இது தெரியுமா ? விஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த பொருள் இது..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/15f9c9c7149f0807fd945974c256ef72.png?width=836&height=470&resizemode=4)
ஒவ்வொரு மூலிகையிலும் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது. அதை முறையாக பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு அதில் உள்ள மருத்துவ குணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
வேப்பிலை, வில்வம், அத்தி, துளசி, குப்பைமேனி, கண்டங்கத்தரி, கீழாநெல்லி, வசம்பு என சொல்லிக் கொண்டே போகலாம். இதில் பிள்ளை வளர்ப்பான் என்று அழைக்க கூடிய வசம்பின் மருத்துவ குணத்தைப் பார்க்கலாம்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள். இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.
வசம்பு குழந்தைகளுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல், சீரணமின்மை, வயிற்று வீக்கம், வயிற்று போக்கு இவற்றை போக்க வசம்பு பொடி உதவுகிறது. மேலும் குழந்தைகளின் அதிக பிரச்சினைகளை களையவும் உதவுகிறது.
வசம்பு பொடியை தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வருவது வயிற்று பிரச்சினைகள் சரியாக வாய்ப்பு உள்ளது. இப்படி செய்யும் போது 30 நிமிடங்கள் வரை குழந்தைகளுக்கு பால் கொடுக்க வேண்டாம். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு தான் தேன் கொடுக்க வேண்டும். ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைக்கு தாய்ப்பாலில் கலந்து கொடுக்கலாம்.
வசம்பு மற்றும் அதிமதுரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட கஷாயம் இருமல், வயிற்று வலி போன்ற குழந்தைகளின் நோய்களுக்கு கொடுக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் வயிறு பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
இந்த வசம்பை எரித்து அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயுடன் கலந்து அடிவயிற்றின் மேல் தடவி வந்தால் வாயுத்தொல்லை நீங்கும்.
பாரம்பரியமாக பயன்படுத்தும் இந்த வசம்பு மருந்தானது குழந்தைகளின் சரியான மூளை வளர்ச்சி, பேச்சு திறன், சிறந்த பார்வை திறன், அதிகரித்த விந்து திறன் போன்றவற்றை தருகிறது.
குழந்தைகளுக்கு ஏற்படும் வலிப்பு நோயை தடுக்க இந்த வசம்பு தண்டுகளை தாயத்து வடிவில் குழந்தையின் இடுப்பில் மற்றும் கைகளில் கட்டுவது உண்டு.
வசம்பானது குழந்தைகளுக்கு ஏற்படும் வாயு, வயிற்று, அசெளகரியம் மற்றும் குளிர்ச்சியை நீக்க உதவுகிறது. ஆனால் சிறு குழந்தைகளுக்கு கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். அதிகப்படியாக கொடுப்பது உங்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் சிறு குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன்பு மருத்துவரை அணுகி சரியான அளவு பரிந்துரைக்கப்படுகிறது.
* சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
* வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.
* இதில் முக்கிய விஷயமாக சொல்ல வேண்டுமென்றால் வசம்பை விஷம் அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டுய, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் விஷம் வெளியே வந்து விடும்.
* கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பசியைக் கொடுக்கவும், சோம்பலை நீக்கவும் வசம்பு பயன்படுகிறது.