1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? மண்பானை இயற்கையின் மிகச்சிறந்த ‘வாட்டர் பில்டர்’... பானை தண்ணீர் குடிப்பதால்...

1

பொதுவாக நாம் குடிக்கும் தண்ணீர் மாசு அடைந்திருக்கிறது என்று பிரச்சாரம் செய்யப்படுவதை கண்டிருக்கலாம். அதனால் தண்ணீர் குறித்த பயம் தோன்றக்கூடும். இதனால் பெரும்பாலும், பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரைப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

களிமண் பானையில் உள்ள நீர் சரியான விகிதத்தில், குளிர்ச்சியில் குடிநீரை வைத்திருக்க உதவும்.
இது தொண்டைக்கு இதமாகவும், மென்மையாகவும் இருக்கும். இதனால் சளி இருமல் உள்ளவர்கள் கூட இதனை பயப்படாமல் அருந்தலாம்.ஃபிரிட்ஜ் தண்ணீர் குடித்தால் ஏற்படுவது போல சளி, இருமல் தொல்லை எதுவும் இருக்காது.

களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும். கோடைக்காலத்தில் பானை நீரை அருந்தினால் தேன் போன்ற இனிமையான சுவை இருக்கும். இயற்கையாகவே பானைகளில் உள்ள நீர் குளிர்ச்சியடைகிறது. தண்ணீரின் சுவையும் அதிகரிக்கும்.. ஏனெனில் மண் பானையில் உள்ள மண் தண்ணீரை உறிஞ்சி வெளியே அனுப்புகிறது.

மண்பானையில் குடிநீரை ஊற்றி வைத்து 2 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வைத்திருந்தால், அந்தத் தண்ணீரில் உள்ள மாசுப் பொருள்கள் பலவற்றையும் மண்பானை உறிஞ்சிவிடும். மண்பானையே இயற்கையின் மிகச்சிறந்த ‘வாட்டர் பில்டர்’.

கோடைக்காலத்தில் வெயில் காரணமாக சில நோய்கள் தொற்றிக்கொள்ளும். இதைத்தடுக்க மண் பானை நீர்  சிறந்த இயற்கை மருந்து. கனிமச் சத்துகள் நிறைந்த பானை நீர் உடலுக்கு பல நோய் எதிர்ப்பு சக்திகளை அளிப்பது மட்டுமன்றி தீராத தாகத்தையும் ஒரு கிளாஸ் நீரில் தீர்த்துவிடும்.

மண் பானையில் நீர் அருந்துவதால் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதில் இருக்கும் மினரல்கள் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.

களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் டெஸ்டோஸ்டிரோன் அளவை சமன் செய்ய உதவுகிறது.
இது உங்களுடைய உடலின் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) மேம்படுத்த உதவுகிறது.

மண் பானை தண்ணீரில் இயற்கையாக இருக்கும் ஆல்கலைன் பண்பு நம்முடைய உடலின் பி.எச் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.நம்முடைய உடலின் நீர்ச்சத்தைத் தக்க வைத்துக் கொள்ள இந்த ஆல்கலைன்கள் உதவுகின்றன.அதனால்தான் மண் பானை குடிநீரைக் குடிக்கும்போது தாகம் தீர்ந்ததாக உணர்கிறோம்.

குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை அருந்தும் போது சில பின்விளைவுகள் ஏற்படும். மண் பானை நீர் எந்த பக்கவிளைவுகளுமற்றது. குறிப்பாக சளி, இருமல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, தொண்டை புண் போன்ற பிரச்னைகளுக்கு பானை நீர் சிறந்த தேர்வு.

வீட்டில் மணல் பரப்பி அதன் மேல் பானை வைத்து குடிநீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள். அடிக்கடி மணல் ஈரப்பதத்துடன் இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அப்போதுதான் நீர் குளுர்ச்சியாக இருக்கும். கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.

கோடை காலத்தில் இருக்கும் அதிகப்படியான வெம்மையின் காரணத்தால் சரும நோய்கள் முதல் அம்மை முதலிய பல உடல் சார்ந்த பிரச்சினைகள் உண்டாகும்.மண் பானை நீரில் கனிமச் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் அது கோடை காலங்களில் உண்டாகும் பருவ கால நோய்களை சரிசெய்ய உதவும்.

Trending News

Latest News

You May Like