இன்று 71,000 பணி நியமனக் கடிதங்களை வழங்கவுள்ளார் பிரதமர் மோடி..!!

நாடு முழுவதும் ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் சுமார் 71 ஆயிரம் பணி நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி வழங்கும் நிகழ்ச்சி இன்று 45 இடங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி மூலம் உரையாற்ற உள்ளார். இத்திட்டத்தை ஆதரிக்கும் மத்திய அரசுத் துறைகள் மற்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.
நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய ஆட்கள், கிராமின் தக் சேவகர்கள், பணியிடங்களுக்கு ஆய்வாளர், வணிக மற்றும் டிக்கெட் எழுத்தர், ஜூனியர் கிளார்க் கம் தட்டெழுத்தாளர், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளார்க், டிராக் மெயின்டெய்னர், உதவி பிரிவு அதிகாரி, கீழ் பிரிவு எழுத்தர், துணை பிரிவு அதிகாரி மற்றும் வரி உதவியாளர்கள் உள்ளிட்ட பதவிகளில் சேர உள்ளனர்.