1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? நீங்கள் அதிக மன அழுத்தத்துடன் இருக்கும் போது மட்டனை உட்கொண்டால்...

1

மட்டன் எனும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

நீங்கள் அதிக மன அழுத்தத்துடன் இருக்கும் போது, மட்டனை உட்கொண்டால், மன அழுத்தம் நீங்கி நல்ல மன நிலையை உணரலாம்.

மட்டனில் இருக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர பொருட்கள், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். அதிலும் வாரத்தில் 2 முறை மட்டனை உட்கொண்டு வந்தால், உங்கள் உடலில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்களே உணரலாம்.

படிக்கும் குழந்தைகளுக்கு சிக்கனை விட, மட்டன் அதிகம் கொடுத்து வந்தால், மூளையின் செயல்பாடு அதிகரித்து, ஞாபக சக்தியும் அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார்கள்.

மட்டனில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இது உடலில் நல்ல தரமான இரத்தத்தை மேம்படுத்தி, உள்காயங்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கும். அதிலும் பெண்கள் மட்டனை அதிகம் சாப்பிட்டு வர, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடுமையான வலியைத் தடுக்கலாம்.

மட்டனை தொடர்ந்து உட்கொண்டு வந்தால், அதில் உள்ள சத்துக்கள் நீரிழிவு ஏற்படுவதைத் தடுக்கும். குறிப்பாக டைப்-2 நீரிழிவு ஏற்படுவதை மட்டன் சாப்பிடுவதன் மூலம் தடுக்கலாம்.

மட்டன் இதயத்தை வலிமைப்படுத்தும். ஏனெனில் மட்டனில் சாச்சுரேட்டட் கொழுப்புள்ளள் குறைவாகவும், அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளதால், இதய நோய் வரும் வாய்ப்பு குறையும்.

மட்டனில் உடலில் உள்ள நல்ல கொழுப்புக்களின் தரத்தை அதிகரித்து, கெட்ட கொழுப்புக்களை நீக்கும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளது. எனவே மட்டனை சாப்பிட்டு வந்தால், உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

விரைவில் உடல் எடையைக் குறைக்க நினைப்போர், மட்டனை சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் இதில் உள்ள புரோட்டீன் பசியைக் கட்டுப்படுத்துவதோடு, நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும். மேலும் இதில் கொழுப்புக்கள் குறைவாக இருப்பதால், இது உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும்.

மட்டன் சாப்பிட்டால், அதில் உள்ள பி வைட்டமின்கள், செலினியம் மற்றம் கோலைன் போன்றவை, எந்த வகையான புற்றுநோயும் தாக்காமல் உடலைப் பாதுகாக்கும்.

ஆட்டிறைச்சி டோர்பிடோ மற்றும் பித்த நீரைக் கொண்டிருக்கிறது. இவை ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மை பிரச்சனைகளை சரிசெய்யும். மேலும் ஆண்கள் மட்டன் அதிகம் சாப்பிட்டால், அவர்களின் உடல் வலிமையும் அதிகரிக்கும்.
 

ஆட்டு ஈரல்

ஆட்டு ஈரல் அதிகப்படியான இரும்புச்சத்து புரதம் வைட்டமின் கே வைட்டமின் பி6 வைட்டமின் பி12 ஃபோலேட் போன்ற சத்துக்களை கொண்டது. இது நம் உடலில் புதிய சிவப்பணுக்கள் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகையை குணமாக்கும்.

ஆட்டு குடல்

இது பலரால் போட்டி என அழைக்கப்படுகிறது. செரிமானம் சார்ந்த எந்த ஒரு பிரச்சினை உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. குறிப்பாக அல்சர் என்று சொல்லக்கூடிய வயிற்று புண்களை குணமாக்கும் மற்றும் செரிமான உறுப்புகளை வந்து வலுவாக்கி சீராக இயங்குவதற்கும் உதவிசெய்யக்கூடியது ஆட்டு குடல்.

இருதயம்

இதில் இருக்கக்கூடிய வைட்டமின் ஏ மற்றும் பி வைட்டமின் சி போன்ற சத்துக்கள் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய தமனிகள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும், இருதய பலவீனம் இதய படபடப்பு போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.

ஆட்டு மூளை

ஆட்டின் மூளை மூளை மற்றும் நரம்பு மண்டலம் சீராக செயல்படுவதற்கு உதவி செய்யும், குறிப்பாக அல்சைமர் என சொல்லக்கூடிய ஞாபக மறதி நோயை குணமாக்கும்  

Trending News

Latest News

You May Like