இது தெரியுமா ? வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 1 மணி நேரத்தில் என்ன நடக்கும் தெரியுமா ?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/7c4ebc2a1bd2a35346db2805a76ea776.jpg?width=836&height=470&resizemode=4)
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்கிறது வறுத்த பூண்டு.
வறுத்த 6 பூண்டு சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு இரைப்பையில் உணவு நன்கு செரிமானம் அடைய உதவுகிறது மற்றும் இது ஒரு சிறந்த உணவாக பயன்படுகிறது.
உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் கெட்ட நீர்மச்சத்து மற்றும் கொழுப்பு சத்தை வெளியேற்றுகிறது. கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்துக்கொள்கிறது.
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியாக்கள் இரத்த நாளன்களுக்குள் சென்று உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. பூண்டு மருத்துவக் குணத்தால் உடலின் சோர்வை நீக்குகிறது. மேலும் உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்கிறது.வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் எற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது.உடலில் உள்ள தமனிகளை சுத்தம் செய்து இதயநோய் வராமல் தடுத்து காத்துக் கொள்கிறது. பூண்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமாக இருக்கிறது.
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
6-7 மணிநேரத்தில்பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.
7-10 மணிநேரத்தில் இக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
10-24 மணிநேரத்தில்
முதல் 1 மணிநேரத்தில் ழுண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.
அவை:
* கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.
* தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
* இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
* உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
* உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
* எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
* அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.
* உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.