1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த லவங்கப்பட்டை வெந்தயம் தண்ணீர் குடித்து வந்தால்...

1

இந்த வெந்தயம், இலவங்கப்பட்டை சேர்த்த பானத்தைக் குடிப்பது உடலில் பல நல்ல மாற்றங்களை உண்டாக்கும். உடல் பருமன் உள்ளவர்கள் உடல் எடையைக் குறைக்கவும் உடலில் ஏற்படும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், அழற்சி எதிர்ப்பு பணபுகளை அதிகரிக்கவும் இந்த பானதத்தைக் குடிக்கலாம்.

ஊறவைத்த வெந்தயம் மற்றும் லவங்கப்பட்டை தண்ணீரை தினமும் குடித்து வருவதால், நாள்பட்ட அஜீரணக் கோளாறுகளையும் சரிசெய்ய முடியும்.இவையிரண்டையும் சேர்த்து சாப்பிடும்போது வயிறு சம்பந்தப்பட்ட அழற்சியைக் குறைக்கும். குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையை பராமரிக்கும்.

வெந்தயம் மற்றும் இலவங்கப்பட்டை ஆகிய இரண்டிலுமே கரையக்கூடிய நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது.கரையும் மற்றும் கரையா நார்ப்பொருள்கள் செரிமானத்திற்கு உதவும். குடல் இயக்கத்தை எளிதாக்கும். குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டும்.

வெந்தயம், இலவங்கப்பட்டை இரண்டும் சேர்த்து ஊறவைத்த நீர் வயிற்றில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும். இவற்றில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமானப் பிரச்சனைகளால் ஏற்படும் நாள்பட்ட வீக்கத்தைக் குறைத்து. வாய்வுத் தொல்லை, வயிறு வீக்கம் ஆகியவற்றைச் செரிசெய்ய உதவி செய்யும்.

இலவங்கப்பட்டைக்கு இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் ஆற்றல் உண்டு. இன்சுலின் எதிர்ப்பைக் குறைப்பதன் மூலமும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க முடியும்.ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைப்பதற்கும் வயிறு மற்றும் குடல் ஆரோக்கியத்துகு்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் போகும்போது வயிறு வீக்கம், வாய்வுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகிய பிரச்சினைகள் உண்டாகும்.

தினமும் காலை வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை மற்றும் வெந்தயம் ஊறவைத்த நீரைக் குடிப்பதன் மூலம் செரிமான நொதிகளின் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்.இலவங்கப்பட்டைக்கு குடலில் நல்ல பாக்டீரியாக்களையும் என்சைம்களையும் உற்பத்தி செய்யும். அதோடு உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை குடல் சரியாக சரியாக உறிஞ்சவும் உதவுகிறது.

ஊறவைத்த வெந்தயம், இலவங்கப்பட்டை இரண்டையும் ஊறவைத்து அந்த நீரைக் குடிப்பதன் மூலம் உடலின் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்ய முடியும்.
உடலுக்கு ஈரப்பதத்தைக் கொடுக்கும். வயிறு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.உடலின் நீர்ச்சத்து சரியாக இருந்தால், செரிமான ஆற்றல் மேம்பட்டு, மலம் இலகுவாகி, மலச்சிக்கல் நீங்கும்.

ஒரு ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் எழுந்ததும் வெந்தயத் தண்ணீரை வடிகட்டி, வெந்தயத்தை அரைத்து ஒரு கிளாஸ் வெந்நீரில் போடவும்.அதனுடன் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூள் சேர்த்து நன்கு கலக்கவும். தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்தால் சுவையாக இருக்கும்.

Trending News

Latest News

You May Like