1. Home
  2. ஆரோக்கியம்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடலை பருப்பு சாப்பிடலாமா ? கூடாதா ?

1

கடலை பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

கடலை பருப்பில் உள்ள சத்துக்கள்

கடலை பருப்பில் புரதம், தாது உப்புக்கள், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் C ஆகியவை காணப்படுகின்றன. இதில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இதில் கொழுப்பு சத்து குறைவாக உள்ளது.

கடலை பருப்பு நன்மைகள்

உடல் வளர்ச்சிக்கு சிறந்தது – உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச்சத்து ஆகும். கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.

நீரிழிவு நோய்க்கு நல்லது – நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுலபத்தில் உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு கடலை பருப்பு கலந்து உணவுகள் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகள் கடலை பருப்பு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் பலத்தை தரும்.

இதய ஆரோக்கியம் மேம்படும் – இதயம் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடலை பருப்பில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்தளவு கொழுப்புச்சத்து ஆகியவை இதயநலத்தை மேம்படுத்துகிறது. பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது. நார்ச்சத்து கொழுப்பு சேராமல் தடுக்கிறது. எனவே கடலை பருப்பை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது. கடலை பருப்பில் ‘லேக்யுமெஸ்’ இருப்பதால், இதய நோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிகக் குறைவு. மேலும் இதில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள், தாது பொருட்கள் மற்றும் நார்ச்சத்து, உடல் ஆரோக்கியத்தையும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.

கொழுப்பை குறைக்கும் – தினமும் கடலை பருப்பை இரவு முழுவதும் ஊற வைத்து, சிறிது முளை கட்டியதும், வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவு குறையும். இதனால் உடல் ஆரோக்கியம் பெறும்.ரத்த அழுத்தத்தை சீர் செய்யும் – கடலை பருப்பில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது குறைந்த ரத்த அழுத்தத்தை சரி செய்ய பயன்படுகின்றது. இதனால் இதயமும் உறுதி அடைகின்றது.

புற்று நோயை தடுக்கும்- குடல் புற்றுநோயை தடுக்கும் தன்மை கடலை பருப்பிற்கு உள்ளது. இதில் இருக்கும் ‘சபோனின்கள் மற்றும் லிக்னான்கள்’ எதிர்ப்பு ஸ்டார்ச் குறிப்பாக குடலில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.ரத்த சோகையை போக்கும் – ரத்த சோகை ஏற்பட ஒரு முக்கிய காரணம் இரும்பு சத்து குறைபாடு ஆகும். கடலை பருப்பில் நிறைந்திருக்கும் இரும்பு சத்து, உடலுக்குத் தேவையான ஹீமோக்ளோபின் பெற உதவுகின்றது. இதனால் ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கலாம்.

செரிமானத்திற்கு நல்லது – நாம் உண்ணும் உணவை நன்கு செரிமானம் செய்யும் சக்தி நமக்கு இருக்க வேண்டும். கடலை பருப்பில் எளிதில் செரிமானமாகக்கூடிய புரத சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே வயிற்றில் இருக்கும் ஜீரண அமிலங்களின் சுரப்பை தூண்டி சாப்பிடும் உணவு எளிதில் செரிமானமாக செய்கிறது. வயிற்றில் புண்கள், மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

உடல் எடையை குறைக்கும் – கடலை பருப்பில் நிறைந்திருக்கும் நார் சத்து மற்றும் புரதம், உடல் எடை குறைய பெரிதும் உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் கலோரிகளும், உடலை சீராகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றது. அதனால், கடலை பருப்பு உடல் எடையை குறைக்க ஒரு நல்ல பொருளாக கருதப்படுகின்றது.வலிமையான எலும்புகள் – கால்சியம், மக்னீசியம் ஆகிய இரண்டு தாதுகளும் நரம்புகள் மட்டுமன்றி எலும்புகளின் வளர்ச்சிக்கும் தேவையானதாக இருக்கிறது. எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு இவையிரண்டும் அவசியம். கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற சத்துகள் கடலை பருப்பில் உள்ளதால் இதை சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலிமை பெறும்.

தலைமுடி – தலைமுடி நமக்கு அழகிய தோற்றத்தை தருவதோடு மட்டுமல்லாமல், நமது தலையை அதிக வெப்பம் மற்றும் குளிரிலிருந்து காக்கும் கவசமாகவும் இருக்கிறது. தலைமுடி உதிராமல் இருப்பதற்கு நாம் உண்ணும் உணவில் புரத சத்து அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். கடலை பருப்பை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடலில் புரத சத்து சேர்ந்து தலைமுடி உதிராமல் பாதுகாக்கும்.நரம்புகள் – கடலை பருப்பில் மக்னீசியம், கால்சியம் போன்ற சத்துகள் அதிகமுள்ளது.

மக்னீசியம் எலும்புகளின் மேற்பரப்பில் இருப்பதால், அவை கால்சியம் நரம்பு செல்களுக்குள் நுழைவதைத் தடுப்பதுடன், ரத்த நாளங்கள் மற்றும் தசைகளில் இருக்கும் இறுக்கத்தை தளர்த்துகிறது. நரம்பு தளர்ச்சி மற்றும் வாத நோய்கள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.மூளையின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் – இதில் இருக்கும் மக்னீசியம் மற்றும் லேக்யுமேஸ் சிறப்பாக செயல்பட உதவுகின்றது. இந்த தாது பொருட்கள் ரத்த நாளங்களை தளரச் செய்து, மூளைக்கு ரத்த ஓட்டம் சீராக செல்ல உதவுகின்றது. மேலும் இதில் இருக்கும் விட்டமின் B சத்து மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் – எத்தகைய நோய்களும் நம்மை அணுகாமல் இருக்க நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். கடலை பருப்பில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர தாது சத்துகள் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது. இது ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஆன்டிஆக்ஸிஜன்டாக செயல்பட்டு உடல்நலத்தை மேம்படுத்துவதோடு நோய் எதிர்பாற்றலையும் அதிகரிக்கிறது.

வீக்கத்தை குறைக்கும் – கடலை பருப்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இதனால் இது வீக்கத்தை குறைக்க உதவுகின்றது. கடலை பருப்பில் அதிக அளவு செலினியம், பொட்டாசியம், வைட்டமின் A மற்றும் வைட்டமின் B6 நிறைந்துள்ளது. இது அழற்சி எதிர்ப்பு பண்புகளை அதிகப்படுத்தும்.சக்தியை அதிகப்படுத்தும் – கடலை பருப்பில் அதிக அளவு புரத சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் இருக்கும் அமினோ அமிலம் ‘மேத்யோனைன்’ என்னும் அணுக்களின் செயல் திறன்களை அதிகப்படுத்தி உடலின் சக்தியை அதிகரிக்கின்றது.

மயக்கத்தை போக்கும் – கடலை பருப்பில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக செய்ய செய்யும். சர்க்கரை மெதுவாக ஜீரண குழாயில் இருந்து ரத்த நானங்களுக்கு நகர உதவும். இதனால் அதிக சர்க்கரை உற்பத்தி ஆவதும் தடுக்கப்படும். இந்த செயல், உடலுக்குத் தேவையான சத்துக்களை சீராக பெற்று, மயக்கம் மற்றும் தலை சுற்றல் போன்ற உபாதைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றது.

சருமம் – கடலை பருப்பு அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியும் சுலபத்தில் ஏற்படாது. எள்ளில் இருக்கும் எண்ணெய்கள் உடலின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்துகிறது. மேலும் தோலில் ஏற்பட்டிருக்கும் சொறி, சிரங்கு, படை பாதிப்புகளை கூடிய விரைவில் நீக்கும் தன்மை எள்ளுக்கு உண்டு. தோலில் சுருக்கங்கள் ஏற்படும் தன்மையும் நீங்கும். கடலை பருப்பு நல்ல சருமத்தைப் பெற ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இதில் சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் போக்க உதவுகின்றது. சருமத்தில் இருக்கும் கறைகள், பருக்கள் மற்றும் எண்ணை பிசுக்கை போக்கும். நல்ல நிறத்தை தரும்.

பக்க விளைவுகள்

*ஒவ்வாமை
*அரிப்பு
*படை நோய்
*சுவாச நோய்.
*இரைப்பை குடல் அழற்சி
*வீக்கம்
அதைப் பயன்படுத்தும்போது இதுபோன்ற எதிர்வினைகள் ஏதேனும் இருப்பதை நீங்கள் கவனித்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.

Trending News

Latest News

You May Like