1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? வெயிலில் சென்று வந்து ஐஸ் வாட்டர் குடிக்காதீங்க... குடித்தால்...

1

எப்போதாவது ஐஸ்-கோல்டு வாட்டரை குடிப்பது வேறு வெயிலுக்காக தினமும் குடிப்பது சிறந்த விஷயம் அல்ல என பலர் நம்புகிறார்கள். கோடைகாலம் வந்துள்ள நிலையில் வெயில் கொடுமையிலிருந்து சிறிது இளைப்பாற குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ் வாட்டர் குடிக்கும் பழக்கம் பலரிடமும் உள்ளது. 

நிபுணர்களின் கூற்றுப்படி, நீரேற்றமாக இருக்க குறைந்தபட்சம் 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். அதேசமயம், சரியான வெப்பநிலையில் தண்ணீர் குடிப்பதும் முக்கியம், ஏனெனில் அது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கத்தை தணிக்க, குளிர்ந்த நீர் சிறந்தது என்று நம்பப்படுகிறது, இது வெப்பத்திலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது, ஆனால் அதே நேரத்தில் உடலுக்கு நிறைய சேதத்தை ஏற்படுத்துகிறது.

பொதுவாக நம் உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். நாம் குளிர்ந்த நீரை அருந்தும் நேரத்தில், இந்த வெப்பநிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் உடல் ஆற்றலை வெளியேற்றும் நோக்கில் இயங்குகிறது. சுருக்கமாக சொன்னால் குளிர்ந்த நீர் உடலில் சமநிலையின்மையை ஏற்படுத்தும் மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்கும். ஐஸ் வாட்டர் குடிப்பதை தவிர்க்க மற்றொரு காரணம் குறிப்பாக சாப்பிடும் போது அல்லது சாப்பிட்ட பிறகு, எரிச்சல், தொண்டை புண் மற்றும் மூக்கடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

ஆயுர்வேதத்தில், குளிர்ந்த நீர் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக குளிர்சாதனப்பெட்டியில் இருந்து குளிர்ந்த நீரை எப்போதும் தவிர்க்க வேண்டும். வெயிலில் இருந்து வந்த பிறகு, உடற்பயிற்சி செய்த பிறகு அல்லது சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடிப்பது உடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.

உணவு சாப்பிட்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதய, சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உண வில் உள்ள எண்ணெய் துகள்கள், கொழுப்பு களில் இந்த குளிர்ந்த தண்ணீரால் அவை கெட்டியாகி ரத்த நாளங்களில் படிய வாய்ப்புள்ளது.தெர்டர்ந்து ஐஸ் வாட்டரை குடிப்பது புற்றுநோய்க்கும் வழி வகுக்கும். குளிர்ந்த தண்ணீரால் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

செரிமானத்தை மோசமாக பாதிக்கிறது 
ஆயுர்வேதத்தின் படி குளிர்ந்த நீர் அல்லது பானங்களை உட்கொள்வது அக்னி எனப்படும் செரிமான நெருப்பை பலவீனப்படுத்தும் மற்றும் செரிமான செயல்முறையைத் தடுக்கும் என்று நம்பப்படுகிறது. ஆயுர்வேதத்தின்படி, செரிமானம் என்பது வாயிலிருந்து தொடங்கி குடலில் முடிவடையும் வெப்பம் தேவைப்படும் தொடர்ச்சியான செயல்முறைகளை உள்ளடக்கியது. மேலும், குளிர்ந்த நீர் இரத்த நாளங்களை சுருக்கி, செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இதயத் துடிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் 
ஐஸ் வாட்டரை உட்கொள்வது உங்கள் உடலின் இதயத் துடிப்பைக் குறைக்கும். ஆய்வுகளின் படி, குளிர்சாதனப்பெட்டியில் இருந்து அதிக ஜில்லென்று இருக்கும் நீரை குடிப்பதன் மூலம் வாகஸ் நரம்பு தூண்டப்படுகிறது. உடலின் தன்னிச்சையான செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வேலையை நரம்புகள் செய்கின்றன. குறைந்த வெப்பநிலை நீரின் விளைவு வாகஸ் நரம்பில் நேரடியாக உள்ளது, இதன் காரணமாக இதயத் துடிப்பு குறைகிறது.


தலைவலியை உண்டாக்கலாம் 
வெயிலில் வெளியே சென்று வந்த உடனேயே குளிர்ந்த நீரை குடிப்பது அனைவரின் வழக்கமாக இருக்கிறது. குளிர்ந்த நீரை குடிப்பது உங்கள் முதுகெலும்பில் உள்ள பல நரம்புகளை குளிர்விக்கும், இது மூளையை பாதிக்கிறது மற்றும் தலைவலிக்கு வழிவகுக்கிறது. இந்த நிலை சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரச்சனையை அதிகரிக்கும். 

எடையை அதிகரிக்கும் 
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குளிர்ந்த நீரைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரால், உடலில் இருக்கும் கொழுப்பை எரிப்பது கடினம். ஃப்ரிட்ஜ் தண்ணீரால் உடல் கொழுப்பு கெட்டியாகிறது, இதனால் கொழுப்பைக் குறைப்பதில் சிக்கல் ஏற்படுகிது மற்றும் எடை குறைவதை கடினமாக்குகிறது.

அல்வாவை எடுத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு அரைமணி நேரம் கழித்துப்பார்த்தால் அதிலிருந்த எண்ணெய் பசை காணாமல் போயிருக்கும். மேலும் கெட்டியாக மாறி இருக்கும். அதிலிருந்த எண்ணெய் ஆங்காங்கே படிந்து வெள்ளை நிறமாக இருக்கும்.

இது போன்றுதான் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும்போது உணவில் உள்ள எண்ணெய் துகள்களும், கொழுப்பும் கெட்டியாக மாறி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள். 

குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்றால், மண் பானையில் ஊற்றி வைத்து குடிக்கலாம் என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.அதுமட்டுமின்றி, நீர் சத்து நிறைந்த பழங்களும், காய்கறிகளையும் அதிகமாக சேர்த்துக்கொள்ளவேண்டும்.

வெயில் நேரத்தில் பிரிட்ஜ் வாட்டர், ஐஸ் போட்ட வாட்டரை குடிக்காதீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை செய்யுங்கள். ஐஸ் வாட்டரை தவிர்த்து உடல்நலத்தை பாதுகாப்போம் என்ற பிரச்சாரம் இப்போது பரவி வருகிறது.


 

Trending News

Latest News

You May Like