1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? இளநீரை எந்த நேரத்தில் குடித்தால் என்ன நன்மைகள் தெரியுமா ?

1

கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படாமல் இருக்க நீர் ஆகாரங்களை மக்கள் அதிகம் சாப்பிடுவது அவசியம். வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பதை தவரித்து வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, இளநீர், நுங்கு, பதனீர் என நீர்சத்து மிக்க ஆகாரங்களை மக்கள் அதிகம் குடிப்பதை பார்க்க முடியும். அதிலும் இளநீருக்கு தனி மவுசு உண்டு.

இந்த இளநீர் தாகத்தைத் தணிப்பது மட்டுமின்றி, உடலுக்கும் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக கோடைகாலத்தில் இது உடலை குளிர்ச்சி அடையச் செய்கிறது மற்றும் அதிகப்படியான உடல் வெப்பத்தால் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கிறது.

குறிப்பாக நோய்வாய்ப்பட்டவர்கள் அல்லது டீஹைடிரேஷன் அதாவது நீர்ச்சத்து இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன நபர்கள் தினமும் இளநீர் குடிப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறார்கள். மேலும் ஆரோக்கியமாக இருக்கக்கூடிய நபர்கள் தினமும் இளநீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.இளநீரானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை தூண்டுகிறது. மாலை நேரத்தில் இளநீர் பருகுவதை காட்டிலும் காலை நேரத்தில் அதனை குடிப்பது சிறந்தது. மேலும் இளநீரை மிதமான அளவு குடிக்க வேண்டும்.

பலருக்கும் இளநீரை எந்த நேரத்தில் குடிக்க வேண்டும் என்ற ஒரு கேள்வி இருக்கும்.ஏனெனில் இளநீரை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குடிக்கும் போது, அதனால் இருமடங்கு நன்மைகளைப் பெறக்கூடும்.

இளநீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிப்பது பல வழிகளில் நன்மை பயக்கும். ஏனெனில் இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது. இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்த, எடை இழப்பிற்கு உதவி புரியும். அதுவும் கர்ப்பிணிப் பெண்கள் இளநீரைக் குடிப்பது நல்லது. ஏனெனில் இது உடல் வறட்சி மற்றும் மலச்சிக்கலை எதிர்த்துப் போராடும். மேலும் இது கர்ப்ப காலத்தில் சந்திக்கும் மசக்கை மற்றும் நெஞ்செரிச்சல் அறிகுறிகளில் இருந்து நிவாரணத்தை அளிக்கும்.

இளநீர் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் ஒரு சிறந்த ஆற்றல் பானம். எனவே இந்த இளநீரை ஒருவர் உடற்பயிற்சியி ஈடுபடுவதற்கு முன் குடித்தால், உடலின் ஆற்றல் சிறப்பாக இருக்கும். அதேப் போல் உடற்பயிற்சிக்கு பின் குடித்தால், அது உடற்பயிற்சியின் போது இழந்த எலக்ட்ரோலைட்டுக்களை மீண்டும் பெற உதவும். இது தவிர இளநீர் உடல் சோர்வைப் போக்கி, உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கும்.

இளநீரை ஒருவர் உணவு உண்பதற்கு முன் குடித்தால், அது அளவுக்கு அதிகமாக உணவு உண்பதைத் தடுக்கும் மற்றும் உணவுகளை எளிதில் ஜீரணிக்க உதவி புரியும். அதுவே உணவு உண்ட பின் இளநீரைக் குடிக்கும் போது, அது வயிற்று உப்புசத்தைத் தடுக்கும். தினமும் ஒரு இளநீரைக் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தால், அது உடலில் எலக்ட்ரோலைட்டுக்களை சமஅளவில் பராமரிக்க உதவி புரிவதோடு, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மற்றும் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும்.

நல்ல சுவையான இளநீரை இரவு தூங்குவதற்கு முன் குடித்தால், அது மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, இதயத் துடிப்பை மெதுவாக்கும் மற்றும் மனதை அமைதிப்படுத்தி, இரவு நல்ல தூக்கத்தைப் பெற உதவும். மேலும் இரவு நேரத்தில் இளநீர் குடிப்பது, உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவி புரிந்து, தொற்றுகள் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளைத் தடுக்கிறது.

மது அருந்தியதால் சந்திக்கும் ஹேங்ஓவரில் இருந்து உடனடி நிவாரணம் பெற இளநீர் உதவி புரியும் என்பது தெரியுமா? ஆம், எப்படியெனில் ஆல்கஹால் உடலை வறட்சியடையச் செய்கிறது மற்றும் இது சரக்கு அடித்த மறுநாள் தலைவலி மற்றும் குமட்டல் உணர்வை வரத் தூண்டும். இந்நிலையில் ஒரு இளநீரைக் குடித்தால், அது இப்பிரச்சனைகளில் இருந்து விடுவிப்பதோடு, இழந்த எலக்ட்ரோலைட்டுக்களை மீண்டும் பெற உதவி புரிந்து, நன்கு உணர வைக்கும்.

இளநீர் பருகுவதை எப்போது தவிர்க்க வேண்டும்?

உங்கள் ரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருந்தால் இளநீர் பருகுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில், இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. எனவே சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றும் இதயத் துடிப்பு தொடர்பான கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் இளநீர் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

இளநீர் என்னதான் ஒரு ஆரோக்கியமான பானமாக கருதப்பட்டாலும் அதில் இருக்கக்கூடிய இயற்கை சர்க்கரை அளவு காரணமாக அதனை அதிகமாக பருகுவது தவறு என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் இளநீர் குடிக்க விரும்பினால், முதலில் மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் மருத்துவர் இளநீரைக் குடிக்கலாம் என்று சொன்னால் மட்டுமே குடிக்க வேண்டுமே தவிர, வேண்டாம் என்று சொல்லியும் குடித்தால், சிறுநீரக பிரச்சனை தீவிரமாகிவிடும்.

வயிற்று உப்புசம் உள்ளவர்கள் இளநீரைக் குடிக்கக்கூடாது. மேலும் பலர் உடற்பயிற்சி செய்த பின்னர் இளநீரைக் குடிப்பார்கள். ஆனால் இளநீரில் சோடியம் குறைவாக இருப்பதால், ஓரளவு தான் அது தாகத்தைத் தணிக்கும். ஆனால் இளநீரைக் குடிப்பதற்குப் பதிலாக, நீங்கள் சாதாரண தண்ணீரைக் குடிப்பது சிறந்தது. ஏனெனில் சாதாரண நீரில் இளநீரை விட அதிக சோடியம் உள்ளது.

ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்தவர்கள், இளநீரைக் குடிப்பதாக இருந்தால் மருத்துவரிடம் கேட்ட பின்னரே குடிக்க வேண்டும். ஏனெனில் அறுவை சிகிச்சை செய்த உடனேயே இளநீர் குடித்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது கடினமாகி, உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

Trending News

Latest News

You May Like