1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வீட்டிலேயே நோய்களை குணப்படுத்தும் இயற்கை வைத்தியம்..!

1

1. நெஞ்சு சளி: கற்ப்பூரத்தை தேங்காய் எண்ணையில் சேர்த்து நன்கு சூடாக்கி ஆர வைத்து தினம் 2 வேளை நெஞ்சில் தடவ சளி குணமாகும்.

2. வயிற்று வலி: வெந்தயத்தை நெய் சேர்த்து வறுத்து பொடி செய்து மோரில் போட்டு குடிக்க வயிற்று வலி நீங்கும்.

3. பல் கூச்சம்: புதினா இலையை நிழலில் காய வைத்து உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஓரிரு நாளில் பல் கூச்சம் குணமாகும்.

4. வாய்ப் புண்: கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாய்ப் புண் குணமாகும். மற்றும் கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.

5. ஆறாத புண் : விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி 2 வேளை ஆறாத புண்ணில் போட்டால் சீக்கிரம் புண் குணமாகிவிடும்.

6. வேர்க்குரு: குளிக்கும் போது தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.

7. தாய்ப்பால் சுரக்க: வெந்தயத்தை அரிசியுடன் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி குடித்து வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.

8.  குழந்தை வெள்ளையாக பிறக்க: இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவற்றை கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடிசாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகவும் அழகாகவும் பிறக்கும் .

Trending News

Latest News

You May Like