1. Home
  2. ஆரோக்கியம்

காளானில் நம் உடலுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா?

11

அசைவம் மற்றும் சைவம் என இரு வகையான உணவை உண்பவர்களுக்கும் காளான் மிகவும் பிடிக்கும். காளானின் சுவை மிகவும் நன்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.

வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் காளானில் உள்ளன. காளான் ஆரோக்கியத்திற்கு ஒரு சஞ்சீவியாக கருதப்படுவதற்கு இதுவே காரணம். அதன் பலன்களை அறியாதவர்கள், அதன் சுவைக்காக மட்டும் அதை உண்பதுண்டு. காளான் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.

இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 

நோய்களை விரட்டும்

காளான்களை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. இது ஒரு இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பியாக கருதப்படுகிறது. இது நுண்ணுயிர் மற்றும் பிற பூஞ்சை தொற்றுகளையும் குணப்படுத்துகிறது. இதில் உள்ள பண்புகளால், உடலின் செல்களை சீர் செய்கிறது.

இதயத்தை கவனித்துக்கொள்கிறது

காளான்களால் உங்கள் இதயம் ஆரோக்கியமாகிறது. இதில் அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல வகையான என்சைம்கள் உள்ளன. இது கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருந்தால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் வெகுவாகக் குறையும்.

சர்க்கரை நோய்

நீரிழிவு நோயாளிகளுக்கும் காளான் மிகவும் நன்மை பயக்கும். காளான்களில் சர்க்கரை இல்லை. உடலுக்கு இன்சுலினை வழங்கவும் இது உதவுகிறது.

வயிற்றுப் பிரச்சனைக்கு நிவாரணம் தரும்

காளானை உட்கொள்வதால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற வயிற்று பிரச்சனைகள் வராமல் இருக்கும். ஃபோலிக் அமிலம் காரணமாக, இது உடலில் இரத்தத்தை உருவாக்கவும் உதவுகிறது. 

வலுவான எலும்புகளுக்கு

காளான்களை உட்கொள்வதால் எலும்புகள் வலுவடையும். ஏனெனில் இதில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது.

ஆண்டி-ஏஜிங்

காளான் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். இதில் ஆண்டி ஏஜிங் குணங்கள் அதிகமாக உள்ளதால், இது உடலில் வயதாகும் பண்புகளை நிறுத்தி, உங்கள் உடலை எப்போதும் திடமாகவும் பலமாகவும் வைத்திருக்கிறது. 

Trending News

Latest News

You May Like