1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வாரத்துல ஒரு நாள் அரை கிளாஸ் வேப்பிலை ஜூஸ் குடிச்சா...

1

இன்றைக்கும் கிராமப்புறத்து மக்கள் வேப்பிலைகளை வெறும் வாயில் அப்படியே மென்று சாப்பிடுவார்கள். கசப்பே தெரியாது. சகப்பாக இருப்பதாக உணர்ந்தால் அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் கூட சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

வேப்பிலையில் அதிகப்படியான ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் இருக்கின்றன. இவை நோய்களையும் இன்ஃபிளமேஷன்களையும் உண்டாக்கும் நோய்த்தொற்றுக்களை எதிர்த்துப் போராடுவம் பண்புகளைக் கொண்டிருக்கிறது.

இந்த ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி நோய்கள் வராமல் தடுக்க உதவி செய்யும்.

உடலின் பல்வேறு பகுதிகளிலும் கழிவுகள் தேங்குவதால் தான் உடலில் பல பிரச்சினைகள் உண்டாகின்றன.

குறிப்பாக கொலஸ்டிரால் சேருவது, அஜீரணக் கோளாறு, உடல் பருமன், தொப்பை என நமக்கு இருக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு காரணம் உடலில் உள்ள கழிவுகள் முறையாக வெளியேறாதது தான்.

வாரத்தில் ஒரு நாள் வேப்பிலையை ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது உடலில் உள்ள கழிவுகள் அவ்வப்போது வெளியேற்றப்பட்டு உடல் தூய்மையாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு வேப்பிலையை அருமருந்து என்றே சொல்லலாம். ஆன்டி டயாபடீக் பண்புகள் கொண்ட வேப்பிலையை வாரத்தில் ஒரு நாள் ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது ரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவி செய்யும்.

முடிந்தால் தினமும் 10 வேப்ப இலைகளை மென்று சாப்பிட்டு வர டைப் 2 நீரிழிவு கட்டுக்குள் வரும்.

வேப்பிலையில் ஆன்டி . இன்ஃபிளமேட்டரி பண்புகள் அதிகமாக இருக்கின்றன.

இந்த வேப்பிலை ஜூஸை குடிப்பதன் மூலம் அதிலுள்ள ஹீலிங் பண்புகளால் சருமம் மற்றும் உடலின் உட்புறத்தில் ஏற்படும் காயங்கள், புண்கள் ஆகியவை வேகமாக ஆறும்.

வெளிக்காயங்களுக்கு வேப்பிலைகளை மஞ்சள் சேர்த்து அரைத்து வெளிப்பூச்சாக பூச வேகமாக புண்கள் ஆறும்.

அஜீரணக் கோளாறுகளால் தான் குடலில் கெட்ட பாக்டீரியாக்கள் உற்பத்தியாதல், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் உண்டாகின்றன.

வேப்பிலையை ஜூஸாக எடுத்துக் கொள்ளும் போது அஜீரணக் கோளாறுகள் நீங்கி மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகள் தீரும்.

சருமப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் மிகச்சிறந்த மூலிகையாக நாம் வேப்பிலையை சொல்லலாம். சருமப் பிரச்சினைகளுக்கு வெளிப்ஊச்சாகவும் இதை பயன்படுத்தலாம்.

உள்ளுக்குள் ஜூஸாகவும் இலையாகவோ சாப்பிடும்போது சருமத்திலுள்ள மாசுக்கள் வெளியேறுவதோடு பருக்கள், சரும வீக்கங்கள் ஆகியவற்றைக் குறைக்கச் செய்யும். குறிப்பாக பருக்கள் வந்த தழும்புகள், கரும்புள்ளிகள் ஆகியவற்றைப் போக்க வேப்பிலை மிகச்சிறந்த மருந்து.

உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு இரண்டு வகையான அழுத்தங்கள் காரணமாக இருக்கின்றன ஒன்று மன ரீதியான அழுத்தம். மற்றொன்று உடலில் ஏற்படுகின்ற ஆக்சிஜனேற்ற அழுத்தம்.

Trending News

Latest News

You May Like