ஏற்றம் கண்ட பங்குச்சந்தைகள்...சென்செக்ஸ் 266 புள்ளிகள் உயர்வு!
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 35,385.52 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 266.80 புள்ளிகள் அதிகரித்து 35,645.40 என்ற புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தக நேர முடிவில், 35,667.31 என்ற அதிகபட்ச புள்ளிகளைத் தொட்டது.
அதேபோன்று தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 10,715 என்ற புள்ளிகளில் தொடங்கி, இறுதியில் 70 புள்ளிகள் உயர்ந்து 10,769.90ல் வர்த்தகமானது.
மேலும், இன்றைய வர்த்தக நிலவரப்படி, பஜாஜ் ஆட்டோ, மாருதி, கோல் இந்தியா, எச்டிஎப்சி, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தும், தேசிய மின் அனல் மின் கழகம், ஓஎன்ஜிசி, வேதாந்தா, அதானி போர்ட்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பங்குகள் விலை குறைந்தும் காணப்பட்டன.
newstm.in