அகத்தி கீரை சாப்பிடும் போது இறைச்சி சாப்பிட கூடாது... ஏன் தெரியுமா ?
அகத்திக்கீரையில் 63 வகை சத்துகள் இருப்பதாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. இதில் 8.4 சதவீதம் புரதச்சத்து 1.4 சதவீதம் கொழுப்புச்சத்து 3.1 சதவீதம் தாது உப்புகள் மட்டுமின்றி மாவுச்சத்து இரும்புச்சத்து வைட்டமின் ஏ சி ஆகிய சத்துகளும் உள்ளன. பொதுவாக அகத்திக் கீரையில் இரண்டு வகை உள்ளது. அதில் ஒன்று வெள்ளை நிற பூக்களைக்கொண்டது. இன்னொன்று சிவப்பு நிற பூக்களை கொண்ட செவ்வகத்தி. இவை இரண்டின் இலை பூ பட்டை வேர் ஆகியவை மருந்தாக பயன்படுகின்றன.
- அகத்தி கீரை சாப்பிடும் போது இறைச்சி சாப்பிட கூடாது. அப்படி சாப்பிட்டால் சிலருக்கு அலர்சி உண்டாகலாம். அதுமட்டுமல்லாமல் மருந்துகளின் வீரியத்தை இது குறைக்கும்.
- அகத்தி கீரையை தொடர்ந்து வாரம் இருமுறை உணவில் சேர்த்து கொண்டால் ரத்தக் கொதிப்பு, மூலம் பித்த கோளாறுகள் தீரும். பல மருந்துகளை சாப்பிடுவதால் ஏற்படும் உடல் வெப்பத்தை தணிக்க அகத்தி கீரையுடன் பாசி பருப்பு சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
- அகத்திக் கீரையை சமைத்து சாப்பிட்டால் உணவு எளிதில் ஜீரணமாகும். பித்தம் தொடர்பான நோய்கள் நீங்கும். உடல் சூடு தணிந்து கண்கள் குளிர்ச்சியாகும். மலச்சிக்கலை தடுக்கும். வயிற்றுப்புண் குணமாகும்.
- சுத்தம் செய்யப்பட்ட அகத்தி கீரையுடன் சின்ன வெங்காயம் மிளகு சீரகம் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டுவந்தால் வயிற்றுப்புண் சரியாகும். இந்தக் கீரையின் சாற்றை சேற்றுப்புண்களில் பூசி வந்தால் விரைவில் ஆறிவிடும். நாள்பட்ட புண்களின் மீது கீரையை மட்டும் அரைத்து தடவி வந்தால் விரைவில் ஆறும்.
- அகத்திக்கீரையில், 10 டம்ளர்பாலில் உள்ள கால்சியம் சத்து உள்ளது. இது, அரை கிலோ ஆட்டு இறைச்சி, 20 முட்டைகளில் கிடைக்கும் கால்சியத்திற்கு இணையானது.அதற்காக, சத்தான கீரை என்பதற்காக, நிறைய சாப்பிடக் கூடாது.
- 'வெந்து கெட்டது முருங்கை; வேகாமல் கெட்டது அகத்தி' என்பர். எனவே, அகத்திக் கீரையை நன்கு வேக வைத்து சாப்பிட வேண்டும்.
- தேமல் வந்த இடங்களில் இதன் இலையை தேங்காய் எண்ணெயை விட்டு வதக்கி விழுதாக அரைத்துப் பூசி வந்தால் குணமாகும். இந்த கீரையின் சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்களின் மீது தடவினால் அவை காய்ந்து விழுந்துவிடும். அகத்திக் கீரையைப்போல அவற்றின் பூவும் மருத்துவ குணம் நிறைந்தது. பூவை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல் தலைசுற்றல் சிறுநீர் மஞ்சளாகப்போவது போன்ற பிரச்சினைகள் சரியாகும்.
- அகத்திப்பூவுடன் மிளகு சீரகம் ஓமம் பூண்டு வெங்காயம் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் இதய படபடப்பு கட்டுக்குள் வரும். மருந்துகளை முறிக்கும் தன்மை அகத்திக்கு உண்டு. எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது இதை சாப்பிடக்கூடாது. பொதுவாக இந்தக் கீரையை அடிக்கடி சாப்பிடக்கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மருந்தாக செயல்படவேண்டியது அதற்கு எதிராக செயல்பட்டு சொறி சிரங்கை ஏற்படுத்திவிடும் என்பார்கள்.
- அகத்திக்கீரையையும் கோழிக்கறியையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது. மது அருந்திவிட்டும் இந்த கீரையை சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிட்டால் மாரடைப்பு உள்ளிட்ட இதயம் தொடர்பான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது.
- பிற நோய்களுக்கு மருந்து சாப்பிடும் போது, இந்தக் கீரையை சாப்பிடக் கூடாது. இதில், கூட்டு, பொரியல், சாம்பார், சாதப்பொடி என, விதவிதமாக சமைக்கலாம்.
- அகத்திப் பூவை சமைத்து உண்டால், உடலில் உள்ள விஷத்தன்மை மறையும். தசைகள் இயக்கம் சீர்பெறும்;
- இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் சீராகும்; இதயம் பலம் பெறும்.ஒரு கட்டு அகத்திக்கீரையை காய வைத்தது, தலா, 20 கிராம் மிளகு, சீரகம், 100 கிராம் உளுந்து, மிளகாய் 7, தேவையான அளவு உப்பு என, அனைத்தையும் பொடி செய்து, நெய்யுடன் சேர்த்து, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் தீரும்.
- அகத்திக் கீரையால், அழகும் பெறலாம். இந்த கீரையை, தேங்காய் பால் சேர்த்து அரைத்து, கண்ணுக்குக் கீழே பூசி வந்தால், கருவளையம் மறையும்; முகம் அழகாகும்.
- அகத்தி இலைச்சாறு, வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும்.
- அகத்திப்பூ, கண் எரிச்சல், தலை சுற்றல், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் போதல் போன்றவற்றை சரி செய்யும்.
- அகத்திப் பட்டையை, கஷாயம் வைத்து அருந்தினால், காய்ச்சலின் தீவிரம் குறையும்.
- அகத்தி வேரை அரைத்து பூசி வர, கால் மூட்டு வலி குணமாகும்.அகத்திக்கீரை சூப், வயிற்றுப் புண்ணை ஆற்றும் குணம் கொண்டது.
- அகத்திக் கீரையுடன், நான்கில் ஒரு பங்கு சின்ன வெங்காயம், ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து, நன்றாக வேக வைத்து, சூப் தயாரித்து, தினமும் ஒரு வேளை அருந்தி வர, வயிற்றுப்புண் ஆறும்!
தண்டுக்கீரை: மூல நோய் உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சமைத்து உண்ண அந்த நோய் குணமாகும். இந்த கீரையை அடிக்கடி உட்கொண்டால் நீர்க்கடுப்பு, நீர்த்தாரை எரிச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.
அரைக்கீரை: அரைக்கீரையுடன் வெங்காயம் சேர்த்து நெய்யில் பொரித்து சாப்பிட்டு வந்தால் புதுரத்தம் ஊறி தாது அணுக்கள் உற்பத்தியாகும்.
மூக்கிரட்டை கீரை: மூக்கிரட்டை கீரை மற்றும் அதன் தண்டினை சாப்பிட்டு வருவதால் சிறுநீரகங்களின் உருவாகும் கற்கள் மற்றும் சிறுநீரக தொற்றுநோய்கள் வருவதை தடுத்து நிறுத்தும்.
பாலக்கீரை: பாலக்கீரையில் வைட்டமின் ஏ,பி ,சி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு பாலக்கீரை சிறந்தாகும். அதோடு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த கீரையை சாப்பிட்டால் பால் அதிகம் சுரக்கும்.