1. Home
  2. ஆரோக்கியம்

நாம் தினமும் உபயோகிக்கும் பெருங்காயத்தால் தலைவலி இருமல் குறைக்கும் திறன் உள்ளது தெரியுமா ?


நம்மில் சிலர் பெருங்காயத்தின் வாசனைப் பிடிக்காமல் சமையலில் பயன்படுத்த மாட்டார்கள் . இது சமையலில் வெறும் வாசனைக்காக மட்டுமே சேர்க்கப்படுகிற பொருள் கிடையாது. இதன் முக்கியத்துவம் உணர்ந்தால் தவறாமல் சமையலில் பயன்படுத்துவார்கள்

  • பெருங்காயத்துடன் நீர் சேர்த்து அரைத்து குழந்தைகளின் நெஞ்சில் தடவினால் கக்குவான் இருமல் குணமாகும்.
  • பெருங்காயம் கிராம்பு இரண்டையும் போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் வாய் கொப்பளித்தால் பல் வலி குணமாகும்.
  • பெருங்காயத்தை பொரித்து பூண்டு மற்றும் பனை வெல்லத்தோடு சேர்த்து தினமும் காலையில் சாப்பிட்டால் பிரசவத்திற்கு பிறகு கர்ப்ப பையில் தங்கியிருக்கும் அழுக்கு வெளியேறும்.
  • பெருங்காயம் ஒருபங்கு வெந்தயம் பத்து பங்கு எடுத்து மோரில் கலந்து குடித்தால் கடுமையான வயிற்றுவலி உடனே குணமாகும்.
  • பெருங்காயம் , மிளகு இரண்டையும் தலா அரை கிராம் எடுத்து வெந்நீரில் போட்டுக் குடித்தால் தலைவலி குணமாகும்.
  • பெருங்காயத்துடன் கோழி முட்டையின் மஞ்சள் கருவை கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் தீரும்.
  • பெருங்காயத்தை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறிய பிறகு அந்த எண்ணெயில் இரண்டு துளியை காதில் விட்டால் காது வலி குணமாகும்.
  • பெருங்காயம் , உளுந்து இரண்டையும் சம அளவு எடுத்து பொடியாக்கி நெருப்பில் போட வேண்டும் . அந்தப் புகையை முகர்ந்தால் இரைப்பை நோய் , வயிற்று உப்புசம் ஆகியவை தீரும்.

Trending News

Latest News

You May Like