1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? நீரழிவு நோயை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்க!

1

பீர்க்கங்காய்( Silk Squash) வெள்ளரி இனத்தை சேர்ந்த ஒரு காய்கறியாகும். இது இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் பிரபலமான காய்கறியாக உள்ளது. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் துரை, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பீராகாயா, தமிழ்நாட்டில் பீர்கங்கை, கேரளாவில் பீச்சிங்கா, மணிப்பூரில் செபோட், ரிட்ஜ் சுண்டைக்காய் என பல பெயர்களில் அழைக்கப் படுகிறது. இது பொதுவாக ஜப்பான், வியட்நாம் , பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது . இதன் இலை, விதைகள், வேர் என முழுத்தாவரமும் மருத்துவக் குணம் நிறைந்தது.

விதைகள் மலச்சிக்கலை தடுக்கவும், கபம் வெளியேற்றவும் உதவுகிறது. இதன் எண்ணெய் தோல் நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இலைகளை பொடித்து இரத்தக் கட்டிகளின் மீது தடவ பயன்படுத்த படுகிறது. இலையின் சாறு கண் வலிக்கு உதவுகிறது. வேரானது நீர்க் கோர்வைக்கும், மிதமான பேதி மருந்தாகவும் பயன்படுகிறது. பீர்க்கங்காய் பயன்படுத்தி சூப்கள், பொரியல், வறுவல் என பலவிதங்களில் சமைக்கலாம். பண்டைய ஆயுர்வேத மருத்துகளில் கூட இது அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிஞ்சு பீர்க்கங்காயை விட முற்றிய பீர்க்கங்காயே சமையலுக்கு சிறந்தது. பீர்க்கங்காயில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டமின்களும் தாது உப்புக்களும் அதிக அளவில் உள்ளன. மேலும் கார்போஹைட்ரேட்டுகள், கரோட்டீன், கொழுப்பு, புரதம், ஃபைட்டின், அமினோ அமிலம், அலனைன், ஆர்ஜினைன், கனிகளில் லினோலிக் அமிலம், ஒலியிக், பால்மிட்டிக், ஸிடியரிக் அமிலம் போன்றவை காணப்படுகின்றன.

ஆரோக்கிய நன்மைகள்:
முற்றிய பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் சிறந்தது. அதாவது டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் விளங்குகிறது. கஷாயம் மாதவிடாய் மற்றும் சிறுநீர்க் கோளாறுகளுக்கு பயன்படுகிறது.

வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதைத் தடுத்து, வயிற்றில் புண்கள் வராமல் தடுக்கும். மேலும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

பீர்க்கங்காயின் இலைகளைச் சாறாக்கி லேசாக சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் நீரிழிவு கட்டுப்படும். பாகற்காய்க்கு பதிலாக இதைச் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

இதன் இலைகளை அரைத்துப் புண் மற்றும் சொறி, சிரங்கு இருக்கும் இடங்களில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.

இரத்த சோகை, தோல் நோயாளிகள் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி அந்த நீரை வடி கட்டி அருந்தி வர இரத்த விருத்தி உண்டாகும்.

பீர்க்கங்காய் நோய்க்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. ஆகவே இதனை சாப்பிட்டு வந்தால் கண்பார்யடையும்,நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

தோல் நோயாளிகள் பீர்க்கங்காய் சாப்பிட்டு வந்தால் தோல் நோய்களில் இருந்து விடுபடலாம்.

பீர்க்கங்காய் பசியுணர்வை கட்டுப்படுத்தி எடையை குறைக்க உதவுகிறது.

Trending News

Latest News

You May Like