1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் காலையில் 3 உலர்ந்த பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால்...

1

"உலர்ந்த பேரீச்சம் பழங்களுடன் ஒப்பிடுகையில், ஈரப்பதம் இல்லாததால் இவை நீண்ட காலம் கெடாது. உலர் பேரீச்சம்பழங்களில் கலோரி அதிகமாக உள்ளதால் எடை குறைப்பு முயற்சிகளில் ஈடுபடுவோர் சற்று குறைவாக உட்கொள்ள வேண்டும். அதிக புரதச்சத்தும் நார்ச்சத்தும் இருப்பதால் உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் சி அதிகம் கிடைக்கும் உணவுகளில் இது முக்கியமானது.

இதில் உள்ள கொழுமியபுரதம் என்னும் லைப்போப்ரோடீன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்த வல்லவை. அதனால் இதயத்திற்கு மிகவும் நல்லது. அத்துடன் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது.இதில் உள்ள நார்ச்சத்து ஜீரண மண்டலத்தை தூண்டி உணவை செரிக்க செய்கிறது.

உலர் பேரீச்சையில் உள்ள நார்ச்சத்து இயற்கையான மலமிளக்கியாக செயல்பட்டு இதை தீர்க்கிறது.

இயற்கை சர்க்கரை (குளுக்கோஸ் மற்றும் பிரக்ட்டோஸ்) உள்ளதால் சார்ந்திருக்கும் போது இரண்டு பழங்கள் உள்ளே தள்ளினாள் புது எனர்ஜி கிடைக்கும்.

கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்பு மற்றும் பற்களை உறுதிப்படுத்துகிறது. கால்சியம் குறைபாட்டால் வரும் எலும்புப்புரை மற்றும் முடக்குவாதத்தை தடுக்க ஒரு கையளவு உலர் பேரீச்சை போதும்.

பி5 வைட்டமின்கள் அதிகம் உள்ளதால் செல் சிதைப்பான் எனப்படும் ஆன்டி ரேடிக்கல் ஐ எதிர்க்கிறது. உடைந்த செல்களை சீராக்குகிறது. உங்களை தோலின் பளபளப்பை கூடி இளமையாக தோன்ற செய்கிறது.

இதில் உள்ள பி5 வைட்டமின்கள் முடி உதித்தலை கட்டுப்படுத்தி வேர்களை வலுவாக்குகிறது. உடைந்த முடிமுடிகளை சீர் செய்கிறது.

 பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டைகளை நாம் தூக்கி எறிவோம். ஆனால் இனி அப்படி செய்ய வேண்டாம். பேரீட்சம்பழத்தில் ஏராளமான மருத்து குணங்கள் உள்ளது. இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் பொடி உடல் பருமனைக் குறைக்க உதவும்.

ஆரோக்கமான செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து மிகுந்த பொருளாக உள்ளது. இதனை நாம் சாப்பிட்டு வரும் போது அடிக்கடி பசிக்காது. கலோரியும் மிகக்குறைவு. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உடலில் உடல்சோர்வு, வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.

பேரீச்சம்பழக் கொட்டை பொடி 

 பேரீச்சம்பழத்தை சாப்பிட்டு விட்டு அதன் கொட்டைகளை நாம் தூக்கி எறிவோம். ஆனால் இனி அப்படி செய்ய வேண்டாம். பேரீட்சம்பழத்தில் ஏராளமான மருத்து குணங்கள் உள்ளது. இதில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதன் பொடி உடல் பருமனைக் குறைக்க உதவும்.

ஆரோக்கமான செரிமானத்திற்கு உதவும் நார்ச்சத்து மிகுந்த பொருளாக உள்ளது. இதனை நாம் சாப்பிட்டு வரும் போது அடிக்கடி பசிக்காது. கலோரியும் மிகக்குறைவு. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்டுகள் உடலில் உடல்சோர்வு, வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை தீர்க்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு பேரீச்சம்பழ விதை எவ்வாறு உதவுகிறது?

பேரீச்சம்பழ விதைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு எவ்வாறு உதவுகிறது என்பதற்கான சில காரணிகளைக் காணலாம்.

  • பேரீச்சம்பழ விதைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை குடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன், சீரான தன்மையை ஊக்குவிக்கிறது. மேலும், இந்த நார்ச்சத்துக்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இந்த பேரீச்சம்பழ விதை உட்கொள்வது நிறைவான உணர்வைத் தந்து, எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இது உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுவதுடன், நீரிழிவு நோய் அபாயத்தையும் தவிர்க்கிறது.
  • இந்த விதைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இவை செல்களின் சேதத்திலிருந்து பாதுகாப்பு அளிப்பதுடன், இதய நோய் அபாயத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது.
  • பேரீச்சம்பழத் தூளில் ஹைப்பர் கிளைசெமிக் நோயாளிகளின் இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைக்கும் திறன் நிறைந்துள்ளது. இது சாதாரண மக்களின் கிளைசெமிக் குறியீட்டை மாற்றாது. நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைகிறது.

கவனிக்க வேண்டியவை
பேரீச்சம்பழ விதைகள் சாத்தியமான பலன்களைத் தருவதாக இருப்பினும், இதை மிதமாக உட்கொள்வது அவசியமாகும். எப்போது மெதுவாகத் தொடங்கி, உடல் எவ்வாறு பதிலளிக்கிறது என்பதைக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் திறனில் பேரீச்சம்பழ விதை எவ்வாரு செயல்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். குறிப்பாக வேறு ஏதாவது உடல்நல பிரச்சனைகள் இருப்பின், எந்தவொரு பொருளையும் எடுத்துக் கொள்ளும் முன் நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனை பெற்று எடுத்துக் கொள்வது நல்லது.

Trending News

Latest News

You May Like