1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? ஆடு வாங்கும் முன் பார்க்க வேண்டியவை..? ஆட்டின் எந்த பகுதி வாங்க வேண்டும் தெரியுமா..!

1

பச்சையாகவோ, சமைத்தோ அசைவ உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ஃப்ரிட்ஜில் வைப்பதால் அவை கெட்டுப் போகாமல் இருக்கலாம். ஆனால், புதிதாக வாங்கிச் சமைப்பது போன்ற ருசியும் வராது. அதன் தரமும், சத்துகளும் குறையும்.விபத்தில் சிக்கியோ, நோய் தாக்குதலாலோ இறந்துபோன கால்நடைகளின் மாமிசத்தையும் சில இடங்களில் ஏமாற்றி விற்கிறார்கள்.

ஆட்டுக்கறி நம்முடைய உடலுக்கு பலம் தரக்கூடியது.உடல் சூட்டை தணிக்கக்கூடியது.. தோலுக்கு வலிமை தருவதுடன், சருமத்துக்கான பளபளப்பையும் தரக்கூடியது.

இறைச்சி வாங்கும் முன் பார்க்க வேண்டியவை :

இறைச்சி பயன்பாட்டுக்காக கால்நடைகளை வெட்டும்போது அதிலிருக்கும் ரத்தம் உடனே வெளியேறிவிடும். ஏற்கெனவே இறந்து பல மணி நேரம் கழித்து வெட்டிய கால்நடை என்றால் அதில் ரத்தம் உறைந்த நிலையில் திட்டுத்திட்டாக ஆங்காங்கே படிந்திருக்கும். இதை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

எந்த இறைச்சியாக இருந்தாலும் ஒரு விரலால் தொட்டு அழுத்திப் பார்க்க வேண்டும். அழுந்திய பகுதி மீண்டும் அதே நிலைக்கு வந்துவிட வேண்டும். அழுந்திய நிலையிலேயே இருந்தால் தரமில்லாதது.

ஆட்டின் எடை 8 கிலோவுக்குள் இருந்தால் இளம் ஆடாக இருக்கும். சமைக்கும்போது கறி எளிதில் வெந்துவிடும்.
எட்டு கிலோவுக்கு மேல் இருந்தால் அது முற்றிய இறைச்சியாக இருக் கும். எளிதில் வேகாது, சாப்பிடுவதற்கும் கடினமானதாகவும் இருக்கும்.

கடைகளில் ஏற்கெனவே சில மணி நேரம் அதைத் தொங்கவிட்டிருப்பார்கள். வீட்டுக்கு வாங்கி வந்து, கிச்சன் சிங்க்கின் அருகிலோ, ஃப்ரிட்ஜிலோ சில மணி நேரம் வைத்துவிடுவோம். ஓரிரு மணி நேரம் கழித்து சமைத்துச் சாப்பிடுவோம்.

செல்கள் சில மணி நேரம் தான் இறைச்சியில் உயிருடன் இருக்கும்.செல்கள் உயிருடன் இருக்கும் வரைதான் இறைச்சி ஃப்ரெஷ்ஷாக இருக்கும். எனவே, இறைச்சி வெட்டப்பட்ட ஐந்து முதல் ஆறு மணி நேரத்துக்குள் சமைத்துச் சாப்பிட்டு விட வேண்டும்.ஃபிரெஷ்ஷாக இருக்கிறதா என்று நேரில் பார்த்து வாங்கிவிடலாம். ஆனால், ஆன்லைனில் அப்படி வாங்க முடியாது. அவற்றை வாங்குவதற்கான ஆப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் போட்டோவை பார்த்து தேர்வு செய்வோம்.எனவே, அசைவ உணவு களை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிச் சாப்பிடுவதை முடிந்தவரையில் தவிர்க்கவும்.

நுரையீரல்: இதில், ஆட்டின் நுரையீரல், கொழுப்புகளை நாம் சமைத்து சாப்பிடும்போது, உடலுக்கு வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை தருகிறது.. நம்முடைய நுரையீரல் மற்றும் இடுப்பு பகுதிக்கு நல்ல வலிமையை கூட்டுகிறது.

நெஞ்செலும்பு: ஆட்டின் கண்களை எடுத்து கொண்டால், நம்முடைய கண்களுக்கு மிகுந்த பலத்தை தந்து பார்வையை கூர்மைப்படுத்தும்.. ஆட்டின் நெஞ்சு பகுதியை சமைத்து சாப்பிடும்போது, நம்முடைய கபம் நீங்கும்.. மார்புக்கு பலத்தை தரக்கூடியது.. அதனால்தான், பலவீனமானமாவர்கள் ஆட்டின் மார்பை, நெஞ்செலும்பாக வாங்கி சூப் வைத்து சாப்பிடுவார்கள். வைட்டமின் A, B, C உள்ளதால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. ஆட்டின் இதயம், மன ஆற்றலை பெருக்கக்கூடியது..

ஆட்டு கால்களை சூப் வைத்து சாப்பிடும்போது, நம்முடைய கால்களுக்கு பலத்தை தருகிறது.. ஆட்டு மூளையில், கெட்ட கொழுப்பு ரொம்ப ரொம்ப குறைவு.. இதிலுள்ள பாஸ்பரஸ், நம்முடைய கிட்னியில் உள்ள கசடுகளை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது.

தலைக்கறி: ஆடு இயற்கையாக உடலுக்கு குளிர்ச்சி வழங்கும் உணவை சேர்ந்தது. அந்தவகையில், ஆட்டின் தலைக்கறியை சாப்பிடுவதால், நம்முடைய இதயம் சார்ந்த வலி தீரும்.. இதய கோளாறுகளை நீக்குவதில் தலைக்கறிக்கு முக்கிய இடம் உண்டு என்கிறார்கள்..இந்த தலைக்கறியை அளவோடு சாப்பிட்டால் இதயநோய் தீரும் என்கிறார்கள்.. குழந்தை பெற்ற பெண்களுக்கு தலைக்கறியை வீட்டில் பெரியவர்கள் அடிக்கடி செய்து தருவார்கள்.. இது அவர்களின் இடுப்பு வலிக்கு நிவாரணமாக அமைகிறது.. பால் சுரப்பும் அதிகமாக இருக்கும்.. பிறந்த குழந்தைக்கும் தலை சீக்கிரமாக நிற்கவேண்டுமென்று, இந்த ஆட்டுத்தலைக்கறியை குழம்பு செய்து தருவார்கள்.

ஆட்டு குடல்: ஆட்டின் குடல் பகுதியை போட்டி என்பார்கள்.. செரிமானக் கோளாறுகள் உள்ளவர்கள், போட்டியை சமைத்து சாப்பிடலாம். இதனால், அல்சர் பிரச்சனையும் தீரும்.. எனவே, கறியை சாப்பிடுவதற்கு பதிலாக, ஆட்டுக்கறியின் ஒவ்வொரு உடல் பாகத்தையும் சாப்பிடும்போது, ஆரோக்கியம் கூடும்.. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும்கூட, ஆட்டுக்கறியை அளவுடன் எடுத்து கொள்வதே நல்லது. பொதுவாக, சிவப்பு இறைச்சி செரிக்கப்படும்போது, ஒரு மெட்டாபொலிட் வெளியாகிறது என்று சமீபத்திய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது... சிவப்பு இறைச்சியை அதிக அளவில் உட்கொள்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு இதுவே காரணம் என்கிறார்கள்.

Trending News

Latest News

You May Like