1. Home
  2. ஆரோக்கியம்

இது தெரியுமா ? 4 சொட்டு நல்லெண்ணை+ உங்கள் சிறுநீர் =

1

சிறுநீரில் நான்கு சொட்டுக்கள் நல்லெண்ணெய் விட்டு பார்த்தாலே போதும் நமக்கு என்ன மாதிரியான நோய்கள் இருக்கின்றன என்பது தெரிந்து விடும். அதை எப்படி சரி செய்ய வேண்டும். எப்படி கண்டுபிடிப்பது

பொதுவாக நம்முடைய உடலில் என்ன பிரச்சினை இருந்தாலும் ரத்தப் பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனையின் மூலமும் அதன் முடிவுகளை வைத்து மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் வைத்து நம்முடைய உடலின் நிலையைப் பற்றி தெரிந்து கொள்வோம். ஆனால் நம்முடைய சித்தர்கள் எந்த மருத்துவர்களின் துணையும் இல்லாமல் தங்களுடைய சிறுநீரை வைத்து தாங்களாகவே பரிசோதனை செய்து என்ன நோய் இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார்கள். அவர்கள் செய்யும் பரிசோதனை அவ்வளவு கடினமானதெல்லாம் கிடையாது. மிக எளிமையாக செய்யக்கூடிய பரிந்துரை தான். அந்த முறையை நாமும் எளிமையாக செய்ய முடியும்.

நம்முடைய உடலில் உண்டாகும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்று விஷயங்கள் தான் அடிப்படைக் காரணமாக அமைகின்றன. அதில் எந்த ஒன்று நம்முடைய உடலில் அதிகமாக இருக்கிறதோ அதைத் தெரிந்து கொண்டாலே போதும் அதை எளிமையாக நாம் குணப்படுத்திவிட முடியாது. அதைத் தான் சித்தர்கள் சிறுநீர் மூலம் எதில் அதிகமாக இருக்கிறது என்று தெரிந்து கொள்கிறார்கள். அதை வைத்து நோயையும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.

எப்படி செய்யலாம்?
 

காலைச் சிறுநீரை ஒரு கண்ணாடிக் கிளாசில் எடுத்து அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விட்டுவிட்டு உற்றுக்கவனியுங்கள்.

எண்ணெய்த்துளி பாம்புபோல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடலில் வாதம் மிகுந்துள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய், முத்து போல நின்றால் உங்களுக்கு கபநோய், எண்ணெய்த் துளி வேகமாக பரவினால் நோய் விரைவில் குணமாகும்.
எண்ணெய்த்துளி அப்படியே இருந்தால் நோய் குணமாக தாமதமாகும்.

எண்ணெய்த் துளி சிதறினாலோ அமிழ்ந்து விட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது.

Trending News

Latest News

You May Like