1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால்...

1

கொளுத்தும் கோடை வெயிலுக்கு மிகவும் சுவையாக மற்றும் குளிர்ச்சியாக இருக்கும் என்பதால் பல இந்திய மாநிலங்களில் லெமன் வாட்டர் மிக பிரபலமானது. மற்ற சீசன்களில் தேநீர், காபி அல்லது வேறு ஏதேனும் பழச்சாறு அருந்தி தங்கள் நாளை துவக்கும் மக்களில் பலர், கோடையில் லெமன் வாட்டருடன் தங்கள் நாளை தொடங்க நினைக்கிறார்கள். பொதுவாக லெமன் வாட்டர் சுவையாக மற்றும் புத்துணர்ச்சியூட்டுவதாக இருந்தாலும், கூடவே பல எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.

நம்மில் நிறைய பேர் இந்த தவறை செய்கிறோம். கார்பனேட்டட் பானங்கள் தானே உடலுக்குத் தீங்கு. லெமன் ஜூஸ் உடலுக்கு மிகவும் நல்லது என்று பாட்டில்களில் விற்கப்படும் லெமன் ஜூஸ்களை வாங்கிக் குடிப்பார்கள். அது மிகவும் தவறு. அதை இனிமேல் செய்யாதீர்கள்.

அதேபோல வீட்டில் வெறும் லெமன் ஜூஸை தேவைப்படும் போது சமையலுக்கும் சேர்த்து பயன்படுத்திக் கொள்வதற்காக பிரிட்ஜில் லெமன் சாறுகளை சேமித்து வைப்பதுண்டு. அதுவும் இப்போது வினிகர் போல பாட்டில்களில் கிடைக்கின்றன. அதை வாங்கிப் பயன்படுத்துகிறோம். லெமன் சாறாகவே இருந்தாலும் அதில் செயற்கை பதப்படுத்திகள் பயன்படுத்தி இருப்பார்கள். அதனால் அதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.வீட்டிலேயே எப்போதும் ஃபிரஷ்ஷான பழங்களில் இருந்து சாறெடுத்து பயன்படுத்துங்கள்.

இன்று ஏழைகளின் கனியான எலுமிச்சை பழம், கோடை காலத்தில் எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து பார்க்கலாம்…

தொண்டை வலி:

கோடை காலத்தில் சிலருக்கு அதிக நீர்ச்சத்து இழப்பு ஏற்பட்டு, தொண்டை வறட்சி ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க எலுமிச்சை சாறு மிகச்சிறந்த அருமருந்தாகும்.

இதிலுள்ள வைட்டமின் சி, சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. இது தொண்டையை சுத்தப்படுத்துகிறது மற்றும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தொண்டை வலியால் அவதிப்பட்டால். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும்:

கோடை கால வெப்பத்தால் உடலில் அதிக அளவிலான நீரிழப்பு ஏற்படுகிறது. இது சிறுநீர் வெளியேற்றத்தை குறைப்பதோடு, சிறுநீரக கற்கள் உருவாகவும் காரணமாகிறது.

எலுமிச்சை சாறு சிறுநீரில் உள்ள சிட்ரேட்டின் அளவை அதிகரித்து சிறுநீரக கற்களை தடுக்கிறது. சிட்ரேட் கால்சியத்துடன் பிணைக்கிறது, இது சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது.

கோடையில் மலச்சிக்கல்:

கோடையில் அதிகப்படியான வெயிலால் உடலில் உள்ள நீர்ச்சத்து வியர்வையின் வழியே வெளியேறி, உடல் வறட்சியடையும். இப்படி உடலில் போதுமான நீர் இல்லாத போது, ஒருவரால் கழிவுகளை வெளியேற்ற முடியாமல் கழிவுகள் இறுக்கமடைந்து, மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும்.

எனவே அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டால், எலுமிச்சை ஜூஸ் உங்களுக்கு நல்ல நிவாரணமாக அமையும். ஏனெனில் எலுமிச்சை சாறு மற்றும் அதன் தோலில் உள்ள பெக்டின் எனப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து கல்லீரலில் செரிமான நொதிகளின் உருவாக்கத்தை ஊக்குவிக்கிறது. இது உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

நோயெதிர்ப்பு சக்தி:

பருவ காலம் மாறும் போது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் சி நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.

வைட்டமின் சி வீக்கத்தைக் குறைக்கிறது, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் காயங்களை விரைவாக குணப்படுத்த உதவுகிறது. எலுமிச்சை சாறு ஆக்ஸிஜனேற்றத்தின் சிறந்த மூலமாகும். இது ஃப்ரீ ரேடிக்கல்களால் உங்கள் செல்களை சேதப்படுத்தாமல் பாதுகாக்கிறது மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது.

கோடையில் வெயிட் லாஸ்:

கோடை காலத்தில் கொளுத்தும் வெப்பம் காரணமாகவும், அதிகப்படியான வியர்வையாலும் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்கிறார்கள். வாக்கிங், உடற்பயிற்சி, ஜிம் செல்வது போன்ற அன்றாட ஆக்டிவிட்டிகளை தவிர்ப்பவர்கள் கூட உண்டு. இதனால் உடல் எடை கிடுகிடுவென அதிகரிக்கக்கூடும்.

குறிப்பாக நீங்கள் வெயிட் லாஸ் செய்ய முயற்சித்து வருகிறீர்கள் என்றால், தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். இதிலுள்ள பெக்டின் உள்ளது. எலுமிச்சை சாறு நிரம்பிய உணர்வை உண்டாக்கும். எலுமிச்சை சாற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.. இதில் உள்ள குறைந்த அடர்த்தி நார்ச்சத்து உடலில் தேங்கியுள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

சரும பராமரிப்பில் எலுமிச்சை:

எலுமிச்சை சாறு குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க தவுகிறது. அதாவது உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சருமம் கறைகள் இன்றி பிரகாசமாக மாறும். எனவே உங்கள் சருமம் பளபளப்பாக இருக்க தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதை வழக்கமாக்குங்கள்.தினமும் எலுமிச்சை பழச்சாறு குடிப்பவர்கள் தங்கள் PH அளவை சீராக வைத்துக் கொள்கிறார்கள். சமநிலையான PH அளவுகள் ஒளிரும் சருமத்தை உறுதி செய்கின்றன. ஒரு சீரான pH சமநிலை முகப்பரு மற்றும் பிற தோல் பிரச்சனைகளைத் தடுக்கிறது. அதனால் நீங்கள் இன்னும் அழகாக இருப்பீர்கள்.

வாய்துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க தினமும் எலுமிச்சை சாறினை வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர்நாற்றம் ஏற்படாது. அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு அஜீரண கோளறு ஏற்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறு குடித்தால் விரைவில் ஜீரணம் ஆகும்.

எலுமிச்சை பழத்தை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலை முடி நன்கு கருமையாகவும், பொலிவாகவும், மென்மையாகவும் இருக்கும். எலுமிச்சை உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகப்படுத்தி நோய் வராமல் தடுக்கிறது.

எலுமிச்சை கலந்த தண்ணீரை அருந்தும் போது அது உடலில் உள்ள அனைத்து கசடுகளை வெளியேற்றுவதால் செரிமான பிரச்சனை இல்லாமல் போய்விடும் பொதுவாக மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை எழுந்தவுடன் இளம் சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால் மலச் சிக்கல் நீங்கி உடலும் புத்துணர்ச்சி பெறும். 

சிலருக்கு வயிற்றில் காற்று அடைத்தது போல் அழுத்தமாக இருக்கும் இவர்கள் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு அரை டீஸ்பூன் வறுத்துப் பொடித்த சீரகம் சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் உடனே காற்று வெளியேறி வயிறு லேசாக மாறிவிடும்

அதேபோன்று எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் எலுமிச்சை கலந்த தண்ணீரை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும் அடுத்து உடலில் காற்றை சீராக்கி இயக்கும் தன்மை எலுமிச்சைக்கு உண்டு இதனால் எலுமிச்சை சாறு பருகினால் இதயம் நுரையீரல் போன்றவை நன்றாக இயங்கும் இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதால் அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதய படபடப்பை நீக்கும் 

உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்களும் மன பதட்டம் கொண்டவர்களும் தண்ணீரில் அரைமூடி எலுமிச்சைச்சாறு கலந்து குடித்து வரலாம். பித்தத்தை குறைக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை குறைக்கும் கடுமையான வறட்சியை போக்கும் ரத்தத்தை சுத்தமாக்கும் குடல் சுத்தம் அடையும் சிறுநீரக கற்களை கரைக்கும் 

எலுமிச்சை தண்ணீரின் முழுமையான பலனை அடைய வேண்டுமென்றால் பிரஷ்ஷான பலத்தை பயன்படுத்த வேண்டும் ஏற்கனவே அறிந்த பலத்தை பயன்படுத்த கூடாது

Trending News

Latest News

You May Like