிக்கோங்க..! ஃபிரிட்ஜ் பராமரிப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்..!

1

ஃபிரிட்ஜ்ஜில் அதிக பொருட்களை வைத்தால் அதன் வெப்ப நிலை சரியான அளவில் இருக்கும். இல்லையெனில் நாம் ஒவ்வொரு முறையும் திறந்து மூடும் போதெல்லாம் வெப்பக் காற்று சூழ்ந்து கொள்ளும். காற்று மட்டுமே நிரம்பிய ஃபிரிட்ஜ் தேவையில்லாத மின்சார செலவே. அதேபோல் கம்ரஸரும் அதிகமாக இயங்கும். இதனால் எளிதில் கம்ரஸர் பாழாகிவிடும். உங்களுக்கு பழுது பார்க்கும் செலவுதான் மிச்சம்.

ஃபிரிட்ஜ் பராமரிப்பில் முதலில் செய்ய வேண்டியது கண்டெசர் காயிலை சுத்தம் செய்வதுதான். அதுதான் ஃபிரிட்ஜ்ஜின் இதயம் போன்றது. கண்டென்சர் தூசுகளால் அடைத்துக் கொண்டிருந்தால் ஃபிரிட்ஜ்ஜின் ஆற்றல் குறைந்துவிடும். பின் கம்ரெசர் வழக்கத்தைக் காட்டிலும் வெப்பத்தை அதிகமாக வெளியேற்றும். ஒருவேலை பராமரிக்கத் தவறி அதிக வெப்பம் வெளியேறுவதை உணர்ந்தால் உடனே கண்டென்சர் காயிலை மாற்றி விடுங்கள். கண்டென்சர் சரியான பராமரிப்பில் இல்லை என்றாலும் ஃபிரிட்ஜ்ஜின் ஆயுட்காலம் குறைந்து விடும். இது பொதுவாக ஃபிரிட்ஜ்ஜின் அடிப்பகுதியிலோ, பின்புறத்திலோ பொருத்தியிருப்பார்கள்.

ஃபிரிட்ஜ்ஜின் வெப்ப நிலையை குறைத்து வைத்தீர்களானால் அதன் குளுமையும் அதிகமாக இருக்கும். மளிகை பொருட்களும் அதிக குளுமையாகிவிடும். ஃபிரிட்ஜ்ஜில் இருக்கும் பொருளுக்கு ஏற்ப வெப்ப நிலையை வையுங்கள்.

 கதவின் மேல் உள்ள ரப்பர் கேஸ் கெட்டை மாதத்திற்கு ஒரு முறை கழட்டி சுத்தம் செய்வது அவசியம். கழுவும்போது வினிகர் பயன்படுத்திக் கழுவினால் பிசுபிசுப்புகளின்றி சுத்தமாக இருக்கும். இல்லையெனில் ஃபிரிட்ஜின் குளுமை வெளியேறி பொருட்கள் கெட்டுப் போகும். மின்சார செலவும் அதிகமாகும்.

ஃப்ரீஸரில் உள்ள ஐஸ் கட்டிகள் சுற்றிலும் மலைபோல் காட்சியளிக்கும். அது ஃபிரிட்ஜ்ஜின் ஆயுட்காலத்தை குறைத்துவிடும், விரைவில் பாழாகிவிடும். அதனால் வலதுபுற மேற்புறத்தில் இருக்கும் யூனிட் பட்டனை அழுத்திவிட்டால் போதும் அவையெல்லாம் கரைந்து பின் பக்கம் இருக்கும் டப்பாவில் சேர்ந்துவிடும். அதை நீக்கி தண்ணீரை வெளியேற்றிவிடுங்கள். அதிக நீர் கட்டிகளாக இருந்தால் அவை ஃபிரிட்ஜ்ஜிற்கு உள்ளேவும் நீரை வெளியேற்றும் அந்த சமயத்தில் ஃபிரிட்ஜ்சை அனைத்துவிட்டு முற்றிலும் துடைத்துவிட்டு பொருட்களை வையுங்கள்.

ஃப்ரிட்ஜ் வெளியேற்றும் தேவையற்ற நீர் ஃபிரிட்ஜ்ஜின் பின் புறம் கீழே உள்ள பாக்ஸில்தான் தங்கும். அந்த நீர் காற்றில் ஆவியாக வெளியேறிவிடும். அதிகமான நீராக இருந்தால் நீங்களாகவே கழட்டி சுத்தம் செய்ய வேண்டும். அவ்வபோது கழட்டி டிட்டர்ஜெண்டுகள் பயன்படுத்தி கழுவுங்கள். வெது வெதுப்பான நீரால் கழுவுங்கள். காய வைத்து பின் மாற்றிவிடுங்கள். இதனால் கிருமிகளை தவிர்க்கலாம். பாக்ஸில் கிருமிகள் , பல நாட்களான நீர் சேர்ந்தால் அவை டியூப் வழியாக ஃபிரிட்ஜ்ஜின் உள்ளே சென்று பொருட்களை பாழாக்கிவிடும்.

இதில் தேவையில்லாத நீர் வெளியேறி ஃபிரிட்ஜ்ஜின் பராமரிப்பை கவனித்துக் கொள்ளும். ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாட்டர் ஃபில்டரை மாற்றுவது அவசியம். இலையெனில் அழுக்குகள் படிந்து நீர் வெளியேறாமல் அடைத்துக் கொண்டால் துர்நாற்றம் வீசும். ஃபிரிட்ஜ்ஜும் பாழாகிவிடும்.

ஃபிரிட்ஜ்ஜை மாதம் அல்லது இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வது அவசியம். அவ்வாறு சுத்தம் செய்யும்போது பொருட்களை வெளியே எடுத்துவிட்டு, ஐஸ் கட்டிகள் கரைந்து நீர் வெளியேறியதும் வெதுவெதுப்பான நீரைக் கொண்டு பருத்தித் துணியால் துடைத்து எடுங்கள். அவை காய்ந்ததும் பெருட்களை உள்ளே வைத்து ஆன் செய்து விடுங்கள்.

 ஃபிரிட்ஜ்ஜில் வைக்கும் பொருட்களை காற்று புகாத அளவு கெட்டியாக மூடும் டப்பாவில்தான் வைக்க வேண்டும். இல்லையெனில் அவை உள்ளுக்குள்ளேயே சூழ்ந்து மற்ற பொருட்களையும் பாழாக்கிவிடும். பின் எல்லா பொருட்களிலும் அந்த வாசனைதான் வரும். குறிப்பாக பூக்களை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கும்போது மிகவும் கவனமாக காற்று உட்புகாத அளவில் டப்பாவில் அடைத்து வையுங்கள்.

 நீங்கள் ஃபிரிட்ஜ்ஜை ஒவ்வொரு முறையும் திறக்கும் போதெல்லாம் குளிர்ந்த காற்று வெளியேறி வெப்பக் காற்று உள்ளே நுழையும். அதனால் நீங்கள் அதிக நேரம் ஃபிரிட்ஜ்ஜை திறந்தபடி நின்றுக் கொண்டிருந்தால் அதிக வெப்பம் உள்ளே போகும். உடனே ஃபிரிட்ஜ் அதை குளுமையாக்க இயங்க ஆரம்பிக்கும். இதனால் மின்சாரம் அதிகமாக செலவாகும். கம்ரஸரும் அதிக நேரம் இயங்கும்.

: பொருட்களை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கும்போது அறையின் வெப்ப நிலையில் வையுங்கள். இல்லையெனில் வெப்பம் உள்ளே சுற்றிக் கொள்ளும். அதைக் குளுமையாக்க கம்ப்ரஸர் அதிக நேரம் இயங்க ஆரம்பிக்கும். இதனால் கம்ப்ரஸர் கெட்டுப் போக வாய்ப்புகள் அதிகம்.

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.

11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்
.
14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்

Trending News

Latest News

You May Like