1. Home
  2. ஆரோக்கியம்

வெங்காயம் நறுக்கும் போது கண்ணீர் வராமல் இருக்க எளிமையான 8 வழிகள்..!

1

நம் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கும் சிறந்த உணவுப் பொருள் வெங்காயம். பல ஆண்கள் காதல் கவிதையில் வெங்காயத்தை பெண்களின் மனதோடு உவமையாக பயன்படுத்தி எழுதுவதை கூட நாம் காண முடியும்.இந்த 8 டிப்ஸ்-ஐ பின்பற்றினால் இனிமேல் நீங்கள் கண்ணீர் வராமலேயே வெங்காயம் நறுக்கலாம்.

டிப்ஸ் #1
ஷார்ப்பான கத்தி கொண்டு வெங்காயம் நறுக்குங்கள். வெங்காயத்தில் உள்ள என்சைம் செல்கள் உடைவதால் தான் கண்ணீர் வருகிறது.ஷார்ப்பான கத்தி கொண்டு வெங்காயம் வெட்டுவதால் இதை தடுக்க முடியும்.

டிப்ஸ் #2
நீரில் வைத்து வெங்காயத்தை வெட்டினால் கண்ணீர் வராது. இதற்கு பின் சிறிது நேரம் நீங்கள் வெங்காயத்தை உளற வைத்தால் போதுமானது.

டிப்ஸ் #3
வெங்காயத்தை வெட்டுவதற்கு முன்னர், அதை 10 - 15 நிமிடங்கள் ஃப்ரீசரில் வைத்து விடுங்கள். இதனால் என்சைம்கள் உடையது. மேலும், இதனால் சுவையும் எந்த பாதிப்பும் அடையாது.

டிப்ஸ் #4
வெட்டுவதற்கு முன்னர் நீரில் முக்கி எடுத்துவிட்டு வெங்காயம் வெட்டுங்கள். இதனால் சற்று சுவையில் மாற்றம் ஏற்படலாம்.

டிப்ஸ் #5
வெங்காயம் வெட்டும் போது அருகே ஆவி வெளிப்படும் அளவில் சுடுநீர் வைத்து நறுக்கினால் கண்ணீர் வராது.

டிப்ஸ் #6
இறுக்கமான கண்ணாடி அணிந்துக் கொண்டு வெங்காயம் வெட்டுவதால் கண்ணீர் வராமல் தடுக்க முடியும்.

டிப்ஸ் #7
வெங்காயம் நறுக்கும் போது விசில் அடித்துக் கொண்டே நறுக்கினால் கண்ணீர் வராதாம். விசில் அடிக்கும் போது வெளிவரும் காற்று தான் கண்ணீர் வருவதை தடுக்க உதவுகிறது.

டிப்ஸ் #8
வெங்காயம் நறுக்கும் போது அடுகே சிறிய மெழுகுவர்த்தியை பற்ற வைத்து நறுக்கினால் கண்ணீர் வராது. மெழுகில் இருந்து வெளிவரும் கேஸ் கண்ணீர் வருவதை தடுக்கிறது. 

Trending News

Latest News

You May Like