1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வயதானவர்கள் கடலை எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால்..

1

வீட்டில் பயன்படுத்தும் எண்ணெய் தான் நமது ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. நம் பாட்டி தாத்தா காலங்களில், நிலக்கடலை எண்ணெய் பரவலாக பயன்படுத்தப்பட்டது.  ஆனால் பின்னாளில் கடலை எண்ணெய் பயன்பாடு படிப்படியாக குறைந்து விட்டது. இப்போது சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரன் ஆயில் பயன்படுத்த தொடங்கி விட்டோம். ஆனால் ஒரே மாதிரியான எண்ணெய்க்கு பதிலான எண்ணெய்களை சுழற்சி முறையில் நமது உணவில் சேர்த்து கொள்வது நல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

கடலை எண்ணெயில் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் உள்ளன. லினோலிக் அமிலம் மற்றும் ஒலிக் அமிலம் போன்ற சத்துக்களும் கிடைக்கின்றன. இவை இரண்டும் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. நெஞ்செரிச்சல் வராமல் தடுக்கிறது. இந்த எண்ணெயில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும் ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன, இதனால் உடல் செல்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. வேர்க்கடலை எண்ணெய் தோல் ஆரோக்கியம், நரம்பு செயல்பாடு மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிற்கு அவசியமாகும்.

மற்ற எண்ணெய்களுடன் ஒப்பிடும்போது நிலக்கடலை எண்ணெயை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தினாலும் அது எந்தவிதமான பாதகமான விளைவையும் ஏற்படுத்தாது. ஆனால் சில வகையான எண்ணெயை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தினால்.. அந்த எண்ணெயில் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகள் தோன்ற வாய்ப்பு உள்ளது. ஆனால் கடலை எண்ணெயை அதிக வெப்பநிலையில் வைத்திருந்தாலும் அது தீங்கு விளைவிக்கும் கலவைகளை உருவாக்காது. எனவே டீப் ஃப்ரை உணவுகள் செய்யும் போது கடலை எண்ணெயைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.

உணவில் கடலை எண்ணெய் அதிகம் உபயோகிப்பதால் அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து முடிகொட்டல் பிரச்சனையை போக்கி தலைமுடி ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியும் பெற உதவுகிறது.

வயதானவர்கள் கடலை எண்ணெய் பயன்படுத்தி செய்யப்படும் உணவுகளை அதிகம் சாப்பிட்டு வருவதால் அவர்களின் மூளை செல்கள்  புத்துணர்ச்சி பெரும். நரம்புகள் பாதிப்பு, ஞாபக மறதி போன்ற குறைபாடுகளும் நீங்கும்.

செரிமான திறன் சரிவர இல்லாதவர்கள், வயிற்று போக்கால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட காலம் மலச்சிக்கல் பிரச்சனை கொண்டவர்கள்  கடலை எண்ணெய் கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது சிறந்த பலனளிக்கும்.

கடலை எண்ணெய் சரியான அளவில் பயன்படுத்தும் நபர்களுக்கு, அவர்களின் சருமத்தில் வயதாவதால் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி, இளமை  தோற்றம் மேலோங்கும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கடலை எண்ணெயில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். இது குறைந்த கொலஸ்ட்ரால் அளவைக் கொண்டுள்ளது. குறிப்பாக நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. எனவே உங்கள் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவு குறையும்.

முப்பது வயதை கடந்த பலருக்கும் கடின உடலுழைப்பினாலும், உடலின் தேவையான சத்துக்கள் இல்லாததனாலும் உடலின் அனைத்து மூட்டு பகுதிகளிலும் வலி ஏற்படுகிறது. சிறிதளவு கடலை எண்ணையை எடுத்து வலி ஏற்படும் மூட்டு பகுதிகளில் நன்கு தடவி, சிறிது நேரம் மெதுவாக பிடித்து விட்டால் சிறிது நேரத்திலேயே மூட்டு வலி நீங்கும்.

வயிறு ஆரோக்கியமாக இருந்தால்தான் நம்மால் நல்ல காரியத்தைச் செய்ய முடியும். நிலக்கடலை எண்ணெயில் சமைத்த உணவுகளை உண்பதால் செரிமான மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராது. மேலும் உடல் ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சிக் கொள்கிறது. அதனால் செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும்.

நிலக்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற சிற்றுண்டியாகும், பொதுவாக நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் என்ன குறைந்த கிளைசெமிக் கொண்ட ஸ்நாக்ஸ்களை தேர்வு செய்ய சிரமப்பட வேண்டியிருக்கும். அவர்கள் வேர்க்கடலையை ஸ்நாக்ஸாக எடுத்துக் கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.

தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்த சத்து உடலில் குறைவதால் தலைமுடி வலுவிழந்து முடிகொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. உணவில் கடலை எண்ணெய் அதிகம் உபயோகிப்பதால் அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து முடிகொட்டல் பிரச்சனையை போக்கி தலைமுடி ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியும் பெற உதவுகிறது.

வேர்க்கடலையை வேகவைத்தோ, ஊறவைத்தோ, வறுத்தோ, வாரத்திற்கு மூன்று முறையாவது சாப்பிட்டால், ஆண்களுக்கும் பெண்களுக்கும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் 58% குறைவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

உடலில் போலிக் அமிலத்தின் சதவீதம் குறியும் போது ரத்தத்தில் சிவப்பு ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இது எதிர்காலத்தில் ரத்த சோகை ஏற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. எனவே கடலை எண்ணெய்யை பயன்படுத்துவதால் அந்த பாதிப்பை தவிர்க்கலாம்.

எந்தவொரு உணவுப் பழக்கத்தை பின்பற்றும்போதும், ​​நிதானம் முக்கியமானது. கடலை எண்ணெய் விஷயத்திலும் இதே விதி பொருந்தும். மேலும், உணவுமுறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுக வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது

Trending News

Latest News

You May Like