1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? தயிரில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால்...

1

தினசரி சாப்பிடும் உணவில் தவறாமல் இடம் பிடிக்கவேண்டியது தயிர். மதிய உணவு மெனுவில் குழம்பு, கூட்டு, பொரியல் என பலவகைகள் இருந்தாலும், உணவு உண்ட நிறைவைக் கொடுப்பது தயிர்தான். பாலில் இருந்து ஏராளமான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் தயிருக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தினமும் மதியம் உணவு உட்கொள்ளும் போது, தயிரை சாதத்துடன் சேர்த்து சாப்பிடாமல், தனியாக ஒரு பௌலில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. ஏனெனில் தயிரில் லாக்டிக் அமிலம் அதிகம் இருப்பதோடு, நல்ல பாக்டீரியாவான புரோபயோடிக்குகளும் ஏராளமாக நிறைந்துள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதை விரும்புவார்கள். இவ்வாறு சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு நன்மை ஏற்படுமா?

ஆயுர்வேத மருத்துவத்தின்படி தயிருடன் சர்க்கரையை கலந்து சாப்பிடும்போது, மூளையின் செயல்பாட்டுக்குத் தேவையான குளுக்கோஸ் போதுமான அளவு கிடைக்கும். தயிர் மற்றும் சர்க்கரை கலவை, உடலின் ஆற்றலை அதிகரித்து, நாள் முழுவதும் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். சருமம் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் இருக்கச் செய்யும்.

தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் செரிமான மண்டலம் குளிர்ச்சி அடையும். வயிற்றில் உருவாகும் அதிக அளவிலான அமிலச் சுரப்பும், அதனால் உண்டாகும் நெஞ்செரிச்சலும் கட்டுப்படும். மதிய உணவு சாப்பிட்டு முடித்ததும் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மசாலா மற்றும் காரம் காரணமாக ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறையும். மலச்சிக்கல், வயிற்று பொருமல் போன்ற பிரச்சினைகளும் தீரும்.

காலையில் எழுந்தவுடன், உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒரு கப் தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் தொற்றினால் ஏற்படும் எரிச்சல் குணமாகும்.மேலும் இது சிறுநீர் குழாயை சுத்தப்படுத்தி குளிர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.உடல் பருமன் பிரச்சினையால் சிரமப்படுபவர்கள், தயிருடன் சர்க்கரை கலந்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உடலில் அதிகப்படியான கலோரிகள் சேர்வதற்கு வழிவகுத்து உடல் எடையை அதிகரிக்கும்.

தயிருடன் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் போது, உடலின் ஆற்றல் உடனடியாக அதிகரிக்கப்படும். குறிப்பாக கோடையில் இப்படி சாப்பிடுவதால், அதிக வேலையால் வியர்வையின் மூலம் இழந்த சத்துக்களை மீண்டும் பெற்று, சுறுசுறுப்பாக இருக்கலாம்.

தயிரில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஏராளமான அளவில் உள்ளது. இவை எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்க தேவையான சத்துக்களாகும். ஒருவர் தயிருடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், அது ஆர்த்ரிடிஸைத் தடுக்க உதவி, பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் ஏராளமான அளவில் நிறைந்திருப்பதால், இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், வெள்ளையணுக்களின் அளவை மேம்படுத்த உதவி, உடலை நோய்த்தொற்றுகளிடமிருந்து பாதுகாக்கும். எனவே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைத்தால், தயிரை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தயிரில் உள்ள புரோபயோடிக்குகள் செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவும். மேலும் தயிர் எளிதில் செரிமானமாகும். எனவே லாக்டோஸ் சகிப்புத்தன்மை கொண்டவர்கள் கூட இதை சாப்பிடலாம். ஏனெனில் இது நொதிக்கும் செயல்முறையின் போதே, லாக்டோஸை உடைத்துவிடுவதால், எவ்வித பிரச்சனையையும் ஏற்படுத்தாது.

கார்டிசோல் என்னும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் தான், இடுப்பைச் சுற்றி அதிகப்படியான கொழுப்புக்கள் தேங்குகின்றன. தயிரில் உள்ள கால்சியம், இந்த கார்டிசோல் ஹார்மோனின் உற்பத்தியைக் குறைத்து, எடையைக் குறைக்க உவும். மேலும் தயிர் நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கும். இதனால் கண்ட உணவுகளை உண்பது தடுக்கப்படும்.

தயிரில் எளிதில் கரையக்கூடிய புரோட்டீன் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும். அதிலும் க்ரீக் தயிரை சாப்பிடுவதால், இதய நோயின் அபாயம் குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருப்பதாக ஆய்வுகளும் கூறுகின்றன. முக்கியமாக ப்ளேவர் சேர்க்காத தயிரைத் தான் தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். ஆனால் சர்க்கரை சேர்க்காமல் தயிர் சாப்பிடுவதே சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.

Trending News

Latest News

You May Like