1. Home
  2. ஆரோக்கியம்

தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள் 


வயிற்றில் பாதுகாப்பாய், தாயிடம் இருந்து சுத்தமான சத்துக்களை தொப்புள் வழியாக மட்டுமே உட்கொள்ளும் குழந்தை, பூமிக்கு வந்தவுடன் முதலில் வாய் வழியாக உட்கொள்ளும் உணவு தாய் பால். குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு சுரக்கும் மஞ்சள் நிறம் கலந்த பாலை மட்டுமே கொடுக்க வேண்டும். மாறாக தேன், சர்க்கரை நீர் போன்றவற்றை கொடுக்கக் கூடாது. ஏனெனில், முதலில் சுரக்கும் சீம்பாலில் உலகை முதல் முறை பார்க்கும் பச்சிளம் குழந்தைக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்திகள் நிறைந்திருக்கும்.

தாய் பால் கொடுக்கிறேன் என்கிற பெயரில் சிலர், பாட்டிலில் தாய்ப்பாலை எடுத்து வைத்து விட்டு பணிக்கோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சென்று விடுகின்றனர். உண்மையில் தாய்ப்பாலை நேரடியாக தாயின் மார்பில் இருந்து தான் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

தாயின் மார்பில் குழந்தை பால் அருந்தும் பொழுது குழந்தையின் வாயிலிருந்து சுரக்கும் உமிழ் நீரின் மூலம் குழந்தைக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா அல்லது தேவையான சத்துக்கள் என்னென்ன என்பதை உணர்ந்து தாயின் உடல் இயற்கையாகவே தேவையான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.இந்த சத்துக்களை தாய்ப்பாலின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும்.

தாய் பால் கொடுப்பதால் குழந்தை வயிறு சம்மந்தமான உபாதைகள் மற்றும் மலசிக்கல் போன்றவற்றை சந்திக்க நேரிடாது.

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட நல்ல புத்தி கூர்மையுடன் திகழ்வதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்ற.

இன்றைய கால கட்டத்தில் அநேக குழந்தைகளை பாதிக்கும் பிரச்னை உடல் பருமன். நீண்ட நாட்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கு ஆரம்பத்திலேயே உடல் பருமன் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் ஆஸ்துமா, நுரையீரல் சம்மந்தமான நோய்களால் பாதிக்கப்படுவதில்லை.

பிறந்த பிறகு ஏற்படும் காது தொடர்பான கோளாறுகளை தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பெரும்பாலும் சந்திப்பதில்லையாம்.

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் லூக்கேமியா போன்ற கேன்சர் வியாதிகள் தாயபல் அருந்தும் குழந்தைகளை அண்டுவதில்லை .

குழந்தைகளுக்கு வரும் நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற மோசமான பிரச்னைகளிருந்து காப்பாற்ற ஒரே வழி தாய்ப்பால் கொடுப்பதுதான்.

குழந்தை பிறந்த பிறகு நீண்ட ஆயுளுடனும் ,ஆரோக்கியத்துடனும் இருக்க வேண்டும் என எண்ணும் தாய்மார்கள் எந்த சூழ்நிலையிலும் 6 மாத காலம் வரை கட்டாயம் தாய்ப்பால் கொடுப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

"தாய்ப்பால் கொடுப்பதால் தாய் பெறும் நன்மைகள்!"

newstm.in

newstm.in

Trending News

Latest News

You May Like