1. Home
  2. ஆரோக்கியம்

மாதவிடாய் ஏன் பெண்களுக்கு மட்டும் ஏற்படுகிறது ?


பெண்களுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்களுள் ஒன்று தான் இந்த மாதவிடாய் ஆகும். இதனை பற்றி இந்த பதிவில் காண்போம் .

இந்த மாதவிடாய் ஏன் பெண்களுக்கு மட்டும் ஏற்படுகிறது என்று கேட்டால் மனித இனவிருக்தி என்று கூறலாம் இதில் முக்கிய பங்கு வகிப்பது பெண்கள் என்றே கூறலாம். பெண்கள் குழந்தையை பெற்றெடுப்பதால் அவர்கள் கருப்பையை இயற்கையாக பெற்றிருப்பதால் பெண்கள் 12 வயதில் பருவநிலை அடைந்தவுடன் அவர்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் என்ற ஒன்று பெண்களுக்கு ஏற்படும். இதன் காரணமாக கருவுறுதல் நடைபெறும் வரை பெண்களுக்கு மாதவிடாய் வரும்.


மாதவிடாய் ஏன் பெண்களுக்கு மட்டும் ஏற்படுகிறது ?


இந்த மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அதிகஅளவு வயிற்றில் வலி ஏற்படும் ஒவ்வொரு பெண்களுக்கும் வெவ்வேறு விதமாக ஏற்படும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு சுத்தியலை வயிற்றில் அடிப்பது போல் இருக்கும். பெண்களுக்கு ஏற்படும் இந்த மாதவிடாய் காலங்களில் நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஏற்படும் இரத்த இழப்பு ஏற்படும் இது 4 நாட்களுக்கு ஒரு கப் அளவிற்கு இரத்த இழப்பு ஏற்படுமாம்.

பெண்களுக்கு இந்த காலங்களில் அவர்களுக்கு உடலில் தனி விதமான வாசனையும் அவர்களின் குரலில் மாற்றமும் ஏற்படும். உடலில் மட்டுமல்ல மனதளவிலும் மிகவும் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். சாதராண நாட்களைவிட அந்த நாட்களில் பெண்களுக்கு கோவம் மற்றும் மனசஞ்சலம் அதிகமாக இருக்கும்.பெண்களின் மாதவிடாய் ஏற்படும் காலமும் நிலவில் ஏற்படும் பௌர்ணமி மற்றும் அமாவாசை காலமும் ஒத்திருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. அதாவது பெண்களின் உடல் நிலாவை ஒத்திருப்பதாக கூறப்படுகிறது.


மாதவிடாய் ஏன் பெண்களுக்கு மட்டும் ஏற்படுகிறது ?


பல ஆண்டுகளுக்ககு முன்பு பெண்களுக்கு மாதவிடாய் என்பது 16,17 வயதில் ஏற்படும் ஆனால் தற்போது பெண்களுக்கு 11,12 வயதில் ஏற்படுகிறது இதற்கு காரணம் நாம் வாழ்க்கையில் சாப்பிடும் பல உணவுமுறைகள் ஆகும். மற்றொரு காரணம் பெண்களுக்கு ஏற்படும் அதிக மன உளைச்சல் ஆகும்.

ஒவ்வொரு பெண்ணும் மாதவிடாய் காலத்திற்காக 7 ஆண்டுகள் செலவிடுகிறார்கள் 2000 நாட்களுக்கும் அதிகமான ஒன்றாகும்.

Trending News

Latest News

You May Like