1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் 5 முதல் 10 நிலக்கடலை சாப்பிட்டு வந்தால்...

1

பூமிக்கடியில் தலை வைத்து வெளியே இலை விடுகிற தாவரம், வேர்க்கடலை. இதன் இலைகள் செடியில் பழுத்து மஞ்சள் நிறமடைந்த இரண்டு மாதங்களில் வேர்க்கடலை முற்றிக் கிடைக்கிறது. மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலையில் புரதச் சத்து அதிகம். இன்னொரு சிறப்பு. இதனைச் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் ஓடிவிடும். நெஞ்சு சளியினை நீக்கும் வல்லமையும் வேர்க்கடலை ஸ்பெஷல்.

நிலக்கடலை பற்றிய ஆராய்ச்சியில் பல்வேறு தகவல்களை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். தினமும் கடலையை சிறிதளவு எடுத்துக்கொள்வோர் நீண்ட காலம் நோய்களின்றி வாழ்வதாக கண்டறிந்தனர்.

தினமும் 10 கிராம் அளவு வேர்க்கடலையை சாப்பிட்டால் உடலில் நடக்கக்கூடிய மாற்றங்கள் ஏராளம். இதய நோய், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களில் இருந்து அது நம்மை காத்துக் கொள்ளுமாம். சீனர்கள் தங்களது உணவில் தினமும் கடலையை சேர்த்துக் கொள்கிறார்கள்.தினமும் 5 முதல் 10 நிலக்கடலை சாப்பிட்டால் இவற்றின் பலன் இரட்டிப்பாகி விடும். மற்ற உணவு பொருட்களை போன்றே நிலக்கடலையிலும் பல சத்துக்கள் உள்ளன.

கடலையால் தயாரிக்கப்பட்ட ஏதேனும் உணவு பொருட்களை தினமும் எடுத்துக் கொள்வதால், சுவாச நோய்கள், சர்க்கரை நோய், நரம்பு சார்ந்த பாதிப்புகள் போன்றவை வரவிடாமல் கடலையில் உள்ள வைட்டமின்கள், நார்ச்சத்துக்கள் தடுக்கிறது.

கடலை சாப்பிட்டால் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்பதற்காக கடலையை அள்ளி அள்ளி சாப்பிடக்கூடாது. 10 கிராம் அளவு கடலையை சாப்பிட்டால் தான் இதன் பலன் கிடைக்கும். இந்த அளவில் மாற்றம் இருந்தால் பலன் கிடைக்காதாம்.

கடலை இதயத்தின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறதாம். குறிப்பாக ரத்த நாளங்களில் ஏற்பட கூடிய நோய்களை இவை தடுக்கிறது. மேலும், மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்களிலிருந்தும் இவை காக்கிறதாம். பொதுவாகவே ஆணின் உடலமைப்பும் பெண்ணின் உடலமைப்பும் சற்றே வேறுபட்டிற்கும்.

தினமும் கடலை சாப்பிடுவதால் ஆண் மற்றும் பெண் என இருபாலருக்கும் சம அளவில் இதன் பயன் கிடைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பல ஆராய்ச்சியில் கூறுவது படி, கடலையை தினமும் சாப்பிடுவதால் நன்மையே ஏற்படுகிறது. 10 கிராம் அளவிற்கு அதிகமாக இதனை எடுத்து கொள்வது உகந்தது அல்ல. எனவே, நீங்களும் கடலை சாப்பிட்டு ஆரோக்கியத்தை பேணலாம். 

ஐந்து அல்லது ஆறு மணி நேரம் ஊற வைக்கப்பட்ட வேர்க்கடலை  ஒரு முழுமையான உணவு ஆகும். நீரை வடிகட்டிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்ததாகும்.

வேர்க்கடலையைக் கஞ்சியாக்கி, வாழைப்பழம், தேன் சேர்த்துச் சாப்பிடுவதால், குழந்தைகள் பலம் பெறுவார்கள்.குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு வேர்க்கடலை மிகவும் நல்லது. பாஸ்பரஸ், உப்பு சத்துக்கள், புரத சத்துக்கள்  வேர்க்கடலை அதிகம் அடங்கி உள்ளது. இதிலுள்ள கால்சியம், பொட்டாஷியம் ஆகிய சத்துக்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவடையச் செய்து, மூளையையும் சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கும்.

வேர்க்கடலையை கொறிக்கக் கூடாது. அப்படியே விழுங்கவும் கூடாது. நன்றாக மென்று சாப்பிட வேண்டும். காரணம் வேர்க்கடலை சற்றுத் தாமதமாகத்தான் செரிமானமாகும். மென்று சாப்பிடவில்லை என்றால் வயிற்று வலியை ஏற்படுத்திவிடும்.ஊறிய வேர்க்கடலை ஒரு முழுமையான சத்துணவு. காந்தியடிகள் தினமும் ஒரு கைப்பிடி அளவு நிலக்கடலை சாப்பிடுவார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இதனை நன்கு கழுவிவிட்டு பச்சையாகவே சாப்பிடலாம். ஊற வைக்காமல் சாப்பிட்டால் பித்தம் அதிகரிக்கும்.

எனவே வேர்க்கடலையை ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊற வைத்தால் பித்தம் அதிலிருந்து நீங்கிவிடும். வேர்க்கடலையை உணவில் சேர்த்துக் கொண்டால் நாள் முழுவதற்கும் தேவையான சத்துக்கள் அதில் கிடைத்துவிடும். உடலும் மனமும் புத்துணர்வுடன் சுறுசுறுப்பாக இருக்கும்.ஆஸ்துமா பிரச்னை உடையவர்கள் வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது. அது உணவுக் குழாயில் சளியைக் குறைத்து ஆஸ்துமா பாதிப்பை குறைக்கும். வறுத்த வேர்க்கடலையை விட அவித்த வேர்க்கடலை மிகவும் சத்தானது. அதனுடன் ஒரு வாழைப்பழமும், சிறிதளவு வெல்லம் மற்றும் ஒரு தம்ளர் மோர் குடித்தால் அது சமச்சீரான உணவாகிவிடும்.

Trending News

Latest News

You May Like