1. Home
  2. ஆரோக்கியம்

வெறும் பாலை குடிப்பதற்கு பதில் இந்த மசாலா பாலை குடித்து பாருங்களேன்..!

1

இன்றைய ரசாயன யுகத்தில், பூச்சு மருந்து இல்லாத இயற்கை உணவை காண்பதே அரிதாகிவிட்டது. 

இந்த சூழ்நிலையில், புரதம், கார்போஹைட்ரேட், நார்சத்து உள்ளிட்டவை கிடைக்கும் வகையில், ட்ரை புரூட் எனப்படும் உலர் பழங்கள், கொட்டை வகைகளை தினமும் சிறிதளவு எடுத்துக்கொண்டால் நல்லது. ஆனால், நம்மில் பலருக்கும் அவற்றை நேரடியாக உண்ண நேரம் கிடைப்பதில்லை.

பலருக்கு சோம்பேறித்தனம் என்றே கூறலாம். அதில், பாதாம் போன்ற பருப்புகளை குழந்தைகள் அவ்வளவாக விரும்பி சாப்பிடுவதில்லை. எனவே, அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில், முக்கிய ட்ரை புரூட்களை சேர்த்து அரைத்து மசாலா பால் பொடி தயாரிப்பது எப்படி என்பதை பார்க்கலாம். 

முந்திரி, பாதாம், பிஸ்தா உடைத்தது ஆகியவற்றை சம அளவு எடுத்துக்கொண்டு வெறும் வாணலியில் வறுத்து, அத்துடன் சிறிதளவு ஏலக்காய், கிராம்பு, குங்குமப்பூ சேர்த்து, மிக்ஸியில் போட்டு அரைக்கவும். 

விருப்பம் இருப்பின் சர்க்கரையையும் சேர்த்து அரைக்கலாம். இல்லையென்றால், அதை பாலுடன் தனியாக சேர்த்துக் கொள்ளலாம். 

நன்கு பொடியானதும் அதை, ஒரு டப்பாவிலோ, மூடி உள்ள பாத்திரத்திலோ எடுத்து வைக்கவும். தினமும், காலை, இரவு, ஒரு டம்பளர் பாலில், ஒரு ஸ்பூன் இந்த மசாலா பொடியை சேர்த்து பருகினால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன், தெம்புடன் இருக்கலாம். 

இதன் மூலம், கால்சியம், அயர்ன், வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகிய அனைத்தும் கிடைக்கப் பெறலாம். வெறும் பாலை குடிப்பதற்கு பதில், இந்த மசாலா பாலை குடிப்பது சிறந்தது. 

வீட்டிலேயே தயாரிக்கப்படுவதால், இதில் எவ்வித கலப்படமும் இருக்காது. எனவே, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நம்பி குடிக்கலாம். நீங்களும் ட்ரை செய்து பாருங்களேன்.

Trending News

Latest News

You May Like