1. Home
  2. ஆரோக்கியம்

நரம்பு மண்டலத்தை சீராக்க , பத்மாசனம் யோகா செய்யுங்கள் !!

நரம்பு மண்டலத்தை சீராக்க , பத்மாசனம் யோகா செய்யுங்கள் !!


யோகாசனத்தில் பல ஆயிரம் ஆசனங்கள் உள்ளது. இதில் முதன்மையானதும், எளிமையானதுமாக பத்மாசனத்தைச் சொல்கிறார்கள். பத்மம் என்றால் தாமரை. தாமரை மலரைப் போன்று பாதங்கள் விரிந்து காணப்படுவதால் இந்த ஆசனத்துக்கு பத்மாசனம் என்று பெயர்.

நரம்பு மண்டலத்தை சீராக்க , பத்மாசனம் யோகா செய்யுங்கள் !!

நல்ல காற்றோட்டமான இடத்தைத் தேர்வு செய்துக் கொள்ள வேண்டும். தரையில் தரை விரிப்பில் அமர்ந்து கொண்டு வலது பாதம் இடது தொடையின் மேலும், இடது பாதம் வலது தொடையின் மேலும் வைத்து பொருத்தி அமைத்துக் கொள்ள வேண்டும்.

எந்த திசையை நோக்கி  அமர்ந்து செய்யலாம் என்றாலும் கிழக்கு அல்லது வடக்கு திசையில் அமர்ந்து செய்வது நல்லது. முதுகு வளையாமல் நேராக அமர வேண்டும். கைகள் இரண்டும் சின் முத்திரையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதாவது கட்டைவிரலின் நுனியும், ஆட்காட்டி விரலின் நுனியும் தொட்டு கொண்டு இருக்குமாறு அமைய வேண்டும். மற்ற மூன்று விரல்களையும் விரிந்த நிலையில் முழங்கால் முட்டி மேல் கைகளை வைக்க வேண்டும்.

நமது எண்ணங்களை கட்டுப்படுத்தவே இந்த சின்முத்திரை. இப்படி அமர்ந்த பிறகு கண்களை மூடி இஷ்டதெய்வத்தை நோக்கி பிரார்த்தனை செய்யலாம். நிறைய பேருக்கு வலது காலை தூக்கி இடது தொடையில் போட்ட பின்னர் இடது காலை வலது தொடையில் வைக்க சிரமமாக இருக்கும்.

கவலைப்படாமல் தொடர் முயற்சியில், சில தின பயிற்சியிலேயே சுலபமாக செய்ய முடியும். இந்த ஆசனத்திற்கு கால வரையறை எல்லாம் கிடையாது. கால்கள் வலியெடுக்க ஆரம்பிக்கும் வரை செய்யலாம்.

இந்த ஆசனத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏன் கர்ப்பிணிப் பெண்கள் கூட செய்யலாம். நம்முடைய நரம்பு மண்டலத்தை சீராக்குகிறது. உடலில் உள்ள நச்சு வாயுவான கார்பன்  டை ஆக்ஸைடை வெளியேற்றி  மூச்சு சீராக இயங்குவதற்கு உதவி செய்கிறது.

கால் எலும்புகளை பலப்படுத்துகிறது .நேராக அமரும் போது முதுகெலும்பு தொடர் வழியே மூளைக்கு செல்லும் நரம்புகளை சீராக்குகிறது. நாள்தோறும் செய்வதால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது. 

Newstm.in

Trending News

Latest News

You May Like