இது தெரியுமா ? தினமும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிடுவதால்...
நீங்கள் கூடுதல் எடையால் கஷ்டப்படுகிறீர்கள் என்றால் வறுத்த பொட்டுக்கடலையை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதில் புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் இருப்பது ஒட்டுமொத்த கலோரியை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது.100 கிராம் வறுத்த பொட்டுக்கடலையில் 18.64 கி புரோட்டீன், 16.8 கி நார்ச்சத்துக்கள் போன்ற சத்துக்கள் உள்ளன. எனவே எடை இழப்புக்காக வறுத்த பொட்டுக்கடலையை உட்கொள்ளுங்கள்.
பெண்கள் + குழந்தைகள் + நீரிழிவு நோயாளிகள் + உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் + கர்ப்பிணிகள் என அனைத்து தரப்பினருக்குமே இந்த பொட்டுக்கடலை தரும் நன்மைகள் ஏராளம்.
வறுத்த பொட்டுக்கடலையில் மாங்கனீஸ், போலேட், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்ற இதய நோய்களை குறைக்கும் சத்துக்கள் உள்ளன. இது இதய நோய் அபாயத்தை தடுக்க உதவுகிறது .
வறுத்த பொட்டுக்கடலை நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இது குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை சரி செய்கிறது. இது சர்க்கரை செயலிழப்பில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. இது உங்களை நீரிழிவு நோயில் இருந்து விழிப்புடன் இருக்க உதவுகிறது.
ஒரு கைப்பிடி சாப்பிட்டாலே, வயிறு நிரம்பின உணர்வு தரும்.. பசி எடுக்காது.. செரிமான பிரச்சனைகளையும் பொட்டுக்கடலை சரி செய்கிறது.. இதனால் குடல் பாதுகாப்பும் பராமரிக்கப்படுகிறது.. கெட்ட கொழுப்புக்கள் கரைக்கப்படுகின்றன.. உயரதிற்கு ஏற்ற உடல் எடையை பெற முடியும். குறைந்த கலோரியில் நிறைந்த புரோட்டீன் உணவாக உள்ளது..
சர்க்கரை நோயாளிகள், எதை சாப்பிடுவது என்ற சிக்கல் உள்ளபோது, இந்த வறுத்த பொட்டுக்கடலை அதற்கு உதவுகிறது.. காரணம், குளுக்கோஸ் ஏற்ற இறக்கங்களை இந்த கடலை சீராக்குகிறது.. இதிலுள்ள வைட்டமின் சத்துகள், எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகின்றன.
மாதவிடாய் நேரத்தில், அதிக ரத்தப்போக்கு இருந்தால், ஒரு கைப்பிடி அளவு பொட்டுக்கடலை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாலே ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும் என்பார்கள். பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது சத்தான உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம்.
கர்ப்பிணி பெண்கள், சிறிதளவு பொட்டுக்கடலை சாப்பிடுவதால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.. வயிற்று பிரச்சனைகளும் நெருங்காது.. ஒரு பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதன் மூலம் பெண்களின் நாட்களில் ஏற்படும் அதிக மாதவிடாய் இரத்தப் போக்கை கட்டுப்படுத்தலாம்.
அதேபோல, தலைமுடி வலுவாகவும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமானால், இந்த பொட்டுக்கடலை அதற்கும் தூண்டுகோலாகின்றன.. அத்துடன், இளநரை பிரச்சனையும் நீங்கிவிடுகிறது. உடல் மெலிந்து உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளவர்கள், இந்த பொட்டுக்கடலை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
வறுத்த பொட்டுக்கடலை புரதத்தின் சிறந்த ஆதாரமாகும். என்.சி.பி.ஐ.யில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, உங்கள் எடை இழப்புக்கு புரத ஆதாரமான உணவை எடுப்பது நல்லது. எனவே எடை இழப்புக்கு என்று வரும் போது வறுத்த பொட்டுக்கடலையை தேர்ந்தெடுங்கள்.
எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கவும், அசாதாரண எலும்பு உருவாக்கத்திற்கும், எலும்பு பலவீனம், மூட்டு வலிகள் போன்ற நோய்களை தடுக்கவும் பொட்டுக்கடலை உங்களுக்கு உதவுகிறது.
வறுத்த பொட்டுக்கடலையில் உள்ள பாஸ்பரஸ் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.மேலும், உங்கள் உடலில் நிகழும் பல உயிரியல் செயல்முறைகளில் பாஸ்பரஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.
வறுத்த பொட்டுக்கடலையில் செலினியம் அதிகளவில் காணப்படுகிறது. இது ஒரு சக்தி வாய்ந்த ஆக்ஸினேற்றி ஆகும். பப்மெட் இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு செலினியத்தின் நன்மைகளை ஆராய்ந்தது மற்றும் டி.என்.ஏ சேதத்தை குறைப்பதற்கும் தனிநபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும் செலினியம் திறன் ஒரு சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
எனவே இந்த சூப்பர் ஃபுட் உணவை தேர்ந்தெடுக்கும் போது பூச்சிக் கொல்லி இல்லாத பொட்டுக்கடலையை கடைகளில் வாங்கி உபயோகப்படுத்துங்கள். கூடுதல் நன்மைகளை பெறுவீர்கள்.