1. Home
  2. ஆரோக்கியம்

சுகர் பார்த்து இனி பயப்பட வேண்டாம்.. 48 நாள் நெல்லிக்காயை இந்த மாதிரி ஜூஸ் செஞ்சு குடிங்க போதும்..!

1

நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்திருக்கிறது. அதேபோல நிறைய மினரல்களும் இருக்கின்றன.

குறிப்பாக நெல்லிகக்காயில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் அதிக அளவில் இருக்கின்றன. இந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் கணையத்தில் உண்டாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து இன்சுலின் உற்பத்தியை சீராக்குகிறது. இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிக்கச் செய்யும்.

நாம் உண்ணும் உணவுகளில் உள்ள குளுக்கோஸை உடல் சரியான முறையில் பயன்படுத்தும் போது தான் உடலின் வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அதற்கு ஜீரண மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டு வேலையையும் சரியான செய்வதில் நெல்லிக்காய் முக்கியப் பங்கு வகிக்கிறது. நெல்லிக்காயை கடித்து, சுவைத்து சாப்பிடும் போது, சலவாயில் கலந்து ஜீரண நொதிகளை உற்பத்தி செய்கிறது. இதனால் மெட்டபாலிசம் அதிகரிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அதிகமாகாமல் தடுக்கும்.

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட கார்டியோ வாஸ்குலர் நோய்களின் ஆபத்து மிக அதிகம். இந்த கார்டியோ வாஸ்குலர் ஆபத்துகளுக்கு மிக முக்கியக் காரணமே ரத்தக் குழாய்களில் படியும் கெட்ட கொலஸ்டிரால் தான்.

இந்த கெட்ட கொலஸ்டிராலைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நெல்லிக்காய் உதவியாக இருக்கும்.

நெல்லிக்காயை உணவில் தினமும் தொடர்ந்து சேர்த்துக் கொண்டே வரும்போது உடலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் அதில் மிக முக்கியமான ஒன்று ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது.

நெல்லிக்காயை அப்படியே கடித்து சாப்பிடுவது தான் மிகவும் நல்லது. நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி. அதில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் மிளகாய் பொடி சேர்த்தும் சாப்பிடலாம்.

நெல்லிக்காயை விதையை நீக்கிவிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து வடிகட்டி, அதில் தேன் (அல்ல) மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து குடிக்கலாம்.

நெல்லிக்காயை ஊறுகாயாகவும் தினமும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதில் உப்பு, எண்ணெய், காரம் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

நெல்லிக்காய் பொடியை மோர், தயிர் பச்சடி, ஜூஸ் ஆகியவற்றில் கலந்து குடிக்கலாம்.

ஆயுர்வேத மருந்து கடைகளில் நெல்லிக்காய் கேப்ஸ்யூல்களாகவும் கிடைக்கும். அதை வாங்கி சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கும் சிறுவயது முதலே நெல்லிக்காயை கொடுத்துப் பழகுங்கள். சாப்பிட மறுத்தால் கேண்டி வடிவில் இனிப்பு சேர்த்து கிடைப்பதை முதலில் பழக்கப்படுத்துங்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வெறும நெல்லிக்காயைக் கொடுக்கலாம்.

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காயை விதைகளை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.

ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய நெல்லிக்காய், மிளகு, புதினா இலைகள், ஆகியவற்றைச் சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து வடிகட்டி, ஜூஸை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் சிட்டிகை அளவு மஞ்சள், சீரகப் பொடி, உப்பு சேர்த்து கலந்தால் சுவையான நெல்லிக்காய் ஜூஸ் ரெடி!.

இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை வெறும் வயிற்றில் குடித்து வர, ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
 

Trending News

Latest News

You May Like