இது தெரியுமா ? சளி, இருமல் காய்ச்சல் காலங்களில் இரண்டு இலையை கிள்ளி நீரில் கொதிக்க வைத்து ..

பருவகால மாற்றங்களில் உண்டாகும் சளி, இருமல் காய்ச்சலுக்கு கைவைத்தியமாக இதை பயன்படுத்துவதுண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற மூலிகையாக பார்க்கப்படும் இதை உணவாக சேர்க்கலாம். குறிப்பாக மழை மற்றும் குளிர்காலங்களில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கற்பூரவல்லியை ரசம் வைத்து தினசரி உணவில் சேர்க்கலாம். இதை எப்படி சேர்ப்பது, இதன் நன்மைகள் என்ன..?
Also Read - மன்னிப்பு கேட்டார் மோகன்லால்..!
தேவையான பொருள்கள்
- தண்ணீர் - 2 கப்
- கற்பூரவல்லி இலைகள் - 10
- புளி - பெரு நெல்லி அளவு அல்லது சுவைக்கு ஏற்ப
- தக்காளி - 1 பொடியாக நறுக்கியது
- பூண்டு- 10 பற்கள்
- பெருங்காயத்தூள்- அரை டீஸ்பூன்
- மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
- உப்பு- தேவைக்கு
- கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை - இறுதியாக தூவுவதற்கு
- தாளிக்க
- கடுகு - தேவைக்கு
- நல்லெண்ணெய் - தாளிக்க அளவு
- வர மிளகாய் - 1 அல்லது 2
- கறிவேப்பிலை- சிறிது
- அரைக்க
- கற்பூரவல்லி இலை 1 அல்லது 2
- தனியா - 1 டீஸ்பூன்
- மிளகு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- தக்காளி - 1
- பூண்டு பற்களை மேல் தோல் உரித்து தட்டி வைத்துகொள்ளவும்
- புளியை கரைத்து கொள்ளவும்.
- கற்பூரவல்லி இலையை பொடியாக நறுக்கி இடித்து கொள்ளவும். சாறு இருந்தால் அதை அப்படியே சேமிக்கவும்.
- அரைக்க கொடுத்திருக்கும் பொருள்களை மிக்ஸியில் சேர்த்து நன்றாக கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.
- வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பிறகு தட்டி வைத்த பூண்டு சேர்க்கவும்.
- இப்போது அரைத்த பொடி, மஞ்சள் சேர்த்து புளிகரைசலை ஊற்றவும்.
- இலேசாக கொதிக்கும் போது அதில் தட்டி வைத்துள்ள கற்பூரவல்லி இலை சேர்த்து உப்பு, பெருங்காயம் சேர்த்து உப்பு போட்டு இறக்கவும்.
- கொத்துமல்லித்தழை தூவிவிடவும்.
- இதை அப்படியே சூப் போல் ஆக்கி குடிக்கலாம்.
- சற்று காரமான புளிப்பான தொண்டைக்கு இதமான சுவையான ரசம் தயார்.
கற்பூரவல்லி என்னும் மூலிகையை குழந்தைகளுக்கு கொடுக்கும் கைவைத்திய மூலிகையில் சேர்த்தியே. சளி, மூக்கில் நீர் வடிதல், மூக்கு ஒழுகுதல், தொண்டை வலி, ஜலதோஷம் போன்ற நாட்களில் இதை நீரில் கொதிக்க வைத்து கொடுக்கலாம் என்பதால் குழந்தைகளுக்கு இதை கொடுப்பதில் தவறில்லை. ஆனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் போது காரம் சற்று குறைக்க வேண்டும்.
நாள் ஒன்றுக்கு இரண்டு முறை இந்த ரசத்தை கொடுக்கலாம். குழந்தைக்கு இட்லியில் ஊற்றி பிசைந்து கொடுக்கலாம். சாதத்தில் ரசம் விட்டு பிசைந்து கொடுக்கலாம். இது இயற்கை மூலிகை என்பதால் எப்போதும் பக்கவிளைவு கொடுக்காது. குழந்தைக்கு முதல் முறை கொடுக்கும் போது ஒவ்வாமை ஏற்படுகிறதா அல்லது ஒத்துகொள்கிறதா என்பதை கவனித்து கொடுக்க வேண்டும்.
கற்பூரவல்லி வைரஸ் தொற்றுகளுக்கு தீர்வாக இருக்கும். இந்த சாற்றில் இருக்கும் கார்வாக்ரோல் என்னும் வேதிப்பொருள் வலுவான வைரஸ் தடுப்பு செயல்பாடுகளை கொண்டுள்ளது. இது ஆர் என் ஏ வைரஸ் தாக்குகிறது. மேலும் இந்த வைரஸ் உடலில் பாதிக்காமல் தடுக்க செய்கிறது என்று ஆய்வுகள் கூறுகிறது. காய்ச்சலின் போது இந்த ரசம் சாப்பிடுவது சளி, இருமல், தொண்டை புண் மற்றும் காய்ச்சலின் தீவிரத்தை குறைக்கலாம்.
கற்பூரவல்லி இலையில் இருக்கும் தைமால் மற்றும் கார்வாக்ரோலின் ஆனது சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகளை கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இது பாக்டீரியா தொற்றூக்கு எதிராக உடலை பாதுகாக்கின்றன. ஆப்பிளை விட கற்பூரவல்லி இலை அதிக ஆக்ஸிஜனேற்ற செயல்பாடுகளை கொண்டுள்ளது என்று பல சான்றுகள் வெளிப்படுத்தியுள்ளது. கற்பூரவல்லி இலையில் வைட்டமின் ஏ மற்றும் சி இருப்பதால் இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கலாம்.
மழை மற்றும் குளிர்காலங்களில் வயிறு ஆரோக்கியத்தை பாதுகாக்க கற்பூரவல்லி ரசம் உதவும். இது செரிமான அமைப்பின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு உதவும் நார்ச்சத்து கொண்டுள்ளது. இது குடல் இயக்கங்களை ஒழுங்குப்படுத்துவதால் குடல் கழிவுகளை முழுமையாக நீக்குகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பின் சீரான செயல்பாட்டை தக்கவைத்து குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் இரைப்பை குடல் பிரச்சனைகளை தடுக்கவும் இவை உதவுகிறது.